சிங்கம்புணரி; சிங்கம்புணரி பேரூராட்சி மேலத்தெருவில் உள்ள ஆறு புள்ளி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி முன்னிட்டு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் விரதம் இருந்து செட்டியார் குளத்தில் புனித நீராடி கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அங்கு அம்மனுக்கு பல்வேறு வழிபாடுகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னிக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.