Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலில் ஜம்மு ... வீடு வீடாக வழங்கப்படும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வீடு வீடாக வழங்கப்படும் அயோத்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கிரி வீதிகளில் வணிக நடவடிக்கை கூடாது
எழுத்தின் அளவு:
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கிரி வீதிகளில் வணிக நடவடிக்கை கூடாது

பதிவு செய்த நாள்

10 ஜன
2024
08:01

மதுரை : பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கிரி வீதிகளில் வாகனங்களை நுழைய விடாமல் சோதனைச் சாவடி அமைக்க வேண்டும். வணிக நடவடிக்கைகளை அனுமதிக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

சென்னை ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மலையடிவாரத்தில் கிரி வீதிகள் உள்ளன. இங்கு ஆக்கிரமிப்புகளால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட உயர் நீதிமன்றத்தில் மனு செய்தேன். அகற்ற 2018ல் உத்தரவிட்டது. அதை நிறைவேற்றாததால் அப்போதைய கலெக்டர் வினய் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். ஜன.,3ல் விசாரணையின்போது தமிழக அரசு தரப்பு,கிரி வீதிகளில் தற்காலிக ஆக்கிரமிப்புகள் ஜன.,5ல் அகற்றப்படும், என தெரிவித்தது.

நீதிபதிகள்: ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதை கண்காணிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வி.பாரதிதாசன் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. அவர் ஜன.,9ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தர விட்டனர். நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.நீதிபதி (ஓய்வு) பாரதிதாசன் தரப்பில், தற்காலிக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. கோயிலைச் சுற்றிலும் பிளாஸ்டிக், குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடை செய்ய வேண்டும், என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அரசு தரப்பு: ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, மீண்டும் ஏற்படாதவாறு தொடர் கண்காணிப்பு செய்யப்படுகிறது. 300 கடைகளில் 160 கடைகள் அகற்றப்பட்டன. மற்றவை பட்டா நிலத்தில் உள்ளன. சர்வே செய்து உரிய நடவடிக்கை எடுக்க அவகாசம் தேவை. இவ்வாறு தெரிவித்தது.

நீதிபதிகள்: நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் இவ்விவகாரத்தில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க அரசு தரப்பில் தவறிவிட்டனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டிய நிலை ஏற்படும். பழநி நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பாளர்களை கண்டுகொள்ளாமல் இருப்பதுபோல் தெரிய வருகிறது. இது ஆக்கிரமிப்பாளர்களை மறைமுகமாக ஊக்குவிப்பதுபோல் உள்ளது. நிரந்தர கட்டுமான ஆக்கிரமிப்புகளை சர்வே செய்து 10 நாட்களில் அகற்ற வேண்டும். கிரி வீதிகளில் வாகனங்களை நுழையவிடக் கூடாது. அங்கு நான்கு ரோடுகள் சந்திக்கும் இடத்தில் சோதனைச் சாவடி, தற்காலிக தடுப்புகள் அமைக்க வேண்டும். மீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். வணிக நடவடிக்கைகளை அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு உத்தரவிட்டு ஜன.,23க்கு ஒத்தி வைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar