Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆந்திர உயர் ... அரசூரில் மழைச்சோறு வழிபாடு இரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி கோவிலில் கண்டெடுக்கப்பட்ட தேவார செப்பேடுகள், தெய்வத் திருமேனிகள்; அரசு கையகப்படுத்த பக்தர்கள் எதிர்ப்பு
எழுத்தின் அளவு:
சீர்காழி கோவிலில் கண்டெடுக்கப்பட்ட தேவார செப்பேடுகள், தெய்வத் திருமேனிகள்; அரசு கையகப்படுத்த பக்தர்கள் எதிர்ப்பு

பதிவு செய்த நாள்

10 அக்
2023
05:10

மயிலாடுதுறை : சீர்காழி சட்டைநாதர் கோவில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தெய்வத் திருமேனிகள், தேவார செப்பேடுகள் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவில்  அமைந்துள்ளது. இகோவில் கும்பாபிஷேகம் மே 24ஆம் தேதி நடைபெற்றது முன்னிட்டு யாகசாலை  அமைப்பதற்காக  ஏப்ரல் 16ஆம் தேதி  மண் எடுக்க  குழி தோண்டிய போது 23 ஐம்பொன் தெய்வத்திருமேனிகள், பூஜை பொருட்கள் மற்றும் 413 முழுமையான தேவார பதிகம் பதித்த செப்பேடுகள், 83 சேதமடைந்த செப்பேடுகளும் கண்டெடுக்கப்பட்டு கோவில் சுவாமி சன்னதி அருகே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அவற்றை அரசு கையகப்படுத்துவது தொடர்பான பொதுமக்கள் கருத்து கூட்டம் இன்று மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ராஜ கணேஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்  தருமபுரம் ஆதீன பிரதிநிதிகளாக பொது மேலாளர் ரங்கராஜன், கோவில்களின் தலைமை  கண்காணிப்பாளர் மணி, மேலாளர் சேதுமாணிக்கம், சட்டைநாதர் கோவில் காசாளர் செந்தில் ஆகியோர் கலந்து கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். கூட்டத்தில் அதிமுக, பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது அவர்கள் தொன்மையான சீர்காழி கோவில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன்னால் ஆன தெய்வத்திருமேனிகள் மற்றும் தேவார பதிகங்கள் பதிக்கப்பட்ட செப்பேடுகளை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்ததுடன், தெய்வத் திருமேனிகள் மற்றும் செப்பேடுகள் குறித்து அடுத்து வரும்  தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் கோவில் வளாகத்திலேயே  பெட்டகம் அமைத்து பாதுகாக்க வேண்டும். . பாதுகாப்பு பெட்டகம் அமைப்பதற்கு உண்டான செலவுத் தொகையை தருமபுரம் ஆதீனமே வழங்க உத்தரவாதம் அளித்துள்ளார் என தெரிவித்தனர். மேலும் கோயில் அருகில் கண்டெடுக்கப்படும் தெய்வத்திருமேனிகள் அந்தந்த கோவிலுக்கு வழங்கப்பட்டதற்கான  ஆவணங்களை இந்து அமைப்பினர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
 சென்னை: மதுரையை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள், அனுமதியின்றி பெண் ஒருவர், சினிமா ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar