Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சொர்ணகாளியம்மன் கோயிலில் ஐப்பசி ... தமிழ் முறைப்படி பாலக்காட்டில் கல்பாத்தி தேர் திருவிழா; மயிலாடுதுறையில் சிவாச்சாரியார்களுக்கு அழைப்பிதழ் தமிழ் முறைப்படி பாலக்காட்டில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி கோவில் சிலைகளை அரசு கையகப்படுத்தினால் போராட வேண்டும்; பொன் மாணிக்கவேல்
எழுத்தின் அளவு:
சீர்காழி கோவில் சிலைகளை அரசு கையகப்படுத்தினால் போராட வேண்டும்; பொன் மாணிக்கவேல்

பதிவு செய்த நாள்

29 அக்
2023
11:10

மயிலாடுதுறை; சீர்காழி சட்டைநாதர் கோயில் சிலைகளை அரசு கையகப்படுத்த முயன்றால், மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான புகழ் பெற்ற சட்டைநாதர் கோயிலில், கும்பாபிஷேக விழாவுக்கான யாக சாலை அமைப்பதற்காக கடந்த ஏப்.16-ம் தேதி பள்ளம் தோண்டியபோது, 23 உலோகச் சிலைகள், 410 முழுமையான தேவார செப்பேடுகள், 83 சேதமடைந்த செப்பேடுகள், பூஜைப் பொருட்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. அவை தற்போது கோயில் வளாகத்திலேயே பாதுகாப்பு அறையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இநிலையில் நேற்று இக்கோயிலில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் தரிசனம் செய்து, சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சீர்காழி சட்டைநாதர் கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தெய்வத் திருமேனிகளை இக்கோயிலில்தான் வைக்க வேண்டும். இதனை அரசு கையகப்படுத்தக் கூடாது. பூமிக்கு அடியில் பொருட்கள் அல்லது பொக்கிஷங்கள் கிடைத்தால் தான் அரசு கையகப்படுத்த வேண்டும். தெய்வத் திருமேனிகளை அரசு கையகப்படுத்தக் கூடாது. கையகப்படுத்த நினைத்தால் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் ஒற்றுமையுடன் அரசை எதிர்த்து போராட வேண்டும். தமிழகத்தில் 1975-ம் ஆண்டுக்குப் பின்னர் 38 ஆயிரம் கோயில்களை அரசுகள்  எடுத்துக் கொண்டுவிட்டன. ஆட்சியாளர்கள் இந்து கோயில்களுக்குள் வருவதில்லை. ஆனால் கோயில்களை ஆட்சி செய்ய வேண்டும் என்று நினைப்பது தவறு. சீர்காழி அருகே உள்ள திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வர் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட சிலைகளை கலைக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை மீட்க இந்துக்கள் முன்வர வேண்டும். இது தொடர்பாக நான் வழக்கு தொடர உள்ளேன் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கரிங்கரைப்புள்ளி காடாங்கோடு பகவதி அம்மன் கோவில் பிரதிஷ்டை தின உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; அஷ்டமி பூப்பிரதட்சனம் யொட்டி ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், உலக சாதனை முயற்சியாக, 900க்கும் மேற்பட்ட நாட்டிய ... மேலும்
 
temple news
கூடலுார்; கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவல்லி திருவிழா வெகு விமர்சையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar