Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுப்பட்டி மாரியம்மன் கோயில் ... உபய நாச்சியார்களுடன் சவுந்தரராஜ பெருமாள் சேர்த்தி சேவை உபய நாச்சியார்களுடன் சவுந்தரராஜ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அறங்காவலர் நியமனத்தில் இழுபறி; திருப்பணி தொய்வால் பக்தர்கள் அதிருப்தி
எழுத்தின் அளவு:
அறங்காவலர் நியமனத்தில் இழுபறி; திருப்பணி தொய்வால் பக்தர்கள் அதிருப்தி

பதிவு செய்த நாள்

09 நவ
2023
12:11

அன்னூர்; அன்னூர் தாலுகாவில், பழமையான கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்காததால் திருப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

அன்னூர் தாலுகாவில், மிகப் பழமையான பல கோவில்கள் இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் உள்ளன. இக்கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்க மாவட்ட அறங்காவலர் நியமனக்குழு நியமிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் கோவில்களுக்கு அறங்காவலர்கள் இது வரை நியமிக்கப்படவில்லை. அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் தேரோட்டம் நடைபெறுகிறது. இதே போல் 400 ஆண்டு பழமையான கரி வரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணி நடந்து வருகிறது. அறங்காவலர்கள் நியமிக்கப்படாததால் இந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற குன்றின் மீது முருகப்பெருமான் அமர்ந்துள்ள குமரன் குன்று கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இதுவரை அறங்காவலர் நியமிக்கப்படவில்லை. கோவில்பாளையம் கோவில் உள்பட அன்னூர் தாலுகாவில் இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் உள்ள கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்படாததால் திருப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது, என பக்தர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டால் கட்டளைதாரர்கள் ஒத்துழைப்போடு திருப்பணிகள் விரைவாக நடைபெறும். தேரோட்டம் உள்ளிட்ட விழாக்களும் விமர்சையாக நடைபெறும். இந்து சமய அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் விரைவில் அறங்காவலர்களை நியமிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவனந்தபுரம்; ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். பெண்களின் ... மேலும்
 
temple news
ஹோலி என்றால், மனதில் உள்ள பொறாமை, தீய எண்ணம், அகங்காரம் அனைத்தையும் சுட்டெரித்து அறிவுச்சுடரை ஏற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு அன்னக்கொடை உத்சவம் ... மேலும்
 
temple news
நாமக்கல்; நாமக்கல் கமலாலய குளத்தில், நுாறு ஆண்டுகளுக்கு பின், தெப்ப திருவிழா கோலாகலமாக நடந்தது. அதில், ... மேலும்
 
temple news
மாமல்லபுரம்; இருளர் பழங்குடியினர், பாரம்பரிய குலதெய்வ வழிபாட்டிற்காக, மாமல்லபுரம் கடற்கரையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar