Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் பெண்கள், குழந்தைகள் ... சபரிமலையில் வரலாறு காணாத கூட்டம்; கால் வைக்க இடம் இல்லை..! சபரிமலையில் வரலாறு காணாத கூட்டம்; ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலை இணையதளத்தில் கூடுதல் வசதி வருமா?
எழுத்தின் அளவு:
சபரிமலை இணையதளத்தில் கூடுதல் வசதி வருமா?

பதிவு செய்த நாள்

13 டிச
2023
12:12

சபரிமலை; சபரிமலை பக்தர்கள் முன்பதிவு செய்யும் இணையதளத்தில் கூட்டம் குறைவான நாட்களை அடையாளம் காண வசதி இல்லாததால் இவ்வளவு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சபரிமலை நடப்பு மண்டல சீசனில் கடந்த ஒரு வாரமாக பக்தர்கள் கூட்டம்| அலைமோதுகிறது. தாங்கள் முன்பதிவு செய்த நேரத்திலிருந்து 24 முதல் 48 மணி நேரம் தாமதமாக தான் சன்னிதானம் செல்ல முடிகிறது. கூட்டத்தை ஒழுங்கு படுத்துவதற்காக ஆன்லைன் க்யூ என்று சொல்லப்பட்டாலும் அதற்குரிய வசதிகள் இந்த இணையதளத்தில் செய்யப்படவில்லை. ஒரு நாளில் பல்வேறு சமயங்களில் ஸ்லாட்டு பிரித்து வழங்கப்பட்டுள்ளது. ஒரு பக்தர் குறிப்பிட்ட சிலாட்டில் பதிவு செய்யும்போது அவர் எத்தனையாவது நபராக முன்பதிவு செய்கிறார்?அந்த சிலாட்டில் எத்தனை பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது போன்ற விவரங்களை பக்தர்கள் தெரிந்து கொள்ள வசதி இல்லை.இந்த வசதி செய்யும் பட்சத்தில் கூட்டம் குறைவான நாட்களை பக்தர்கள் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது. ஒரே நாளில் அதிகமான பக்தர்கள் கூடுவது தடுக்கப்படும்.

WWW.Sabarimala.org இணையதளத்தின் கட்டுப்பாடு போலீஸ் வசம் இருந்து தற்போது தேவசம்போர்டு கைவசம் உள்ளது. இணையதளத்தில் முன்பதிவு முடிந்தால் எருமேலி ,நிலக்கல் போன்ற இடங்களில் ஸ்பாட் புக்கிங் வழியாக பல்லாயிரம் பேர் தினமும் முன்பதிவு செய்கின்றனர். இதன் காரணமாகவும் நெருக்கடி அதிகரிக்கிறது . மண்டல காலம் தொடங்கிய நவம்பர் 17 முதல் 30 வரை பக்தர்கள் கூட்டம் மிகக்குறைவாகவே இருந்தது. கூட்டம் குறைவான நாட்களை அடையாளம் காண வசதி இருந்தால் பக்தர்கள் இந்த நாட்களை தேர்வு செய்திருக்க வாய்ப்பு உள்ளது. கூட்டம் காரணமாக நடை திறக்கும் நேரம் மாலை 4:00 மணிக்கு பதிலாக 3:00 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது ஆனால் இணையதள ஸ்லாட்டுகளில் அந்த ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படாமலேயே உள்ளது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar