அயோத்தி ராமர் கோயிலுக்கு காரைக்காலில் இருந்து புனித தீர்த்தம் சென்றது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01டிச 2023 08:12
காரைக்கால்: காரைக்காலில் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் புனித தீர்த்தத்தை அயோத்திக்கும் அனுப்பு நிகழ்ச்சி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்றது.
காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் வட்டம் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் நேற்று அம்மையார் மணிமண்டபத்தில் எதிர்வரும் ஜனவரி 22 ம் தேதி நடைபெறும் அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் போது சம்ரோக்ஷணம் செய்வதற்காக புனித தீர்த்தத்தை அயோத்திக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் உள்ள நளன் குளதீர்த்தம் மற்றும் வேதாரண்யம் கடல் நீர் தீர்த்தம். நாகை மணிகன்னிகா தீர்த்தம் உள்ளிட்ட புனித தீர்த்தத்தை நித்திய கல்யாண பெருமாள் கோவிலில் பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசங்களை ஊர்வலமாக அம்மையார் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் புனித நீரை விசுவ இந்து பரிஷத் பொறுப்பாளர்களிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் புரோஹித் விசுவ ஹிந்து பரிஷத் தென்பாரத அமைப்பாளர் திருக்கோவில் அர்ச்சகர் சரவணா கார்த்திக். வெங்கடாசலம். பா.ஜ.க. மாவட்ட தலைவர் துரைசோனதிபதி. பா.ஜ.க.பிரமுகர்கள் மீனாட்சி சுந்தரம், விக்டர், மணியம்மை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.