அன்னூர் : ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி விழா அன்னூரில் நேற்று நடந்தது.
அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், ஸ்ரீ ராமானுஜரின் 1006வது ஜெயந்தி விழா நேற்று நடந்தது. காலை 6:30 மணிக்கு விஸ்வக்சேனா ஆராதனை, கணபதி ஹோமம், திருமஞ்சனம் நடந்தது. இதையடுத்து ராமானுஜருக்கு, அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்தது. உற்சவர் ராமானுஜர் கோவில் உட்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலித்தார். ராமானுஜர் குறித்த பாடல்கள் பாடப்பட்டன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.