Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முதல்முறையாக சென்னையில் மதுரை ... வனபத்ரகாளியம்மன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் வனபத்ரகாளியம்மன் கோவிலில் அலைமோதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மார்கழி உற்ஸவம்; பகல் பத்து உற்சவத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மார்கழி உற்ஸவம்; பகல் பத்து உற்சவத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

13 டிச
2023
06:12

ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி மாத உற்ஸவங்கள் இன்று (டிச. 13) பகல் பத்து உற்ஸவத்துடன் துவங்குகிறது.

முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு டிச. 23 காலை 5:50 மணிக்கு நடக்கிறது. அன்று முதல் ராப்பத்து உற்ஸவம் துவக்கமும், 2024 ஜனவரி 8 முதல் 15 வரை மார்கழி எண்ணெய் காப்பு உற்ஸவமும் நடக்கிறது.

பகல் பத்து உற்ஸவம்; இன்று (டிச. 13) முதல் டிச. 22 வரை பகல் பத்து உற்சவம் நடக்கிறது. இதனை முன்னிட்டு இன்று மாலை 4 :35 மணிக்கு வேதபிரான் திருமாளிகைக்கு ஆண்டாள், ரெங்க மன்னார் எழுந்தருளி பச்சைப்பரத்தலை பார்க்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதனை தொடர்ந்து வடபத்ர சயனர் சன்னதி பகல் பத்து மண்டபத்தில் நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதைப்போல் தினமும் காலையில் ஆண்டாள், ரெங்க மன்னார் மண்டபம் எழுந்தருளல், அரையர்சேவை, திருவாராதனம் கோஷ்டி, பெரிய பெருமாள் பக்தி உலாவுதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. பின்னர் இரவு 7:30 மணிக்கு மூலஸ்தானம் திரும்புகின்றனர்.

சொர்க்கவாசல் திறப்பு; மார்கழி மாத முக்கிய நிகழ்ச்சியான வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு டிச. 23 காலை 5:50 மணிக்கு நடக்கிறது. அப்போது பெரிய பெருமாள், ஆண்டாள், ரெங்க மன்னார் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருள, ஆழ்வார்கள் எதிர்கொண்டு சேவித்து வரவேற்று, மாடவீதிகள் வழியாக ராப்பத்து மண்டபம் வந்தடைவர். அங்கு ஆழ்வார்கள் மங்களாசாசனம், பக்தி உலாவுதல், திருவாராதனம், அரையர் சேவை, சேவா காலம் நடக்கிறது.

ராப்பத்து உற்ஸவம்; டிச.23 முதல் 2024 ஜனவரி 1 வரை ராப்பத்து உற்ஸவம் நடக்கிறது. தினமும் இரவு 7:00 மணிக்கு ஆண்டாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாடவீதிகள் சுற்றி வந்து பெரிய பெருமாள் சன்னதியில் எழுந்தருளிக்கிறார். அங்கு திருவாராதனம், அரையர் சேவை, பஞ்சாங்கம் வாசித்தல், பொது ஜன சேவையும், மறுநாள் அதிகாலை 5:30 மணிக்கு ஆண்டாள் மூலஸ்தானம் சேருதலும் நடக்கிறது.

எண்ணெய் காப்பு உற்ஸவம்; 2024 ஜனவரி 8 முதல் 15 வரை நடக்கும் எண்ணெய் காப்பு உற்ஸவங்கள் நடக்கிறது. இதனை முன்னிட்டு தினமும் காலை 9:00 மணிக்கு கோயிலில் இருந்து ஆண்டாள் புறப்பட்டு மாடவீதிகள் சுற்றி வந்து எண்ணெய் காப்பு மண்டபம் எழுந்தருள்கிறார். அங்கு மதியம் 3:00 மணிக்கு எண்ணெய் காப்பு உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா தலைமையில் அறங்காவலர்கள், செயல் அலுவலர் முத்துராஜா, கோயில் பட்டர்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ( ஜூலை 14) அதிகாலை மகா ... மேலும்
 
temple news
சென்னை; ஆதிமூலப் பெருமாள் கோவிலில் திருப்பணி மேற்கொள்ளவதற்காக பாலாலயம் செய்யப்பட்டது. சென்னை, ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று  அதிகாலை மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
மதுரை; முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின் ... மேலும்
 
temple news
விருதுநகர்; தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar