Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 வது சதய ... அயோத்தி சங்கர மடத்தில் விஜயதசமி விழா; மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி விஜயேந்திர சுவாமிகள் ஆசி அயோத்தி சங்கர மடத்தில் விஜயதசமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழனி ஆண்டவர் கோவிலில் வித்யாரம்பம் ; அ எழுதி கல்வியை துவங்கிய குழந்தைகள்
எழுத்தின் அளவு:
வடபழனி ஆண்டவர் கோவிலில் வித்யாரம்பம் ;  அ எழுதி கல்வியை துவங்கிய குழந்தைகள்

பதிவு செய்த நாள்

24 அக்
2023
11:10

சென்னை: வடபழனி ஆண்டவர் கோவிலில், விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளின் விரல் பிடித்து தொடக்க கல்வியை ஆரம்பிக்கும், வித்யாரம்பம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

சென்னை, வடபழனி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் பிரதானமாக, அம்பாளுக்கு தினசரி சிறப்பு அலங்காரம் செய்யப்படுகின்றன. விழாவின் நிறைவு நாளான நேற்று, சரஸ்வதி அலங்காரத்தில் அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக நேற்று காலை, மாலையில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. நேற்று மாலை, சகஸ்ரநாம பாராயணம் செய்தனர். இதைத்தொடர்ந்து வேத பாராயணம், திருமுறை பாராயணம், மகளிர் குழுவினரின் கொலு பாட்டு நடந்தது.இதைத் தொடர்ந்து, அபூர்வா நாட்டியாலயா பள்ளி மாணவர்களின் பரதநாட்டியம் நிகழ்ச்சி, ஸ்ரீ நித்யாலயாவின் சார்பில் நந்தினி சுரேசின் அறனும் அங்கையர் கன்னியும் நாட்டிய நாடகம் நடந்தன. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சக்தி கொலு நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தனர். சிறார்களிடம் ஆன்மிகத்தை வளர்க்கும் வகையிலும், அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தி கோவிலுக்கு வரும் எண்ணத்தை கொண்டு வரவும், தினமும் அறிவுத்திறன் போட்டி நடத்தப்பட்டு, பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

விஜயதசமியை முன்னிட்டு, இன்று காலை 7:30 மணி முதல் 10:00 மணி வரை, 2.5 வயது முதல் 3.5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு விரல் பிடித்து தொடக்க கல்வியை ஆரம்பிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான குழந்தைகள் வடபழனி ஆண்டவரை தரிசித்து அ எழுதி கல்வியை துவங்கினர்.  நிகழ்ச்சியில் கோவில் தக்கார் எல்.ஆதிமூலம் குழந்தைகளின் விரல் பிடித்து  அ  னா ஆவன்னா எழுத வைத்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் நிறைவடைந்ததை குறிக்கம் வகையில் இன்று வளர்பிறை பஞ்சமி அபிஜித் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: குளிர்காலத்திற்காக ஸ்ரீ பத்ரிநாத் கோவில் நுழைவாயில்கள் இன்று பிற்பகல் 2:56 மணிக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாள் காலை உற்சவத்தில் இன்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா இன்று ... மேலும்
 
temple news
அயோத்தி; உத்தரபிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடியை ஏற்றி வைத்த பிறகு பிரதமர் மோடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar