Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025 விருச்சிகம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025 விருச்சிகம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025
முதல் பக்கம் » தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை)
துலாம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025
எழுத்தின் அளவு:
துலாம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025

பதிவு செய்த நாள்

09 ஏப்
2024
02:04

சித்திரை: நினைத்தது நடக்கும்

சகோதர காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2ம் பாதங்களில் (கன்னி) பிறந்தவர்களுக்கு வித்யாகாரகனான புதன் ராசிநாதனாகவும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு (துலாம்) களத்திரகாரகனான சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.

பிறக்கும் தமிழ்ப் புத்தாண்டில் சித்திரை 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சமூகத்தில் செல்வாக்கும், முயற்சியில் வெற்றியும், பகைவரை வீழ்த்தும் வலிமையும், பணவரவும், நினைத்ததை நடத்தும் ஆற்றலும் உண்டாகும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு உடல்பலமும், தொழிலில் முன்னேற்றமும், வழக்கில் சாதகமான நிலையும், எதிரியை வீழ்த்தும் வலிமையும் ஏற்படும்.

சனி சஞ்சாரம்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி 1,2 பாதங்களில் பிறந்தவர்களுக்கு முயற்சியில் வெற்றியை உண்டாக்குவார். சங்கடங்களை விரட்டுவார். யோகத்தையும், செல்வாக்கையும் அதிகரிப்பார். தொழில், பணியில் முன்னேற்றம் தருவார். வழக்குகளில் வெற்றியை உண்டாக்குவார். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜூன் 19 - நவ. 4  வக்கிர காலத்திலும், 2025, பிப். 17 - மார்ச் 29 அஸ்தமன காலத்திலும் சங்கடங்களை அகற்றி வைப்பார். நன்மையை அதிகரிப்பார். போராட்டமான நிலையிலிருந்து விடுதலை வழங்குவார்.

ராகு, கேது சஞ்சாரம்
ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வீண் பிரச்னைகள் தோன்றும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். புதிய நட்புகளால் சிலர் சங்கடங்களுக்கு ஆளாக நேரும். பொருள் இழப்பு உண்டாகும். 3, 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நினைத்ததை சாதிக்கும் நிலையும், புதிய முயற்சிகளில் வெற்றியும் உண்டாகும். பணவரவில் இருந்த தடை விலகும். பல வழிகளில் பணம் வரும். செல்வாக்கு உயரும்.

குரு சஞ்சாரம்
1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை அஷ்டம ஸ்தானத்திலும், மே 1 முதல் பாக்ய ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் குருபகவான் அபரிமித யோகத்தை உண்டாக்குவார். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவார். வேலை தேடுவோருக்கு வேலை வாய்ப்பை வழங்குவார். திருமண வயதினருக்கு வாழ்க்கைத்துணையை வழங்குவார். வீடு கட்டி குடியேற வைப்பார். அரசியல்வாதிகளின் செல்வாக்கை உயர்த்துவார். புதிய பதவி, பொறுப்புகளை வழங்குவார். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை தன் பார்வையால் அதிகபட்ச யோகத்தை வழங்குவார். மே1 முதல் 10ம் இடத்தில் சஞ்சரிப்பதால் பணியில் சங்கடம், தொழிலில் தடை, பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துவார்.

சூரிய சஞ்சாரம்
1,2 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜூன் 15 - ஆக. 16, நவ. 16 - டிச. 15, 2025 பிப். 13 - மார்ச் 14 காலங்களிலும், 3,4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜூலை 17 - செப்.16, டிச.16 - 2025, ஜன.13, மார்ச் 15 - ஏப். 13 காலங்களிலும் சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால் வாழ்க்கை சிறக்கும்.  எதிர்பார்த்த நன்மை உண்டாகும். வியாபாரம், தொழிலில் லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். அலுவலர்களின் கோரிக்கை நிறைவேறும். எதிர்ப்பு விலகும். ஆரோக்கியம் சீராகும். சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். புதிய ஒப்பந்தம் வந்து சேரும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றியாகும்.

பொதுப்பலன்
குரோதி வருடத்தில் உங்கள் செயல்களில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதிப்பீர்கள்.  சூழ்நிலைகளும் சாதகமாக அமையும். தொழில், உத்தியோகத்தில் உங்கள் எண்ணம் நிறைவேறும். செயல்களில் விவேகம் இருக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த வருவாயை அடைவீர்கள். நீண்டநாள் கனவு நிறைவேறும். சொத்து சேர்க்கை உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும்.

தொழில்
தொழிலில் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவீர்கள். போட்டியாளர்கள் விலகுவர். புதிய முதலீடு ஆதாயம் தரும். பங்குச் சந்தையில் லாபம் அதிகரிக்கும். அரசு வழியில் இருந்த தடைகள் விலகும். புதிய தொழில் தொடங்க நினைத்தவர்களின் எண்ணம் நிறைவேறும்.

பணியாளர்கள்
உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் மறையும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். தனியார் நிறுவன ஊழியர்களின் கோரிக்கை ஏற்கப்படும். பணியிடத்தில் உங்கள் நிலை உயரும். திறமை மதிக்கப்படும். ஊதியம் அதிகரிக்கும்.

பெண்கள்
தனித்திறமை வெளிப்படும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். பணியில் புதிய பொறுப்பு வந்துசேரும். வருமானம் உயரும். குலதெய்வ அருள் கிடைக்கும். உடலில் இருந்த சங்கடம் தீரும். வாழ்க்கைத் துணை உங்கள் ஆலோசனைக்கு மதிப்பளிப்பார். குடும்பத்தை வழிநடத்திச் செல்வதில் உங்கள் பங்கு அதிகரிக்கும். புதிய சொத்து வாங்குவீர்கள். பிள்ளைகளின் கல்வி, வேலை, திருமணம், முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவீர்கள். மறைமுக எதிரிகள் விலகிச் செல்வர்.

கல்வி
தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மேற்கல்வி முயற்சி வெற்றியாகும். சுய ஜாதகத்தில் 10,11 ம் இட அதிபதிகளின் நிலையறிந்து அவரவருக்குரிய படிப்பை தேர்வு செய்வது நன்மையளிக்கும்.

உடல்நிலை
நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பரம்பரை நோய், தொற்று நோய்கள் மருத்துவ சிகிச்சையால் குணமாகும். நடைப்பயிற்சி, யோகப் பயிற்சிகளால் நோய்கள் கட்டுப்பாட்டிற்குள் வரும்.

குடும்பம்
பொருளாதார நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.  பெரியோரின் ஆதரவு அதிகரிக்கும். குலதெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். துணிந்து செயல்பட்டு குடும்ப பிரச்னைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். புது வீடு கட்டி அதில் குடியேறுவீர்கள். தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வர். சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். பிள்ளைகளை மேற்கல்விக்காக வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.

பரிகாரம்: மீனாட்சியம்மனை தினமும் வழிபட்டால் வாழ்வில் நன்மை அதிகரிக்கும்.


சுவாதி: உழைப்பால் உயர்வீர்கள்

யோகக்காரகனான ராகு, அதிர்ஷ்ட காரகனான சுக்கிரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் குரோதி ஆண்டில் ராகுவின் சஞ்சாரமும், குருவின் 12, 2, 4 ம் பார்வைகளும் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்கும். பிரச்னைகளை விலக்கி வைக்கும். உடல் நிலையில் முன்னேற்றம் தரும். பொருளாதார நிலையை சீராக்கும். உழைப்பால் உயர்வீர்கள். வியாபாரத்தில் இருந்த சங்கடங்கள் தீரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். மற்றவரால் செய்ய முடியாத செயல்களை செய்து முடிப்பீர்கள்.

சனி சஞ்சாரம்
 சனி பகவான் 5ம் இடத்தில் ஆட்சியாக இருப்பதால் குடும்பம், பிள்ளைகள், பூர்வீகச் சொத்து வகையில் சங்கடங்கள் தோன்றும். ஆனாலும் ஜூன் 19 - நவ. 4 வக்கிர காலத்திலும், 2025, பிப். 27 - மார்ச் 29 அஸ்தமன நிலையிலும் 5 ம் இட சனியால் பலன்கள் மாறுபடும். உங்கள் முயற்சிகள் வெற்றியாகும்.  சங்கடங்களில் இருந்து உங்களுக்கு பாதுகாப்பு உண்டாகும். உங்கள் செயல்களில் ஆதாயம் காண்பீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். குடும்பத்தில் முன்னேற்றம் தோன்றும்.

ராகு, கேது சஞ்சாரம்
 ராகு 6 ம் இடத்திலும், கேது 12 ம் இடத்திலும் இருப்பதால் முயற்சிகள் வெற்றி பெறும். எதிர்ப்பு விலகும். பொருளாதாரம் உயரும். வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகுவர். வழக்கு வெற்றியாகும். உடல்நிலை சீராகும். சங்கடங்கள் ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். வியாபாரம், தொழிலில் லாபம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பொறுப்பு, பதவியை அடைவர். குடும்ப பிரச்னை விலகும். சொத்து சேர்க்கை உண்டாகும்.

குரு சஞ்சாரம்
ஏப்.30 வரை 7ம் இடத்தில் இருக்கும் குருவால் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். மே 1 முதல் அஷ்டம ஸ்தான குருவால் நெருக்கடி அதிகரிக்கும். முயற்சி இழுபறியாகும். வரவுகள் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. குருவின் பார்வைகளால் குடும்பத்தில் ஒற்றுமை, பணவரவு, சந்தோஷம் என்ற நிலையுடன் விரயச் செலவும் உண்டாகும்.

சூரிய சஞ்சாரம்
ஜூலை 17 - செப் 16, டிச. 16 - 2025, ஜன. 13, மார்ச் 15 - ஏப். 13 காலங்களில்  சூரியனின் 10, 11, 3, 6 ம் இட சஞ்சாரத்தால் சங்கடங்கள் விலகும். புதிய முயற்சி பலிதமாகும். வழக்கில் சிக்கியவர்கள்  விடுதலை காண்பர். பணியில் இருந்த பிரச்னைகள் மறையும். எதிரிகள் விலகிச் செல்வர்.  ஆரோக்கியம் சீராகும். செல்வாக்கு உயரும். வேலை தேடுவோருக்கு தகுதியான வேலை அமையும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் ஏற்படும்.

பொதுப்பலன்
நீண்ட நாளாக இருந்த பிரச்னைக்கு தீர்வு உண்டாகும். பிள்ளைகளின் வழியில் சங்கடம் ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் சக்தி உண்டாகும். தேவைகள் தக்க சமயத்தில் பூர்த்தியாகும். முக்கிய முடிவு எடுக்கும் போது கவனமாக செயல்படுவது நல்லது. பூர்வீகச் சொத்து விவகாரத்தில் பிரச்னை தோன்றினாலும் எதிர்பார்த்த நன்மையை அடைவீர்கள். உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்பு விலகும். சிலருக்கு புதிய பொறுப்பு, பதவி வந்து சேரும். வருமானம் உயரும். வெளிநாட்டிற்கு செல்லும் முயற்சி வெற்றி பெறும்.

தொழில்
பூர்வ புண்ணியாதிபதியான சனி ஆட்சியாக இருப்பதால் தொழில், வியாபாரம் சிறப்படையும். லேத், ஒர்க்‌ஷாப், ஸ்பேர் பார்ட்ஸ் உற்பத்தி, சின்னத்திரை, நவீன சாதனம்,  டிராவல்ஸ், கம்ப்யூட்டர், கமிஷன் ஏஜன்சி, குடிநீர், ஆட்டோமொபைல்ஸ் போன்ற தொழில் நடத்துவோர்  முன்னேற்றம் காண்பர்.

பணியாளர்கள்
ஒரு பக்கம் உழைப்பு அதிகரித்தாலும் மறு பக்கம்  செல்வாக்கு உயரும். புத்திசாலித்தனத்தால் நினைத்ததை சாதிப்பீர்கள். பதவி உயர்வு, இடமாற்றம் போன்ற எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும்.

பெண்கள்
உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். சுயதொழில் செய்வோர் எதிர்பார்த்த லாபம் காண்பர்.  படித்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். பணியாளர்களின் விருப்பம் நிறைவேறும். குடும்பத்தில் பிரச்னைகள் மறையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் உண்டாகும். குடும்பத்தை திறமையாக நடத்திச் செல்வீர்கள்.

கல்வி
பொதுத்தேர்வு, போட்டித் தேர்வுகளில் திறமை வெளிப்படும். உங்கள் தொழில் ஸ்தானாதிபதி, லாபாதிபதியின் நிலையறிந்து மேற்கல்வியை தேர்வு செய்வது நன்மையளிக்கும்.

உடல்நிலை
வேலைப்பளுவின் காரணமாக உடலில் சோர்வு, சங்கடம்  ஏற்படும். அல்சர், நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, பரம்பரை நோய்களால் சங்கடம் அதிகரிக்கும். ஆனாலும் சிகிச்சையால் அவற்றிலிருந்து விடுபடுவீர்கள்.

குடும்பம்
பணவரவால் குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் மறையும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும். புதிய வீட்டிற்கு குடியேறுவீர்கள். உறவினர் ஆதரவு அதிகரிக்கும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். சாதுர்ய செயல்பாட்டால் வருமானம் அதிகரிக்கும். புதிய சொத்து, நவீன பொருட்கள் சேர்க்கை உண்டாகும்.

பரிகாரம் : பவுர்ணமியன்று அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்தால் குறை தீரும்.


விசாகம்: நன்மை அதிகரிக்கும்

தனகாரகனான குருவின் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் 1,2,3 ம் பாதங்களில் (துலாம்) பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு (விருச்சிகம்) செவ்வாய் ராசிநாதனாகவும் உள்ளனர்.
தமிழ்ப் புத்தாண்டான குரோதி ஆண்டில் விசாகம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சங்கடம் நீங்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். நன்மை அதிகரிக்கும். குடும்பம், தொழில், பணியில் இருந்த நெருக்கடி விலகும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். புது வீடு கட்டி குடியேறுவர். வருமானம் பலவழியிலும் வரும். வேலைக்காக முயற்சித்தவர்களின் விருப்பம் நிறைவேறும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 1 முதல் குருபார்வை உண்டாவதால் உடல், மனதில் இருந்த சங்கடங்கள் விலகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். சொத்து சேரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள்.

சனி சஞ்சாரம்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி, ஜூன் 19 - நவ. 4 வரையிலான வக்கிர காலத்திலும், 2025, பிப். 27 - மார்ச் 29 வரையிலான அஸ்தமன நிலையிலும் 4 பாதங்களில் பிறந்தவர்களையும் சங்கடங்களில் இருந்து பாதுகாப்பார். முயற்சிகளை வெற்றியாக்குவார். பணவரவில் இருந்த தடைகளை அகற்றுவார். யோக பலன்கள் வழங்கி முன்னேற்றம் தருவார். 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்கள் பிள்ளைகளின் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் தங்களின் உடல்நலம், தாயாரின் உடல்நிலையிலும் கவனம் செலுத்துவது அவசியம்.

ராகு, கேது சஞ்சாரம்
ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 6ம் இட ராகு நன்மைகளை அதிகரிப்பார். வழக்கில் வெற்றி தருவார். உடல் நிலையில் இருந்த சங்கடம் தீரும். எதிர்ப்பு விலகும். 4 ம் பாதத்தினருக்கு 11ம் இட கேது, தொட்டதில் எல்லாம் வெற்றி. முயற்சியில் லாபம். பட்டம், பதவி, செல்வாக்கு என அதிகரிப்பார். பணம் பலவழியிலும் வரும். அந்தஸ்து உயரும். சொத்து சேர்க்கை உண்டாகும்.

குரு சஞ்சாரம்
1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை 7ம் இடத்திலும், மே1 முதல் அஷ்டமத்தில்  குரு சஞ்சரிப்பார். ஏப். 30 வரை குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். எதிர்பாராத நெருக்கடி, சங்கடங்களை ஏற்படுத்தி சோதனைக்கு ஆளாக்குவார். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை நெருக்கடி இருந்தாலும், மே 1 முதல் நினைத்ததில் வெற்றியும், குடும்பத்தில் சுபநிகழ்ச்சியும்,  வேலை தேடுவோருக்கு தகுதியான வேலையும், திருமண வயதினருக்கு திருமண யோகத்தையும் உண்டாக்குவார். பணவரவை அதிகரிப்பார். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அதிர்ஷ்ட நிலையை உருவாக்குவார்.

