Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ... காரியாபட்டி மாரியம்மன் கோயில் கொடியேற்றம் காரியாபட்டி மாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரதமர் மோடியிடம் செங்கோல் வழங்கிய ஆதீனங்களுக்கு வரவேற்பு
எழுத்தின் அளவு:
பிரதமர் மோடியிடம் செங்கோல் வழங்கிய ஆதீனங்களுக்கு வரவேற்பு

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2023
08:06

மேட்டுப்பாளையம்: புதிய பாராளுமன்ற கட்டடம் திறப்பு விழாவில், பிரதமர் மோடியிடம் செங்கோல் வழங்கிய, கொங்கு மண்டலத்து ஆதீன சுவாமிகளுக்கு, மேட்டுப்பாளையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதுடெல்லியில், புதிய பாராளுமன்ற கட்டடம் திறப்பு விழா நடந்தது. இவ்விழாவில் கோவை கொங்கு மண்டலத்தை சேர்ந்த பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், செஞ்சேரிமலை ஆதீனம் முத்து சிவராமசாமி அடிகள், அகில பாரதிய சன்னியாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் வேதாந்தானந்தா சுவாமிகள் ஆகியோர் பங்கேற்று, பிரதமர் மோடியிடம் செங்கோலை வழங்கினர். இந்த ஆதீனங்களுக்கு மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சக்தி விநாயகர் கோவிலில், வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவில் நுழைவாயிலில் ஆதீனங்களுக்கு பாத பூஜை செய்து, மாலை அணிவிக்கப்பட்டது. பிறகு சாந்தலிங்க மருதாசல அடிகள், குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் அருளாசி வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அனைத்து இந்து சமுதாய சங்கத்தினர், ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள், சர்வ மங்கள தியான பீடம், வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள், பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் சங்கீதா கவுதம், துணைத் தலைவர் கலைவாணி பழனிசாமி, செயலாளர் சாந்தி பொன்னுசாமி, ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை அகில பாரத சன்னியாசிகள் சங்க நிர்வாகிகள் சசிகுமார், நந்தகிருஷ்ணன், சரவணன், செந்தில், பிரகாஷ் ஆகியோர் செய்து இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 
temple news
அசுரனுடன் போரிட்டு அவனை ஆட்கொண்டார். அவனை இருகூறாகப் பிளந்தவர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar