Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உப்பூர் விநாயகருக்கு இரு தேவியருடன் ... சிதம்பரம் கூத்தாடும் பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா சிதம்பரம் கூத்தாடும் பிள்ளையார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாங்கூர் மணிமாடக் கோவில் மகா சம்ப்ரோக்ஷணம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
நாங்கூர் மணிமாடக் கோவில் மகா சம்ப்ரோக்ஷணம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

17 செப்
2023
11:09

மயிலாடுதுறை: சீர்காழி அருகே நாங்கூரில் கோலாகலமாக நடைபெற்ற மணிமாட கோவில்  மகா  சம்ரோக்ஷனத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா நாகூரில் 108 திவ்ய தேசங்களில் 11 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன. இதில் பிரதானமான மணிமாடக் கோவில் என்று அழைக்கப்படும் புண்டரீகவல்லி தாயார் சமேத நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற ஸ்தலமான இங்கு இந்திரன், பிரம்மா, நாரதர், மதங்க முனிவர் ஆகியோர் பெருமாளை  தரிசித்துள்ளனர். இக்கோவிலில் தை அமாவாசையின் போது நடக்கும் 11 கருட சேவை நிகழ்ச்சி உலக பிரசித்தி பெற்றதாக திகழ்கிறது இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று காலை மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. சம்ரோக்ஷனத்தை முன்னிட்டு கடந்த 13ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளும், 14 ஆம் தேதி யாகசாலை பூஜைகளும் தொடங்கி நடைபெற்றன 17 ஆம் தேதியான இன்று காலை ஏழாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹூதி மற்றும் மகா  அலங்கார தீபாராதனை நடைபெற்றது.  காலை 9 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தன.  காலை 10 மணிக்கு  சர்வ சாதகம் சீனிவாச பட்டாச்சாரியார், கோவில் அர்ச்சகர் நாராயண பட்டாச்சாரியார் ஆகியோர் தலைமையிலானவர்கள் பெருமாள், தாயார் சன்னதி விமான கலசங்களில் புனித நீர் தெளித்து மகா சம்ப்ரோக்ஷணத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து  பெருமாள் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் சீர்காழி ஆர்டிஓ அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார் உள்ளிட்ட திரளான பக்தர்கள்  கும்பாபிஷேகத்தை கண்டு பெருமாளை சேவித்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி எஸ்.பி. மீனா தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுப்பி; உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி தரிசனம் தரிசனம் செய்தார். தொடர்ந்து ... மேலும்
 
temple news
மும்பை; காஞ்சி பீடாதிபதி பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று காலை மும்பையில் உள்ள ஸ்ரீ ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் 5ம் நாளானா காலை  உற்சவத்தில் கண்ணாடி ... மேலும்
 
temple news
பழநி: பழநியில் திருகார்த்திகை தீபத்திருவிழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் நேற்று (நவ.,27) மாலை ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – கும்பகோணத்தில் உலக பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar