Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதைந்த பழமையான கோயிலில் ... சிவனோடு ஒரு நாள்; உலக நன்மையை வேண்டி பக்தர்கள் நடைப்பயணம் சிவனோடு ஒரு நாள்; உலக நன்மையை வேண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்மன் கோவில் விழாவிற்காக அக்னி சட்டி தயாரிக்கும் பணி மும்முரம்
எழுத்தின் அளவு:
அம்மன் கோவில் விழாவிற்காக அக்னி சட்டி தயாரிக்கும் பணி மும்முரம்

பதிவு செய்த நாள்

29 ஜன
2024
11:01

 மானாமதுரை: தென் மாவட்டங்களில் உள்ள அம்மன் கோவில்களில் நடைபெற உள்ள பொங்கல் விழாவிற்காக மானாமதுரையில் மண்ணாலான தீச்சட்டிகள் மும்முரமாக தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மானாமதுரையில் 300க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் வருடம் தோறும் சீசனுக்கு தகுந்தாற்போல் மண்பாண்ட பொருட்களை தயார் செய்து தமிழகம் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் மண்ணாலான மண்பாண்ட பொருட்கள் தரத்தோடும் கலை நயத்துடனும் இருப்பதினால் ஏராளமானோர் இங்கு வந்து வாங்கி சென்று வருகின்றனர். இந்நிலையில் தை,மாசி,பங்குனி மாதங்களில் தென் மாவட்டங்களில் உள்ள தாயமங்கலம், திருச்சுழி, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர்,இருக்கன்குடி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருக்கும் அம்மன் கோவில்களில் பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாக்களின் போது ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து தீச்சட்டி எடுத்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனர். இதற்காக மானாமதுரையில் கடந்த சில மாதங்களாக ஏராளமான மண்பாண்ட தொழிலாளர்கள் தீச்சட்டிகளை தயாரிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், மானாமதுரையில் தயாரிக்கப்படும் தீச்சட்டிகள் மிகுந்த கலை நயத்துடனும் தரமாகவும் இருப்பதினால் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தீச்சட்டிகளை வாங்கி சென்று வருகின்றனர். இதற்காக நாங்களும் தீச்சட்டிகள் தயாரிக்கும் போது விரதமிருந்து பயபக்தியுடன் தயாரித்து வருகிறோம், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் உள்ள மங்களேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்பூர்: மங்கலம் அருகே உள்ள அக்ரஹாரப்புத்துார் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar