Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஞ்சுருளி தெய்வம் உத்தரவுடன்.. ... அம்மன் கோவில் விழாவிற்காக அக்னி சட்டி தயாரிக்கும் பணி மும்முரம் அம்மன் கோவில் விழாவிற்காக அக்னி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதைந்த பழமையான கோயிலில் புதைந்திருக்கும் வரலாறு
எழுத்தின் அளவு:
சிதைந்த பழமையான கோயிலில் புதைந்திருக்கும் வரலாறு

பதிவு செய்த நாள்

29 ஜன
2024
11:01

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையத்தில், பழமையான கச்சி வரதராஜப்பெருமாள் கோயில் உள்ளது. கோயிலை ஒட்டிய மலையில் கச்சிப்பெருமாள் திருமலை என்ற கோயிலும் உள்ளது. மலைக்கோயிலுக்குச் செல்லும் வழியில், படிகளிலும் காணும் இடம் பாறைகளிலும் எங்கும் கல்வெட்டுகளாக உள்ளன.

கோயில் கருவறை, மண்டபம், கோயில் பின்புறச் சுவர்கள் என எங்கு பார்த்தாலும் கல்வெட்டுகள் நிறைந்திருக்கின்றன. வௌவால் எச்சங்கள், புழுதி மண் படிந்த தரையை ஒதுக்கி விட்டுப் பார்த்தாலும், கற்தரையில் கல்வெட்டுகள் பளிச்சிடுகின்றன. கோயிலுக்கு எதிரில் இருந்த கோட்டை, போரில் இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. பாண்டிய அரசன் மாறவர்மன் குலசேகரன் (கி.பி. 1268 -1311) காலத்தில் இந்தக் கோயில் எழுப்பப்பட்டதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. அதன்பிறகு விஜயநகர மன்னர்கள் காலத்திலும் கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. பொப்பச்சியார் வசந்தநாயக்கர், வாசுதேவ நாயக்கர், கிருஷ்ணதேவராயர், அச்சுத தேவராயர், இராயப்ப நாயக்கர் உட்பட பல நாயக்க மன்னர்கள் காலத்தைச் சேர்ந்த இருபத்தைந்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் பாறைகளிலும் கோயில் சுவர்களிலும் உள்ளன.

இவ்வூர் பாண்டியர் காலத்தில் குலசேகர சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப் பட்டிருக்கிறது. கச்சி பெருமாள் பாளையம் என்பதே கிருஷ்ணதேவ ராயர் காலத்தில் மருவி, கச்சிராயப்பாளையம் என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது. உய்யக் கொண்டாள், ஆண்டவர், தாயிலும் நல்லாள், வேம்பி என நால்வர், இந்தக் கோயிலில் தினமும் பூசை செய்து ஆடிப் பாடியுள்ளனர். இந்த நால்வரும் திருவாமாத்தூர் செட்டியார் விண்ணவதீரர் பொன்னப் பிள்ளையிடம் இருந்து கோயிலுக்காக விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர். இக்கோயில் கல்வெட்டுகளைப் பற்றி மரு.அருண்குமார் என்பவர், வரலாற்றில் ஈயனுார் (எ) கச்சிராயப்பாளையம் என்ற நூல் எழுதியுள்ளார். ஒரு காலத்தில் அரசர்கள், ஆட்சியாளர்கள், விழாக்கள் என்று சிறப்புற்றிருந்த இந்த மலைக்கோயில், இன்று உடைந்தும் சிதைந்தும் வரலாற்றைத் தன்னுள் புதைத்துக்கொண்டு அமைதியாகக் காட்சியளிக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 திவ்யதேசங்களில் 20வது தலமாகவும், 40 ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு அருகே, தத்தமங்கலம் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.கேரளா ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவை, உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி கோட்டைமேடு ஐயப்பன் கோயிலில் 10ம் ஆண்டு மண்டலபூஜை விழா முன்னிட்டு ஐயப்பன் சாமி ஊர்வலம் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அருட்கோட்டம் முருகன் கோவிலில் மகாலட்சுமி சிலையின் கண் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar