Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுசு : ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 – 2025 கும்பம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 – 2025 கும்பம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 – ...
முதல் பக்கம் » ராகு கேது பெயர்ச்சி பலன் (8.10.2023 முதல் 26.4.2025 வரை)
மகரம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 – 2025
எழுத்தின் அளவு:
மகரம் : ராகு கேது பெயர்ச்சி பலன் 2023 – 2025

பதிவு செய்த நாள்

03 அக்
2023
03:10

உத்திராடம்: உழைப்பு உயர்வு தரும்

உங்கள் நட்சத்திர நாதனான சூரியனுக்கு ராகு கேது பகைவர்கள் என்றாலும் அவர்கள் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய ஸ்தான பலனைத் தர வேண்டியவர்களாகிறார்கள். அக்.8, 2023 முதல் உத்திராடம் முதல் பாதத்தினருக்கு ராகு 4ம் இடத்திலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு  3ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார். கேது உத்திராடம் முதல் பாதத்தினருக்கு 10ம் இடத்திலும் 2,3,4 ம் பாதத்தினருக்கு 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். இதனால் முதல் பாதத்தினருக்கு, சற்று எதிர்மறையான பலன்கள் உண்டாகும். சிலருடைய உடல் நிலையில் பின்னடைவு உண்டாகும். தொழிலில் அதிகபட்ச அக்கறை தேவை. வியாபாரத்தில் எதிர்பார்ப்பு இழுபறியாகும் என்றாலும் முயற்சிக்கேற்பற லாபம் வரும்.  இக்காலத்தில் முன்னேற்றம் என்பது உங்கள் முயற்சியாலும், சங்கடம் என்பது அஜாக்கிரதை, ஆசையாலும் உண்டாகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு மூன்றாமிட ராகுவாலும், பாக்கிய ஸ்தான கேதுவாலும் முன்னேற்றம் உண்டாகும், ஆதாயம் அதிகரிக்கும். நெருக்கடி விலகும். தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். குல, இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். அலட்சியத்தின் காரணமாக சில இழப்புகள் வரலாம்.

சனி சஞ்சாரம்
சனி பகவான் மகரத்தில் வக்கிர நிலையிலும், அக்.23, 2023 அன்று வக்ர நிவர்த்தியாகி ஆட்சியாகவும் சஞ்சரிப்பவர் டிச.20, 2023 முதல் கும்ப ராசியில் சஞ்சரித்து உத்திராடம் முதல் பாதத்தினருக்கு, தொழிலில் முன்னேற்றம், உடல்நலம், மனத்துணிவு, வாழ்வில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். 2,3,4 ம் பாதத்தினருக்கு குடும்பத்தில் சங்கடம், வருமானத்தில் நெருக்கடி, முயற்சியில் பின்னடைவு, வாக்கை காப்பாற்ற முடியாத நிலையை ஏற்படுத்துவார்.

குரு சஞ்சாரம்
மேஷ ராசியில் ஏப்.30, 2024 வரை சஞ்சரிக்கும் குரு, உத்திராடம் முதல் பாதத்தினருக்கு 5 ம் இடத்திலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு 4 ம் இடத்திலும்  சஞ்சரிப்பதால் முதல் பாதத்தினருக்கு யோகம், அதிர்ஷ்ட நிலையை உண்டாக்குவார், 2,3,4 ம் பாதத்தினருக்கு  அலைச்சல், செலவு, குழப்பம், நெருக்கடி என சங்கடத்தை ஏற்படுத்துவார். அக்.8, 2023 முதல் டிச.20, 2023 வரை அவர் வக்ரமடைவதால் இப்பலன்களில் மாற்றம் உண்டாகும். மே1, 2024 முதல் உத்திராடம் முதல் பாதத்தினருக்கு 6ம் இடத்திலும் 2,3,4 ம் பாதத்தினருக்கு  5ம் இடத்திலும் சஞ்சரிப்பதால், முதல் பாதத்தினருக்கு எதிரி தொல்லை, ஆரோக்கியத்தில் சங்கடம், தொழில், வியாபாரத்தில் போட்டி தோன்றும். 2,3,4 ம் பாதத்தினருக்கு புதிய பாதை தெரியும். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, சுபநிகழ்ச்சி நடந்தேறும். செல்வாக்கு உயரும். பொன் பொருள் சேரும்.

பொதுப்பலன்: உத்திராடம் முதல் பாதத்தினருக்கு சனியாலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு தன்னுடைய பார்வைகளாலும், மே1, 2024 முதல் 5ம் இட சஞ்சார நிலையாலும் குருவால் நன்மை உண்டாகும். முயற்சிகள் வெற்றியாகும், பொருளாதார நெருக்கடி நீங்கும்.   தன்னம்பிக்கை அதிகரிக்கும், தொழிலில் தடைகள் விலகும். சொத்து சேர்க்கை உண்டாகும்.

தொழில்: தொழிலில் இருந்த சங்கடங்கள் விலகும். வரவு அதிகரிக்கும், சிறிய முயற்சிக்கும் பெரிய அளவில் பலன் கிடைக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள், விற்பனையில் இருந்த தடைகள் விலகும், போட்டியாளர்கள் விலகிச் செல்வர்.  எலக்ட்ரானிக்ஸ், பேக்டரி, ஆட்டோமொபைல்ஸ், ஸ்டேசனரி, பதிப்பகம், பத்திரிகை, சினிமா, தொலைக்காட்சி,  கம்ப்யூட்டர் தொழில்கள் முன்னேற்றம் காணும்.

பணியாளர்கள்: பணியாளர்களின் நிலை உயரும். புதிய பொறுப்பு வந்து சேரும். விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் உண்டாகும். தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களின் செயல் திறன் அதிகரிக்கும். அதன் காரணமாக முதலாளியின் பாராட்டிற்கு ஆளாவீர்கள். ஊதியம் உயரும். நெருக்கடி விலகும்.

பெண்கள்: நீண்ட நாள் கனவு நிறைவேறும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு வரன் தேடி வரும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். வேலை வாய்ப்பிற்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்னை விலகும்.

கல்வி: ஆசிரியர்களின் அறிவுரை இக்காலத்தில் கைகொடுக்கும். படிப்பில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டியதாக இருக்கும். பயிற்சி, முயற்சியால் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மேற்கல்வி கனவு நனவாகும்.

உடல்நிலை: நீண்ட நாளாக உடலில் இருந்த சங்கடங்கள் முடிவிற்கு வரும். ஆரோக்கியம் மேம்படும். பரம்பரை நோய்களும் வைத்தியத்திற்கு கட்டுப்படும்.  வாகனத்தை இயக்குவதில் கவனம் தேவை.

குடும்பம்: நெருக்கடிகள் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி தோன்றும். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள்.

பரிகாரம்: ராகு காலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கேற்றி வழிபட்டு வருவதுடன், நவகிரகத்தில் உள்ள கேது பகவானுக்கு செவ்வாய்க்கிழமைகளில் செந்நிற ஆடை சார்த்தி வணங்கி வழிபட்டு வர சங்கடம் போகும்.


திருவோணம்: நல்ல திருப்பம் உண்டாகும்

அக்.8, 2023 முதல் உங்கள் ராசிக்கு 3ம் இடமான மீனத்தில் சஞ்சரிக்கும் ராகு  மன உறுதியை அதிகரிப்பார். பகை, எதிர்ப்பு, போட்டி விலகும், உடல் பாதிப்புகள் விலகும். எதிரிகளை முறியடிக்கும் சக்தி உண்டாகும். வியாபாரத்தில் போட்டியாளர்களை பலமிழக்க வைத்திடும் ஆற்றல் ஏற்படும். குடும்பத்தில் நன்மை அதிகரிக்கும்.

கேது அக்.8, 2023 முதல் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும்.  தந்தையின் உடல் நிலையில் சங்கடம் ஏற்படும். கடவுள் மீது  நம்பிக்கை அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வீர்கள். தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வருமானம் கூடும்.

சனி சஞ்சாரம்:
உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் ராகுவும், 9ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் காலத்தில் அக்.23, 2023 வரை உங்கள் ஜென்ம ராசிக்குள் வக்ர கதியில் சஞ்சரிக்கும் சனி அதன்பின் வக்ர நிவர்த்தியடைந்து ஜென்ம சனியாக சஞ்சரித்து நெருக்கடிகளை வழங்குவார்.  டிச.20, 2023 முதல் 2ம் இடமான குடும்ப ஸ்தானத்தில் பாத சனியாக சஞ்சரித்து, தொட்டதில் எல்லாம் தோல்வி, குடும்பத்தில் பிரச்னை, சிலருக்கு குடும்பத்தை விட்டு பிரியும் நிலை, பொருளாதார இழப்பு, பேச்சில் நிலையில்லா தன்மை, வாக்கு தவறுதல், வருமானத்தில் தடை, பற்றற்ற நிலை, உறவினர்களின் வெறுப்புக்கு ஆளாக வேண்டிய சூழலை ஏற்படுத்துவார்.

குரு சஞ்சாரம்:
ஏப்.30, 2024 வரை உங்கள் ராசிக்கு 4ம் இடத்தில்  சஞ்சரிப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உண்டாகும், ஆரோக்கியத்தில் சங்கடம் ஏற்படும். அக்.8, 2023 க்கும் டிச.20, 2023 க்குமான காலத்தில் அவர் வக்ரம் அடைவதால் இந்த நிலையில் மாற்றம் உண்டாகும். அதன்பின் தொடர்ந்து 4ம் இடத்தில் சஞ்சரிப்பவர் மே1, 2024 முதல் 5 ம் இடத்தில் சஞ்சரித்து அதிர்ஷ்ட பலன்களை வழங்குவார், பொருளாதாரத்தில் உயர்வு தருவார். எண்ணங்கள் நிறைவேறும். சொத்து சேர்க்கை உண்டாகும், குடும்பத்தில் தடைபட்ட சுபநிகழ்ச்சி நடந்தேறும்.

பொதுப்பலன்: 3ம் இடத்தில் ராகு சஞ்சரிக்கும் இக்காலம் நன்மை நிறைந்த காலமாக, எதிர்பார்ப்பு நிறைவேறும் காலமாக, தனித்தன்மை வெளிப்படும் காலமாக இருக்கும். மே1, 2024 முதல் குருவும் யோகத்தை வழங்க இருப்பதால் வருமானம் உயரும். செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் தடைகள் அகலும். பணியிடத்தில் பிரச்னைகள் நீங்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். சொத்து வாங்கும் நிலை உண்டாகும்.

தொழில்: கம்ப்யூட்டர், சினிமா, இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல்ஸ், மின்சாதனம், டிராவல்ஸ், லெதர் பேக்டரி, விவசாயம், பண்ணைகள், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், பைனான்ஸ், பதிப்பகம், பத்திரிகை, கல்வி இன்ஸ்டியூசன்ஸ் போன்றவை முன்னேற்றத்தை நோக்கி செல்லும்.சிலர் புதிய தொழில் தொடங்கி லாபமடைவீர்கள்.

பணியாளர்கள்: வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும், போக்குவரத்து, மின்சாரத்துறை பணியாளர்கள் பணியில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மே 1, 2024 முதல் புதிய பொறுப்புகள் வந்து சேரும். விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் உண்டாகும். தனியார் துறையினரின் நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும்.

பெண்கள்: ஏழரை சனியால் சங்கடங்களுக்கு ஆளானாலும், ராகுவின் 3 ம் இட சஞ்சாரமும், மே1, 2024 முதல் குரு 5ம் இடத்தில் சஞ்சரிக்க இருப்பதும் உங்கள் சங்கடங்களை எல்லாம் போக்கும். முன்னேற்றமான பாதையில் செல்வீர்கள். சுய தொழில் செய்வோருக்கு எண்ணம் நிறைவேறும். எதிர்காலத்திற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். சிலருக்கு எதிர்பார்த்த வேலை அமையும். அலுவலகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். திருமணம் நடந்தேறும். குழந்தைப்பேறு உண்டாகும். பொருளாதாரம் உயரும். சொத்து சேர்க்கை ஏற்படும்.

கல்வி: படிப்பில் கவனம் அதிகரிக்கும். ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவீர்கள். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். சிலர் மேற் கல்விக்காக வெளிநாடு செல்வர்.

உடல்நிலை:  ஏழரை சனி, 4ல் ராகு என்ற நிலையில் உடல்நிலையில் ஏதேனும் பாதிப்பை சந்தித்து வந்திருப்பீர்கள். இந்நிலையில் ராகு 3ம் இட பெயர்ச்சியாவதாலும், ஆயுள் ஸ்தானத்திற்கு ஏப்.30, 2024 வரை குருவின் உண்டாவதாலும் ஆரோக்கிய பிரச்சனைகள் விலகும். நீண்ட நாளாக சிகிச்சை மேற்கொண்டவர்களின் நிலையில் மாற்றம் ஏற்படும். உடலில் உற்சாகம், மனதில் நம்பிக்கை அதிகரிக்கும்.

குடும்பம்
கடந்த கால சங்கடங்கள் ஒவ்வொன்றாக விலகும்.  தைரியம், தன்னம்பிக்கை செல்வாக்கு அதிகரிக்கும், புதிய முயற்சி வெற்றியாகும். பூர்வீக சொத்து விவகாரத்தில் பிரச்னைகள் முடிவிற்கு வரும். கூட்டுத் தொழிலில் சாதகமான நிலை ஏற்படும். சிலருக்கு புதிய சொத்து சேரும். சிலர் இடம் வாங்கி வீடு கட்டி குடியேறுவர். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு போட்டித் தேர்வில் வெற்றி ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், பொன் பொருள் சேரும்.

பரிகாரம்: சிவனை வழிபடுவதுடன் சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தானம் செய்வது நல்லது.


அவிட்டம்: முயற்சி வெற்றியாகும்

உங்கள் நட்சத்திர நாதனான செவ்வாய்க்கு ராகு, கேது இருவரும் பகைவர்கள் என்றாலும் அவர்கள் சஞ்சரிக்கும் இடத்திற்கேற்ப ஸ்தான பலன்களை வழங்குவர். அக்.8, 2023 முதல் அவிட்டம் முதல் இரண்டு பாதத்தினருக்கு ராகு 3ம் இடத்திலும், 3,4 ம் பாதத்தினருக்கு   2ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார். கேது பகவான் அவிட்டம் முதல் இரண்டு பாதத்தினருக்கு 9ம் இடத்திலும் 3,4 ம் பாதத்தினருக்கு 8 ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார். இதனால் முதல் இரண்டு பாதத்தினருக்கு யோக பலன் உண்டாகும். உடலில் இருந்த சங்கடங்கள் விலகும். இழந்த பொருள், சொத்து வந்து சேரும். நீண்ட காலமாக தடைபட்ட செயல் நிறைவேறும். தொழிலில் நிம்மதி உண்டாகும். உழைப்பிற்கேற்ற வரவு ஏற்படும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். எதிர்பாராத வகையில் உறவினர் வகையில் சிலருக்கு சொத்து பணம் கிடைக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் நன்மை தரும். 3,4 ம் பாதத்தினருக்கு 2 ம் இட ராகுவாலும், 8 ம் இட கேதுவாலும் இனம் புரியாத பயம் ஏற்படும். மனதில் மிகப்பெரிய திட்டங்கள் தோன்றும். ஆனால் காரியங்கள் எதுவும் நடக்காது. தொழில் மந்த நிலை இருக்கும். வருமானத்தில் நிறைவின்மை ஏற்படும். குடும்பத்தில் பிரச்னை அதிகரிக்கும். எங்கு போனாலும் ஏதாவதொரு பிரச்னை வந்து நிற்கும். நீங்கள் நினைத்தபடி எதையும் சாதித்துக் கொள்ள முடியாத நிலை இருக்கும். சொந்த ஊரை விட்டு வெளியூர் செல்லும் நிலை உண்டாகும். அரசுப் பணியாளர்களுக்கு நெருக்கடியான காலமாக இருக்கும்.

சனி பெயர்ச்சி:ராகு கேது பெயர்ச்சி நடைபெறும் நாளில், சனி பகவான் மகரத்தில் வக்கிர நிலையிலும், 23.10.2023 அன்று வக்கிர நிவர்த்தியாகி ஆட்சியாகவும் சஞ்சரிப்பவர் 20.12.2023 முதல் கும்ப ராசியில் சஞ்சரித்து அவிட்டம் முதல் இரண்டு பாதத்தினருக்கு ஏழரைச் சனியின் பாத சனியாகவும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம சனியாகவும் சஞ்சரிக்கிறார். சனி பகவான் உங்கள் ராசி நாதன் என்றாலும் கர்ம வினைகளின் பலன்களை அனுபவிக்க வைத்திடக் கூடியவர் என்பதால், எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். குடும்பத்திலும் தொழிலிலும் நிம்மதியற்ற நிலை உண்டாகும். நன்றாக பழகியவர்களும் உங்களை விட்டு பிரிந்து செல்லக்கூடிய நிலை ஏற்படும். பொருளாதார நிலையிலும் சங்கடங்கள் தோன்றும். பணத் தட்டுப்பாட்டின் காரணமாக செயல்களில் முடக்கம் ஏற்படும்.

குரு சஞ்சாரம்:
மேஷ ராசியில் ஏப்.30, 2024 வரை சஞ்சரிக்கும் குரு அவிட்டம் முதல் இரண்டு பாதத்தினருக்கு 4ம் இடத்திலும் 3, 4 ம் பாதத்தினருக்கு 3ம் இடத்திலும் சஞ்சரிப்பதால், முதல் இரண்டு பாதத்தினருக்கும் ஆசைகளை அதிகரித்து சஞ்சலத்தை ஏற்படுத்துவார். புதிய வாகனம், வீட்டை நவீன மயமாக்க வைப்பார். 3, 4 ம் பாதத்தினருக்கு சங்கடங்களை அதிகரிப்பார். வேலையில் நிம்மதி குறையும். குழப்பத்தை அதிகரிப்பார். சுற்றி இருப்பவர்களை ஒவ்வொருவராக விலக்கி வைப்பார். வீண் பழிகளுக்கு சிலரை ஆளாக்குவார். எந்தவொரு வேலையையும் முடிக்க முடியாமல் திணற வைப்பார் என்றாலும் அக்.10, 2023 முதல் டிச.20, 2023 வரை அவர் வக்ரமடைவதால் இப்பலன்களில் மாற்றம் உண்டாகும். மே1, 2024 முதல் அவிட்டம் முதல் இரண்டு பாதத்தினருக்கு 5ம் இடத்திலும், 3,4, ம் பாதத்தினருக்கு 4 ம் இடத்திலும் சஞ்சரிப்பதால், முதல் இரண்டு பாதத்தினருக்கு முன்னேற்றம் உண்டாகும். நினைத்ததை எல்லாம் சாதிப்பர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். புதிய முயற்சி வெற்றியாகும். 3,4 ம் பாதத்தினருக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மனம் அலைபாயும். வருமானத்தை விட சந்தோஷத்தை எதிர்பார்த்து செயல்படும் நிலை உண்டாகும். அதன் காரணமாக வருமானத்தில் தடைகள், தொழிலில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கை தேவை.

பொதுப்பலன்:
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இது ஏழரை சனியின் காலம் என்பதால் நெருக்கடி ஒரு பக்கம் இருக்கும். அதே நேரத்தில் முதல் இரண்டு பாதத்தினருக்கு 3 ம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதாலும், மே1, 2024 முதல் 5ம் இடத்தில் குரு சஞ்சரிக்க இருப்பதாலும் இதுவரை இருந்த சங்கடங்கள் விலகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். வருமானம் அதிகரிக்கும், குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். 3,4 ம் பாதத்தினருக்கு அனைத்து செயல்கள், முயற்சிகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவதுடன் உடல்நலனிலும் கவனம் தேவை.

தொழில்: முதல் இரண்டு பாதத்தினருக்கு லாப நிலை உண்டாகும். புதிய முயற்சி வெற்றியாகும். வெளிநாட்டுத் தொடர்பால் ஆதாயம் உண்டாகும். 3,4 ம் பாதத்தினருக்கு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தொழிலில் கவனத்தை செலுத்துவது நல்லது. போட்டிகள் அதிகரித்து நெருக்கடி உண்டாகும் என்றாலும் மே1, 2024 முதல் தொழில் ஸ்தானத்திற்கு குருவின் பார்வை உண்டாவதால் இந்த நிலையில் மாற்றம் ஏற்படும். நெருக்கடி நீங்கும்.

பணியாளர்கள்: முதல் இரண்டு பாதத்தினருக்கு பணியில் முன்னேற்றம் காண்பர். புதிய பொறுப்புகள் வந்து சேரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பணியாளர்களுக்கு இது ஆதாய காலமாகும். 3,4 ம் பாதத்தினருக்கு கவனமுடன் செயல்பட வேண்டும். இல்லையெனில்  வேலையை இழக்க வேண்டி வரலாம். மே1, 2024 முதல் சங்கடமான நிலை மாறும். உங்கள் செல்வாக்கு உயரும்.

பெண்கள்: முதல் இரண்டு பாதத்தினருக்கு முன்னேற்றமான நிலை உண்டாகும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். ஆதாயம் அதிகரிக்கும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களின் ஆசை நிறைவேறும். வாழ்க்கைத் துணையை  இழந்தவர்களுக்கும் விவாகரத்து பெற்றவர்களுக்கும் மறுமணம் நடந்தேறும். 3,4 ம் பாதத்தினருக்கு கவனமுடன் செயல்படுவதுடன் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.  உறவுகளிடம் கவனமாக இருப்பதுடன் பேச்சில் நிதானம் தேவை. உடல் நலனில் கூடுதல் கவனம்  வேண்டும். சுய தொழில் செய்பவர்கள் புதிய முதலீடுகளை ஏப்.30, 2024 வரை தவிர்ப்பது நல்லது.

கல்வி: ஆசிரியர்களின் அறிவுரைகளை கேட்டு செயல்படுவது அவசியமாகும். சிந்தனையை வேறு எங்கும் சிதற விடாமல் கல்வியில் முழு கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண் பெற முடியும். விரும்பிய பாடப்பிரில் சேர முடியும்.

உடல்நிலை: ஏழரை சனியின் காலம் என்பதால் உடல் நிலையில் ஏதேனும் சிரமம் இருந்து கொண்டே இருக்கும். 3,4 ம் பாதத்தினருக்கு 8 ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் பரம்பரை நோய், தொற்று வியாதியால் பாதிப்பு அதிகரிக்கும். இக்காலத்தில் உடல் நலனில் அக்கறை தேவை. சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது.

குடும்பம்: பொதுவாக முதல் இரண்டு பாதத்தினருக்கு  முன்னேற்றம் இருக்கும். நெருக்கடி விலகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். சொத்து சேர்க்கை உண்டாகும். 3,4 ம் பாதத்தினருக்கு இந்நிலையிலிருந்து வேறுபடும். சங்கடம் அதிகரிக்கும் என்றாலும் சுய ஜாதகம் பலம் பெற்றிருந்தால், திசா புத்தி நன்றாக இருந்தால் நற்பலன் உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். சங்கடங்கள் விலகும்.

பரிகாரம்:
திருநள்ளாறு நள தீர்த்தத்தில் நீராடி சனிபகவானை வழிபட நெருக்கடி நீங்கும்.

 
மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன் (8.10.2023 முதல் 26.4.2025 வரை) »
temple news
அசுவினி: முயற்சி வெற்றி பெறும்உங்கள் ஜென்ம ராசியில் இதுவரை சஞ்சரித்த ராகு 12ம் இடமான மீன ராசியிலும், ... மேலும்
 
temple news
கார்த்திகை;  கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ராகு கார்த்திகை முதல் பாதத்தினருக்கு ஜென்ம ராகுவாகவும், 2,3,4 ம் ... மேலும்
 
temple news
மிருக சீரிடம்: கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மிருகசீரிடம் 1 2 ம் பாதத்தினருக்கு விரய ராகுவாகவும், 3,4 ம் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: புதிய தொழில் தொடங்குவீர்கள்குருபகவானின் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்த உங்களில் 1,2,3 ம் ... மேலும்
 
temple news
மகம்: எச்சரிக்கை அவசியம்கேது பகவானை நட்சத்திர நாதனாகவும் சூரியனை ராசி நாதனாகவும் கொண்ட உங்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar