Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி ... கூடலுாரில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது கூடலுாரில் கந்த சஷ்டி விழா காப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலைக்கேணியில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
எழுத்தின் அளவு:
திருமலைக்கேணியில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

பதிவு செய்த நாள்

13 நவ
2023
04:11

நத்தம், நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நத்தம் திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறும். முதல் நாளான இன்று கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. முருகப்பெருமானுக்கும் கொடி மரத்திற்கும் பால், பன்னீர், தயிர், மஞ்சள், நெய், சந்தனம் உள்ளிட்ட பதினாறு வகை அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சூரசம்ஹார விழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திண்டுக்கல், நத்தம், செந்துறை, சாணார்பட்டி, கோபால்பட்டி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். நவ.14 முருகபெருமான் சிவபூஜை திருக்காட்சி, நவ.15 முருகப்பெருமான் சிவ உபதேச திருக்காட்சி, நவ.16 அருணகிரியாருக்கு நடன திருக்காட்சியும் நடக்கிறது. நவ.17 முருகப்பெருமான் வேல் வாங்கும் திருக்காட்சி நடைபெறுகிறது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவ.18ந்தேதி மாலை 4.30 மணியளவில் நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து
கொள்வார்கள். மறுநாள் நவ.19 தேதி காலை 10.30 மணியளவில் முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் அழகுலிங்கம், செயல் அலுவலர் பால சரவணன் மற்றும் கந்தசஷ்டி பக்தர்கள் குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar