Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோத்தகிரி மாரியம்மன் கோவில் ... நெல்லியாளம் மாரியம்மன் சித்திரை திருவிழா : அம்மனுக்கு திருக்கல்யாணம் நெல்லியாளம் மாரியம்மன் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரம்பூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பெரம்பூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

26 ஏப்
2023
01:04

மயிலாடுதுறை: பெரம்பூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் கிராமத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. சோழர்கால கட்டிடக்கலையில்  அமைக்கப்பட்டுள்ள இந்த கோவிலில்  எழுந்தருளியுள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியை தக்ஷனுடைய யாகத்தில் சாபம் அடைந்த பிரம்மதேவன் வழிபாடு செய்து சாப விமோசனம் பெற்றதுடன், சூரபத்மன் மயில் உருவாய் பெற்ற பின் ஆறு திருமுகங்களைக் கொண்ட இம்முருக பெருமானை வணங்கி ஞான உபதேசம் பெற்று மயில் வாகனமாக இருக்கின்ற ஸ்தலமாக இது விளங்கி வருகிறது.  இத்தலத்தில் தக்ஷிணாமூர்த்தி தக்ஷண கோஷ்டத்தில் மயில் வாகனத்தில் அமர்ந்து ஞான குகனாக அருள் பாலிக்கிறார். இது  வேறு எங்கும் இல்லாத தனி சிறப்பாகும். ஆறுமுகங்கள், பன்னிரு கரங்களுடன், கடம்ப மாலை, மதங்க அணிகலன்களுடன்  முருக பெருமான் காட்சியளிக்கும் புண்ணிய தலமான இக்கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 23ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு இன்று காலை ஆறாம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்தன. தொடர்ந்து பூரணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. இதனை அடுத்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. தொடர்ந்து 9:30 மணிக்கு சிவாச்சாரியார்கள் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, ஆனந்தவல்லி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகள் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். கும்பாபிஷேகத்தில் செயல் அலுவலர் முருகேசன் ஆய்வாளர் கண்ணதாசன், ஊராட்சி மன்ற தலைவர் சந்தானம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை   குலதெய்வக்காரர்கள், கிராமவாசிகள் செய்திருந்தனர். பெரம்பூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத கடை ஞாயிறு விழா இன்று ... மேலும்
 
temple news
 – நமது நிருபர் –: ‘‘சத்தியம் என்பது எப்போதுமே ஒன்று தான். எந்நிலையிலும் அது மாறாமல் ... மேலும்
 
temple news
 வில்லிவாக்கம்: ஹிந்து ஆன்மிக சேவா ஸ்மிதி டிரஸ்ட் சார்பில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக நடைபெற்று ... மேலும்
 
temple news
ஊட்டி: ஊட்டி காந்தள் ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பைரவி திவ்ய பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar