Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்மனுக்கு தக்காளி மாலை செலுத்தி ... உலக நன்மை வேண்டி வரசித்தி வாராஹி அம்மன் கோவிலில் யாகபூஜை உலக நன்மை வேண்டி வரசித்தி வாராஹி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்

பதிவு செய்த நாள்

02 ஆக
2023
11:08

தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் ஆடிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயில் குடகனாற்றின் கரையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க திருக்கோயிலாகும். தமிழகத்தில் வேறெந்த திருக்கோயிலிலும் இல்லாத கலையழகு மிக்க, கற்சிலா விக்கிரகங்கள் அமையப்பெற்ற பிரார்த்தனை திருத்தலமாகும். இக்கோயிலில் ஆடிப்பெரும் திருவிழா, 24.7.23 திங்கள் அன்று காலை 7:30 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சௌந்தரராஜ பெருமாள், வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி தேரோடும் வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தாடிக்கொம்பு நகர் பகுதி ஒவ்வொரு நாளும் விழா கோலமாய் மாறிப்போனது. இதனைத் தொடர்ந்து 30.7.23 அன்று மாலை 6:30 மணி முதல் 7:30 மணிக்குள் திருக்கல்யாணமும் நடந்தது. இதனை தொடர்ந்து மாப்பிள்ளை அழைப்பு, காசியாத்திரை உள்ளிட்ட பல்வேறு வைபவங்கள் நடத்தப்பட்டன. 1.8.23 செவ்வாய் அன்று மாலை 5:00 மணிக்கு மேல், வடம் பிடித்து திருத்தேரோட்டம் நடந்தது. இத் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் சுரேஷ், செயல் அலுவலர் முருகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்; மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நிலமங்கை தாயாருக்கு, புரட்டாசி வெள்ளி உற்சவம் ... மேலும்
 
temple news
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உள்ள நவாம்ச சஞ்சீவி ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பழநி; பழநி பகுதியில் புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோவில் அக்னி தீர்த்த படிக்கட்டுகள் சேதமடைந்து கிடப்பதால் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar