Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோலாகலமாக நடைபெற்ற கூடலூர் ... ஸ்ரீரங்கத்தில் பல்லக்கில் வலம் வந்த நம்பெருமாள்; காசிக்கு சென்ற பலன் தரும் மாசி கருட சேவை மாலை நடக்கிறது ஸ்ரீரங்கத்தில் பல்லக்கில் வலம் வந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பகோணத்தில் மாசி மக பெருவிழா: ஐந்து சிவன் கோவில்களில் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
கும்பகோணத்தில் மாசி மக பெருவிழா: ஐந்து சிவன் கோவில்களில் கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

15 பிப்
2024
01:02

தஞ்சாவூர், கும்பகோணத்தில் மாசி மக விழாவையொட்டி இன்று(15ம் தேதி) சிவன் கோவில்களில் கொடியேற்றம் நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், 12 ஆண்டுக்கு ஒருமுறை மகாமக பெருவிழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அதே போல ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா நடைபெறுவது வழக்கம். மாசி மக விழாவையொட்டி காசி விஸ்வநாதர், சோமேஸ்வரர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய 5 சிவன் கோவில்களில் இன்று(15ம் தேதி) கொடியேற்றம் நடந்தது.  தொடர்ந்து, பிப்ரவரி 21ம் தேதி திருக்கல்யாணம், பிப்ரவரி 23ம் தேதி காலை 9:00 மணிக்கு சோமேஸ்வரர், காளகஸ்தீஸ்வர் கோவில் தேரோட்டம், மாலை 4:00 மணிக்கு மேல் காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர் கோவில்களின் தேரோட்டம் நடைபெறுகிறது. பிப்ரவரி 24ம் தேதி மகாமக குளக்கரையில் பஞ்சமூர்த்திகளுடன் சுவாமிகள் எழுந்தருளி, தீர்த்தவாரி நடைபெறுகிறது. நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், கோடீஸ்வரர், அமிர்தகலசநாதர், பாணபுரீஸ்வரர் ஆகிய 5 சிவன் கோவில்களில் ஏக தின உற்சவமாக, பிப்ரவரி 24ம் தேதி மகாமக குளத்தில் நடைபெறும் தீர்த்தவாரிக்கு சுவாமிகள் எழுந்தருளுகின்றனர். இதேபோல, சக்கரபாணி, ராஜகோபால சுவாமி, ஆதிவராகப் பெருமாள் ஆகிய மூன்று பெருமாள் கோவில்களில் மாசிமக கொடியேற்றம் நாளை (16ம் தேதி) நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, பிப்.24-ம் தேதி தேரோட்டம், பிப்ரவரி 26ம் தேதி விடையாற்றி, புஷ்ப பல்லக்கு வீதியுலா நடைபெற உள்ளது. சாரங்கபாணி சுவாமி கோயிலில் பிப்ரவரி 24ம் தேதி மாசி மக தீர்த்தவாரி நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில், சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப் பயணத்தை தொடங்குகிறார். ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான, ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar