Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலக நன்மை வேண்டி கோமாதா பூஜை, ... உலக யானைகள் தினம்; ஸ்ரீரங்கம் கோவில் யானைகளை வழிபட்ட பக்தர்கள் உலக யானைகள் தினம்; ஸ்ரீரங்கம் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி மலைப்பாதையில் கரடி, சிறுத்தை!; பக்தர்களுக்கு எச்சரிக்கை
எழுத்தின் அளவு:
திருப்பதி மலைப்பாதையில் கரடி, சிறுத்தை!; பக்தர்களுக்கு எச்சரிக்கை

பதிவு செய்த நாள்

12 ஆக
2023
12:08

திருமலை: திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் நேற்றிரவு தனது குடும்பத்தாருடன் நடந்து சென்றுக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை, வன விலங்கு ஒன்று திடீரென இழுத்துச் சென்று, அடித்து கொன்றுள்ளது.

ஆந்திர மாநிலம், நெல்லுரை சேர்ந்த தினேஷ் என்பவர் அவரது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். தனது 6 வயது மகளுடன் திருப்பதி அலிபிரியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக சென்றுள்ளார். நேற்றிரவு (ஆக.,11) 8 மணியளவில் லட்சுமி நரசிம்மர் கோயில் அருகே வந்தபோது, திடீரென விலங்கு ஒன்று, சிறுமியை பிடித்து புதருக்குள் இழுத்து சென்றது. தங்கள் கண் முன்னே மகளை சிறுத்தை இழுத்து செல்வதை பார்த்த பெற்றோர் அலறி கூச்சலிட்டனர். தகவலறிந்து திருப்பதி வன அதிகாரிகள் இரவு முழுவதும் சிறுமியை தேடினர். இன்று காலையில் லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு சற்று தூரத்தில், சிறுமி லக்ஷிதாவின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது. அதிலும் சிறுமியின் உடல் பாதிதான் உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மீதி பாகத்தை சிறுத்தை உட்கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தனது மகளின் சடலத்தை பார்த்து பெற்றோர், உறவினர் கதறி அழுதனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதிகாரிகள் ஆய்வு:  சிறுமியை தாக்கப்பட்ட இடத்தில் CCF நாகேஸ்வர ராவ் மற்றும் DAFO சதீஷ்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த தாக்குதல் சிறுத்தையா அல்லது கரடியால் தாக்கப்பட்டதா என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்படும் என தெரிவித்தனர். விலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமராக்கள் மற்றும் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 7வது மைல் முதல் நரசிம்ம சுவாமி கோவில் பகுதி வரை உயர் எச்சரிக்கை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar