Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சொர்ணகாளியம்மன் கோயிலில் ஐப்பசி ... தமிழ் முறைப்படி பாலக்காட்டில் கல்பாத்தி தேர் திருவிழா; மயிலாடுதுறையில் சிவாச்சாரியார்களுக்கு அழைப்பிதழ் தமிழ் முறைப்படி பாலக்காட்டில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி கோவில் சிலைகளை அரசு கையகப்படுத்தினால் போராட வேண்டும்; பொன் மாணிக்கவேல்
எழுத்தின் அளவு:
சீர்காழி கோவில் சிலைகளை அரசு கையகப்படுத்தினால் போராட வேண்டும்; பொன் மாணிக்கவேல்

பதிவு செய்த நாள்

29 அக்
2023
11:10

மயிலாடுதுறை; சீர்காழி சட்டைநாதர் கோயில் சிலைகளை அரசு கையகப்படுத்த முயன்றால், மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான புகழ் பெற்ற சட்டைநாதர் கோயிலில், கும்பாபிஷேக விழாவுக்கான யாக சாலை அமைப்பதற்காக கடந்த ஏப்.16-ம் தேதி பள்ளம் தோண்டியபோது, 23 உலோகச் சிலைகள், 410 முழுமையான தேவார செப்பேடுகள், 83 சேதமடைந்த செப்பேடுகள், பூஜைப் பொருட்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. அவை தற்போது கோயில் வளாகத்திலேயே பாதுகாப்பு அறையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இநிலையில் நேற்று இக்கோயிலில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் தரிசனம் செய்து, சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சீர்காழி சட்டைநாதர் கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தெய்வத் திருமேனிகளை இக்கோயிலில்தான் வைக்க வேண்டும். இதனை அரசு கையகப்படுத்தக் கூடாது. பூமிக்கு அடியில் பொருட்கள் அல்லது பொக்கிஷங்கள் கிடைத்தால் தான் அரசு கையகப்படுத்த வேண்டும். தெய்வத் திருமேனிகளை அரசு கையகப்படுத்தக் கூடாது. கையகப்படுத்த நினைத்தால் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் ஒற்றுமையுடன் அரசை எதிர்த்து போராட வேண்டும். தமிழகத்தில் 1975-ம் ஆண்டுக்குப் பின்னர் 38 ஆயிரம் கோயில்களை அரசுகள்  எடுத்துக் கொண்டுவிட்டன. ஆட்சியாளர்கள் இந்து கோயில்களுக்குள் வருவதில்லை. ஆனால் கோயில்களை ஆட்சி செய்ய வேண்டும் என்று நினைப்பது தவறு. சீர்காழி அருகே உள்ள திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வர் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட சிலைகளை கலைக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை மீட்க இந்துக்கள் முன்வர வேண்டும். இது தொடர்பாக நான் வழக்கு தொடர உள்ளேன் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; தீபாவளிக்கு ராம ஜென்மபூமி தயாராகி வருகிறது, ஸ்ரீ ராமர் மந்திரின் முதல் தளத்திலிருந்து ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar