ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கிழக்கு கோபுரம் சுவர் நள்ளிரவில் இடிந்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2023 08:08
ஸ்ரீரங்கம்: திருச்சி ஸ்ரீரங்கம் கிழக்கு கோபுரம் சுவர் நள்ளிரவு இடிந்து விழுந்தது. ஸ்ரீரங்கம்: திருச்சி ஸ்ரீரங்கம் கிழக்கு கோபுரம் சுவர் நள்ளிரவு இடிந்து விழுந்தது.
பூலோக வைகுண்டம் என்றும், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாகவும் உள்ள திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு 21 கோபுரங்கள் உள்ளன. இதில், கிழக்கு வாசல் நுழைவு ராஜகோபுரத்தை அடுத்து, ஏழு நிலைகளுடன் தாமோதர கிருஷ்ணன் கோபுரம் உள்ளது. ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்கு கோபுர சுவரில் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவில் இடிந்து விழுந்தது. இரவு நேரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை, இடிந்த கோபுர சுவரினை முழுவதுமாக புதிதாக கட்டித்தர வேண்டுமென அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.