பதிவு செய்த நாள்
08
மார்
2024
12:03
அயோத்தி; அயோத்தி ராமர் கோயிலில் இதுவரை கிட்டத்தட்ட 75 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அயோத்தியில் ஜனவரி 22 ம் தேதி ராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதிலிருந்து கிட்டத்தட்ட 75 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அயோத்தியில் உள்ள ராமர் கோயில் வளாகத்தின் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அயோத்தி கோயில் கட்டுமானக் குழுவின் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.
இது குறித்து கோயில் அறக்கட்டளை உறுப்பினர் அனில் மிஸ்ரா கூறுகையில், ராமர் கோவில் கட்டும் பணி 2024 டிசம்பருக்குள் முடிக்கப்படும். 1,500 தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 3,500 க்கும் மேற்பட்ட கூடுதல் தொழிலாளர்கள் விரைவில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் ராம ஜென்மபூமி வளாகத்தில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் முடிக்க முடிவு செய்யப்பட்டது என்று கூறினார்.