திண்டுக்கல் சீனிவாசப்பெருமாள் கோயிலில் ஆனி திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூன் 2023 04:06
திண்டுக்கல்: ஆனி திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மலையடிவார சீனிவாசப்பெருமாள் கோயிலில் கொடியேற்றம் நடந்தது.
திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாசப்பெருமாள் கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றம் நடந்தது. நேற்று விஸ்வக்சேனர் திருமண் காண்டல் நகர் சோதனை செய்தல், மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தி நடந்தது. இன்று காலை 10:30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் தினமும் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் , செயல் அலுவலர் செய்திருந்தனர்.