Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகாசி வளர்பிறை சதுர்த்தி; தங்கக் ... 62 கிராமத்தினர் கலந்து கொண்ட புரவி எடுப்பு திருவிழா 62 கிராமத்தினர் கலந்து கொண்ட புரவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் திருட்டு, 63 நாயன்மார் சிலைகள் உடைப்பு: பக்தர்கள் கொதிப்பு
எழுத்தின் அளவு:
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் திருட்டு, 63 நாயன்மார் சிலைகள் உடைப்பு: பக்தர்கள் கொதிப்பு

பதிவு செய்த நாள்

23 மே
2023
12:05

அவிநாசி: திருப்பூர், அவிநாசியில் உள்ள லிங்கேஸ்வரர் கோவிலில் நேற்றிரவு (மே 22) திருட்டு முயற்சி நடைபெற்றதுடன், அங்கிருந்த 63 நாயன்மார்களின் சிலைகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால் பக்தர்கள் ஆவேசமடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் மிகவும் தொன்மை வாய்ந்த கோவிலாகும். காசியில் வாசி அவிநாசி என்பார்கள். காசியில் போய் வழிபட்டால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அது இத்தல இறைவனான அவிநாசி லிங்கேஸ்வரரை வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தலத்தில் 32 கணபதிகள் அருள்பாலிக்கின்றனர். கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மையான ஆலயமாகவும், முதலை விழுங்கிய பாலகனை காப்பற்றுவதற்காக சுந்தரர் பதிகம் பாடி அதன் பின் அந்த சிறுவனை மீட்டதாகவும் வரலாறு கொண்ட தலமாக இது விளங்குகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் நேற்றிரவு (மே 22) திருட்டு முயற்சி நடந்துள்ளது. கோவிலில் உள்ள உண்டியல்களை சிலர் சேதப்படுத்தியுள்ளனர். இந்த திருட்டு முயற்சியில், செம்பினாலான வேல் ஒன்று திருடப்பட்டுள்ளது. இதில் மூலஸ்தான பிரகாரத்தில் உள்ள சாமி சிலைகள், கதவுகள் மற்றும் 63 நாயன்மார்களின் சிலைகளை சுக்குநூறாக உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனையறிந்த பக்தர்கள், சாமி சிலைகளை சேதப்படுத்தி, திருட்டு முயற்சியில் ஈடுபட்ட கயவர்கள் உடனடியாக கைது செய்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என ஆவேசமாக கூறினர். சம்பவ இடத்தில் அவிநாசி டிஎஸ்பி பவுல்ராஜ் உள்ளிட்ட போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். முக்கிய திருத்தலங்களில் ஒன்றான லிங்கேஸ்வரர் கோவிலில் சாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்திய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசி தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... மேலும்
 
temple news
கொடைக்கானல்; கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் ... மேலும்
 
temple news
மரக்காணம்: மரக்காணம் அடுத்த முன்னுார் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முன்னுார் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு சார்பில், ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஐந்து பேட்டரி வாகனங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar