Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகாசி வளர்பிறை சதுர்த்தி; தங்கக் ... 62 கிராமத்தினர் கலந்து கொண்ட புரவி எடுப்பு திருவிழா 62 கிராமத்தினர் கலந்து கொண்ட புரவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் திருட்டு, 63 நாயன்மார் சிலைகள் உடைப்பு: பக்தர்கள் கொதிப்பு
எழுத்தின் அளவு:
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் திருட்டு, 63 நாயன்மார் சிலைகள் உடைப்பு: பக்தர்கள் கொதிப்பு

பதிவு செய்த நாள்

23 மே
2023
12:05

அவிநாசி: திருப்பூர், அவிநாசியில் உள்ள லிங்கேஸ்வரர் கோவிலில் நேற்றிரவு (மே 22) திருட்டு முயற்சி நடைபெற்றதுடன், அங்கிருந்த 63 நாயன்மார்களின் சிலைகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால் பக்தர்கள் ஆவேசமடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் மிகவும் தொன்மை வாய்ந்த கோவிலாகும். காசியில் வாசி அவிநாசி என்பார்கள். காசியில் போய் வழிபட்டால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அது இத்தல இறைவனான அவிநாசி லிங்கேஸ்வரரை வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தலத்தில் 32 கணபதிகள் அருள்பாலிக்கின்றனர். கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மையான ஆலயமாகவும், முதலை விழுங்கிய பாலகனை காப்பற்றுவதற்காக சுந்தரர் பதிகம் பாடி அதன் பின் அந்த சிறுவனை மீட்டதாகவும் வரலாறு கொண்ட தலமாக இது விளங்குகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் நேற்றிரவு (மே 22) திருட்டு முயற்சி நடந்துள்ளது. கோவிலில் உள்ள உண்டியல்களை சிலர் சேதப்படுத்தியுள்ளனர். இந்த திருட்டு முயற்சியில், செம்பினாலான வேல் ஒன்று திருடப்பட்டுள்ளது. இதில் மூலஸ்தான பிரகாரத்தில் உள்ள சாமி சிலைகள், கதவுகள் மற்றும் 63 நாயன்மார்களின் சிலைகளை சுக்குநூறாக உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனையறிந்த பக்தர்கள், சாமி சிலைகளை சேதப்படுத்தி, திருட்டு முயற்சியில் ஈடுபட்ட கயவர்கள் உடனடியாக கைது செய்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என ஆவேசமாக கூறினர். சம்பவ இடத்தில் அவிநாசி டிஎஸ்பி பவுல்ராஜ் உள்ளிட்ட போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். முக்கிய திருத்தலங்களில் ஒன்றான லிங்கேஸ்வரர் கோவிலில் சாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்திய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாச்சலம் ; விருத்தாச்சலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் சஷ்டியையொட்டி சிறப்பு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 5ம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி ஐந்தாம் நாளான நேற்று முற்பகல் 11:00 மணி முதல் 11:30 மணி வரையிலும், ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவிலில் இன்று மாலை நடந்த கருட சேவை நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar