Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி ... பெருமாள் கோவில் ஆக்கிரமிப்பு: அகற்ற ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லட்டு பற்றாக்குறை: திருப்பதியில் பக்தர்கள் ஏமாற்றம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 அக்
2012
10:10

நகரி: திருப்பதியில் லட்டுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்க வரும் பக்தர்கள், திருமலையில் உள்ள லட்டு கவுன்டர்களில், கூடுதல் லட்டுகள் கேட்டால், 25 ரூபாய் விலையில், ஒருவருக்கு, நான்கு லட்டுகள் வழங்கப்படும். ஆனால், தற்போது திருமலைக்கு வரும், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், கூடுதல் லட்டுகள் கேட்போருக்கு, இரண்டு லட்டுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. இந்த நடைமுறை, அக்., 7ம் தேதி முதல், அமலுக்கு வந்துள்ளது.திருமலையில், தினமும், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், சாமி தரிசனம் செய்கின்றனர். இலவச தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு, 10 ரூபாய் விலையில், இரண்டு லட்டுகள் வழங்கப்படுகின்றன. கூடுதல் லட்டுகள் கேட்போருக்கு, ஒருவருக்கு நான்கு லட்டுக்கள் வீதம் வழங்கும் போது, தினமும், மூன்று லட்சம் லட்டுகள் வரை தேவைப்படுகிறது. ஆனால், தற்போது லட்டு தயாரிக்க நியமிக்கப்பட்டு உள்ள ஊழியர்களால், மூன்று லட்சத்திற்கும் மேல் தயாரிக்க முடியாத நிலை உள்ளது. அதனால், கூடுதலாக கேட்போருக்கு இரண்டு லட்டுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. மேலும், இம்மாதம், 15ம் தேதி, திருமலையில் நவராத்திரி பிரமோற்சவம் துவங்க உள்ளதால், பக்தர்களின் வருகைக்கு, ஏற்ப லட்டுகள் கையிருப்பில் வைத்து கொள்ள வேண்டிய, நிலை ஏற்பட்டுள்ளது. இதனாலும், கூடுதலாக, நான்கு லட்டுகள் வழங்குவது, இரண்டாக குறைக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர்: முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழீசுவரர் கோவிலில் பிரதமர் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு திருக்கடையூர், சீர்காழி கோவில்களில் தேரோட்டம் நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிக் குண்டம் திருவிழா கொடியேற்றம் ... மேலும்
 
temple news
 குன்றத்துார்; ஆடி பூரத்தை முன்னிட்டு, மாங்காடு காமாட்சி அம்மனுக்கு நாளை 1008 கலச அபிஷேகம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; அம்மன் கோவில்களில், ஆடித் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் அடுத்த, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar