Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோலாகலமாக நடைபெற்ற கூடலூர் ... ஸ்ரீரங்கத்தில் பல்லக்கில் வலம் வந்த நம்பெருமாள்; காசிக்கு சென்ற பலன் தரும் மாசி கருட சேவை மாலை நடக்கிறது ஸ்ரீரங்கத்தில் பல்லக்கில் வலம் வந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பகோணத்தில் மாசி மக பெருவிழா: ஐந்து சிவன் கோவில்களில் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
கும்பகோணத்தில் மாசி மக பெருவிழா: ஐந்து சிவன் கோவில்களில் கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

15 பிப்
2024
01:02

தஞ்சாவூர், கும்பகோணத்தில் மாசி மக விழாவையொட்டி இன்று(15ம் தேதி) சிவன் கோவில்களில் கொடியேற்றம் நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், 12 ஆண்டுக்கு ஒருமுறை மகாமக பெருவிழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அதே போல ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா நடைபெறுவது வழக்கம். மாசி மக விழாவையொட்டி காசி விஸ்வநாதர், சோமேஸ்வரர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய 5 சிவன் கோவில்களில் இன்று(15ம் தேதி) கொடியேற்றம் நடந்தது.  தொடர்ந்து, பிப்ரவரி 21ம் தேதி திருக்கல்யாணம், பிப்ரவரி 23ம் தேதி காலை 9:00 மணிக்கு சோமேஸ்வரர், காளகஸ்தீஸ்வர் கோவில் தேரோட்டம், மாலை 4:00 மணிக்கு மேல் காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர் கோவில்களின் தேரோட்டம் நடைபெறுகிறது. பிப்ரவரி 24ம் தேதி மகாமக குளக்கரையில் பஞ்சமூர்த்திகளுடன் சுவாமிகள் எழுந்தருளி, தீர்த்தவாரி நடைபெறுகிறது. நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், கோடீஸ்வரர், அமிர்தகலசநாதர், பாணபுரீஸ்வரர் ஆகிய 5 சிவன் கோவில்களில் ஏக தின உற்சவமாக, பிப்ரவரி 24ம் தேதி மகாமக குளத்தில் நடைபெறும் தீர்த்தவாரிக்கு சுவாமிகள் எழுந்தருளுகின்றனர். இதேபோல, சக்கரபாணி, ராஜகோபால சுவாமி, ஆதிவராகப் பெருமாள் ஆகிய மூன்று பெருமாள் கோவில்களில் மாசிமக கொடியேற்றம் நாளை (16ம் தேதி) நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, பிப்.24-ம் தேதி தேரோட்டம், பிப்ரவரி 26ம் தேதி விடையாற்றி, புஷ்ப பல்லக்கு வீதியுலா நடைபெற உள்ளது. சாரங்கபாணி சுவாமி கோயிலில் பிப்ரவரி 24ம் தேதி மாசி மக தீர்த்தவாரி நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar