Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி ... சந்திரயான்- 3 வெற்றிக்கு நன்றி; பவுர்ணமிக்காவு பத்ரகாளி கோவிலில் இஸ்ரோ தலைவர் வழிபாடு சந்திரயான்- 3 வெற்றிக்கு நன்றி; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தோண்ட தோண்ட சிலைகள்; பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
தோண்ட தோண்ட சிலைகள்;  பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

28 ஆக
2023
12:08

காட்டுமன்னார்கோவில்,- காட்டுமன்னார்கோவில் அருகே, வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது, பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே திருநாரையூர் கிராமத்தில், உத்திராபதி என்பவர் வீடு கட்டுவதற்கு, அஸ்திவாரம் அமைக்க பள்ளம் தோண்டினார். அப்போது, கடப்பாரை உலோகத்தில் மோதும் சத்தம் கேட்டுள்ளது. இதனால், கவனத்துடன் அந்த இடத்தை தோண்டிய போது, 10 அடி ஆழத்தில் 6 ஐம்பொன் சிலைகள் இருந்துள்ளது. அவற்றை உத்திராபதி வீட்டில் பத்திரமாக வைத்துக் கொண்டார். இது குறித்த தகவல் அறிந்த கடலுார் எஸ்.பி., ராஜாராம், ஏ.எஸ்.பி. ரகுபதி, சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., ரூபன்குமார் மற்றும் காட்டுமன்னார்கோவில் தாசில்தார் தமிழ்ச்செல்வன் தலைமையில் வருவாய் துறையினர் திருநாரையூர் கிராமத்திற்கு வந்து விசாரித்தனர். அப்போது, உத்திராபதி வீட்டில் வைக்கப்பட்டிருந்த சிவன், பார்வதி, ஆடிப்பூர அம்மன், போக சக்தி அம்மன், பஞ்சமூர்த்தி அம்பாள், இடம்புரி விநாயகர் ஆகிய 6 சிலைகள் மீட்டனர். மேலும் சிலைகள் இருக்கலாம் என்பதால், அந்த இடம், ஜே.சி.பி., உதவியுடன் மீண்டும் தோண்டப்பட்டது. அப்போது, திருவாட்சியுடன் கூடிய நடராஜர், அம்பாள் உள்ளிட்ட 3 சிலைகள் கிடைத்தது. இவை அனைத்தும் பீடத்துடன் உள்ளன. கண்டெடுக்கப்பட்ட சிலைகளில் நடராஜர், அம்பாள், சிவன் பார்வதி ஆகிய சிலைகள் ஒவ்வொன்றும் சுமார் மூன்றடி உயரமும் மற்ற சிலைகள் 1 அடி முதல் 2 அடி உயரம் வரை உள்ளது.

ஐம்பொன்னால் செய்யப்பட்ட இந்த சிலைகள், 12ம் நுாற்றாண்டு காலத்து சிலைகளாக இருக்கலாம் என, தெரிகிறது. இதன் மதிப்பும் பல கோடி இருக்கும் என, வருவாய்த் துறையினர் தெரிவித்தனர். சிலைகள், போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டு, வருவாய் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி கோயிலில் கந்த சஷ்டி விழா நவ.,2ல் துவங்கி நவ., 7ல் சூரசம்ஹாரம், நவ., 8 திருக்கல்யாண உற்சவம் நடைபெற ... மேலும்
 
temple news
கோவை, மருதமலை சுப்ரமணியர் சுவாமி கோவில் மற்றும் அனுவாவி சுப்ரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண விழாவையொட்டி காந்திமதி அம்மன் இன்று காலை பச்சை ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ 2.99 கோடி காணிக்கையாக கிடைத்தது. பழநி ... மேலும்
 
temple news
தேவகோட்டை; ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிவன் கோவில்களில் உள்ள பைரவருக்கு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar