Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம்; ... முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி ஊர்வலம் முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சுழியில் முற்கால பாண்டியரின் பழமையான விநாயகர் சிற்பம் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
திருச்சுழியில் முற்கால பாண்டியரின் பழமையான விநாயகர் சிற்பம் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

06 செப்
2023
01:09

திருச்சுழி : திருச்சுழி அருகே பழமையான விநாயகர் சிற்பத்தை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

திருச்சுழி அருகே எழுவணி கிராமத்தில் பழமையான விநாயகர் சிற்பம் இருப்பதை, பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் ஆய்வாளர்கள் செல்லபாண்டியன், தாமரைக்கண்ணன், ஸ்ரீதர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அவர்கள் கூறியதாவது: முற்கால பாண்டிய மன்னர்கள் வீரத்திலும், பக்தியிலும் கலைகளிலும் சிறந்து விளங்கினர். இதற்கு உதாரணமாக தற்போது அதிக அளவில் கிடைத்துக் கொண்டிருக்கும் முற்கால பாண்டியரின் சிற்பங்களும் கல்வெட்டுகளுமே சாட்சி. ஒவ்வொரு ஊரிலும் முற்கால பாண்டியர்கள் சிவனுக்கும், பெருமாளுக்கும் தனித்தனியே கோயில் அமைத்து சைவத்தையும், வைணவத்தையும் இரு கண்களாக பாவித்து அந்த கோவில்களுக்கும் அதிக அளவில் பொருளுதவி கொடுத்தும், இறையிலி நிலங்கள் கொடுத்தும் பக்தியை வளர்த்தனர். மக்களும் அதே வழியை பின்பற்றி கோவில்களை பாதுகாத்து வந்தனர். கால ஓட்டத்தில் அதிகமான கோவில்கள் சிதைந்து காணாமல் போய்விட்டன. கோவில்கள் அழிந்தாலும் அவற்றில் உள்ள சிற்பங்கள் இப்பொழுது அதிக அளவில் வெளிப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக முற்கால பாண்டியர்களின் கலை பாணியை அறிய முடிகிறது. இங்குள்ள விநாயகர் சிற்பம் மூன்றரை அடி உயரத்திலும், இரண்டடி அகலத்திலும் உள்ளது. துதிக்கை இடது புறமாக வளைந்த நிலையில் மோதகத்தை பற்றியவாறு உள்ளது. மொத்தம் நான்கு கரங்கள் உள்ளன. வலது மேல் கரத்தில் மழுவும், இடது மேல் கரத்தில் பாசமும் உள்ளது. வலது கீழ்கரத்தில் உடைந்த தந்தம் உள்ளது. இவர் ராஜ நீலாசனத்தில் அமர்ந்து கம்பீரமாக காட்சி தருகிறார். இன்றைய காலகட்டத்தில் முற்கால பாண்டியர்களின் கோயில்கள் கிடைக்காவிட்டாலும் அவர்கள் காலத்தைச் சேர்ந்த சிற்பங்களும், கல்வெட்டுகளும் அதிகம் கிடைத்து வருகின்றன, என்று கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பூர்; உலக நலன் வேண்டியும், தொழில் வளம் சிறக்கவும் வேண்டி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், மஹா ... மேலும்
 
temple news
கோவை; பெரிய நாயக்கன்பாளையம், குப்பிச்சிபாளையம் ரோடில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
சோழவந்தான்; சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா தீர்த்தவாரி உற்ஸவத்துடன் ... மேலும்
 
temple news
தேனி; தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் நடராஜன் சிவகாமியம்மாள் சுவாமி முன் ஆனி திருமஞ்சனத்தையொட்டி ... மேலும்
 
temple news
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே, 22 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட பஞ்சலோக சிலைகள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar