Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் குவியும் பக்தர்கள்; ... சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்; தாக்குதல் நடத்தும் போலீஸ்.. பக்தர்கள் பரிதவிப்பு சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்; ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் பக்தர் கூட்டம் தொடர்ந்து அதிகரிப்பு; சில இடங்களில் பக்தர்கள் மீது போலீஸ் தாக்குதல்!
எழுத்தின் அளவு:
சபரிமலையில் பக்தர் கூட்டம் தொடர்ந்து அதிகரிப்பு; சில இடங்களில் பக்தர்கள் மீது போலீஸ் தாக்குதல்!

பதிவு செய்த நாள்

09 ஜன
2024
06:01

சபரிமலை; பெருவழிப்பாதை வழியாக நடந்து வரும் பக்தர்கள் மீண்டும் 14 மணிநேரம் கியூவில் நின்று தளர்ச்சி அடைவதால் கேரள அரசுக்கு எதிராகவும் தேவசம் போர்டுக்கு எதிராகவும் கோஷமிடுகின்றனர். சில இடங்களில் கியூவில் இருந்து வெளியே வந்த பக்தர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் நடைபெறுகிறது.

மகரஜோதி தரிசனத்திற்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சாலக்கயம், பம்பை வழியாக வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில் பெருவழிப்பாதை வழியாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அழுதையும் கரிமலையும் உள்ளிட்ட செங்குத்தான பாதைகளில் ஏறி இறங்கி தளர்ச்சியுற்று வரும் பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் வருவதற்கு மேலும் 14 மணி நேரம் கியூவில் நிற்க வேண்டியுள்ளது. மரக் கூட்டத்தில் இருந்து சரங்குத்தி வரை சுமார் 10 மணி நேரம் செட்டுகளில் அடைத்து போடப்படுகின்றனர். இங்கே இவர்களுக்கு தண்ணீர் கொடுக்கவோ பிஸ்கட் கொடுக்கவோ எந்த வசதியும் இல்லை.

ஆவேசமடைந்த பக்தர்கள் கேரளா அரசுக்கும் தேவசம் கொடுக்கும் எதிராக கோஷமிடுகின்றனர். பொறுமை இழந்த பக்தர்கள் கம்பி வேலிகளை உடைத்தும் அதன் மேல் ஏறியும் குறுக்குப்பாதைகளில் ஓடுகின்றனர். இவர்களை போலீசார் துரத்தி அடிக்கும் சம்பவங்களும் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் சன்னிதானம் அருகே யூ வளைவு பகுதியில் கியூவில் இருந்து வெளியேறிய பக்தர்களை போலீசார் தாக்கிய படங்கள் வெளியானது. 18 படியில் தனது குழந்தையுடன் வேகம் குறைவாக ஏறியதற்காக பெங்களூருவை சேர்ந்த ராஜேஷ் முப்பது பக்தரை முதுகில் தாக்கிய சம்பவம் பற்றி விசாரணை நடத்த போலீசார் சன்னிதானம் போலீஸ் எஸ் பி உத்தரவிட்டுள்ளார் இந்த சம்பவத்திற்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஊழியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. 18 படிகளில் பக்தர்களை ஏற்றும் பொறுப்பை மத்திய அரசின் அதிவிரைவு படையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அந்த சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜோதி தரிசனத்திற்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் கூட்டம் அதிகரிப்பதால் போலீசார் செய்வதறியாது திணறுகின்றனர்.13 வரை 80 ஆயிரம் பேரும் 14-ல் 50 ஆயிரம் பேரும் 15-ல் 40 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்துள்ளனர். இதனால் 14,15 தேதிகளில் லேசாக கூட்டம் குறைய வாய்ப்புள்ளதாக போலீசார் நம்புகின்றனர். எனினும் இன்று முதல் வரும் பக்தர்கள் மகரஜோதி தரிசனத்திற்கு சன்னிதானத்தில் தங்குவார்கள் என்பதால் நெரிசல் குறைய வாய்ப்பில்லை என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. நிலைமையை எதிர்கொள்ள போலீசார் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். சபரிமலையில் போலீசாரின் தன்னலமற்ற பணிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சில போலீசார் தவறு செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சன்னிதானம் போலீஸ் எஸ் பிசுதர்சன் தெரிவித்தார். 18 படிகள் ஏறிய பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்காக வரும் மேல்பாலத்தில் இருந்து ஸ்ரீ கோயில் முன்பு இறங்கி வரும் பாதையில் ஒரு தூண் உடைந்து விழுந்ததில் பத்துக்கு மேற்கும் பட்ட பக்தர்கள் கீழே விழுந்தனர்.எவருக்கும் காயம் இல்லை.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம் நடக்கிறது. காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று(ஜன.,14) மகரஜோதி தரிசனம் காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் திருவாபரணங்கள் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டு பறக்க, பக்தர்களின் சரண கோஷம் விண்ணைத் தொட பந்தளத்தில் இருந்து ... மேலும்
 
temple news
சபரிமலை:: சபரிமலையில் மகரஜோதிக்கு முன்னோடியாக எருமேலியில் இன்று பேட்டை துள்ளல் நடக்கிறது. நாளை ... மேலும்
 
temple news
சபரிமலை; ‘சபரிமலையில் ஜன.14 ஜன. 18 வரை திருவாபரணம் அணிந்த ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்க முடியும்’’ என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar