நயினார்கோவில் மருதவன மாகாளியம்மன் கோயில் வடமாடு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2023 05:05
நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் மருதவனம் மாகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி, தாளையடி கோட்டையில் முதலாம் ஆண்டு வடமாடு பிடிக்கும் விழா நடந்தது.
விழாவை தி.மு.க., தீர்மான குழு துணை தலைவர் திவாகர் துவக்கி வைத்தார். தொடர்ந்து மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 16 காளைகள் உட்பட, மாடு பிடி வீரர்கள் திரளாக பங்கேற்றனர். முன்னதாக காளைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், அடக்கிய மாடு வீரர்களுக்கும் ரொக்க பணம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் அருகில் உள்ள கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தாளையடி கோட்டை கிராம மக்கள் செய்திருந்தனர்.