சூரிய சஞ்சாரம்
1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜூலை 17 - செப். 16, டிச. 16 - 2025, ஜன. 13, மார்ச் 15 - ஏப். 13 காலங்களிலும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு  ஏப்.14 - மே 13, ஆக. 17 - அக் .17, 2025, ஜன. 14 - பிப். 12 காலங்களிலும் சூரிய பகவானின் சஞ்சார நிலைகளால் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர்கள். குடும்பம், தொழிலில் இருந்த சங்கடங்கள் விலகும். செல்வாக்கு உயரும். உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்பு நீங்கும். வழக்கு, விவகாரங்கள் சாதகமாகும். பொருளாதார நிலை உயரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். இக்காலகட்டம் யோகமானதாக இருக்கும்.

பொதுப்பலன்
ஆண்டு முழுவதும் ராகு, கேது சஞ்சாரங்களும், குருவின் சஞ்சாரம், பார்வைகளும், 120 நாட்கள் சூரியன், 45 நாட்கள் செவ்வாயால் உண்டாகும் நன்மைகளும் எதிர்பார்ப்புகளை பூர்த்தியாக்கும். முன்னேற்றத்தை உண்டாக்கும். குடும்பத்தில் சுபநிகழ்வுகளை நடத்தி வைக்கும். தொழில், வியாபாரத்தில் ஆதாயத்தை ஏற்படுத்தும். வழக்குகளில் சாதகத்தை வழங்கும். பொன், பொருள், பூமி, வாகனச் சேர்க்கை தரும். முயற்சியில் எதிர்பார்த்த வெற்றியை ஏற்படுத்தும்.

தொழில்
தொழிலில் போட்டி, பிரச்னை என்றிருந்தாலும் வெற்றி பெறுவீர்கள். சிலர் தொழிலில் நவீன மாற்றம் செய்வீர்கள். புதிய தொழில் தொடங்குவீர்கள். உங்கள் முயற்சிகள் லாபமாகும். இக்காலத்தில் உங்களை மட்டுமே நம்பி செயல்படுவது நல்லது.

பணியாளர்கள்
அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் அதன் காரணமாக செல்வாக்கும் உயரும். சிலருக்கு விரும்பிய இட மாற்றம், ஊர் மாற்றம் ஏற்படும். தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கும் இக்காலத்தில் செல்வாக்கு அதிகரிக்கும் உடன் பணிபுரிவர்கள் ஆதரவாக இருப்பர். சிலருக்கு புதிய பொறுப்புகள் ஏற்படும்.

பெண்கள்
அரசு பணியாளர்களுக்கு புதிய பொறுப்புகள் உண்டாகும். சுயதொழில் செய்பவர்கள் திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பர். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். புதிய சொத்து, வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவீர்கள். கணவர் ஆதரவாக இருப்பார். சேமிப்பு அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும்.  நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும்.

கல்வி
பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைவீர்கள். எதிர்பார்த்த பாடப்பிரிவு, கல்லுாரிக்காக முயற்சி செய்வீர்கள். சுயஜாதகத்தில் தொழில்காரகன், லாப காரகனின் நிலையறிந்து மேற்படிப்பை தேர்வு செய்வது நல்லது.

உடல்நிலை
நோய்களால் சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். நீண்ட கால நோய்களும் இக்காலத்தில் மருத்துவத்திற்கு கட்டுப்படும். பரம்பரை நோய்களுக்கு நவீன மருத்துவத்தால் தீர்வு கிடைக்கும். மூச்சுத்திணறல் இருப்பவர்கள் உடல்நலனில் கவனம் செலுத்துவதும், சிகிச்சைப் பெறுவதும் நல்லது.

குடும்பம்
குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகி முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். தம்பதியருக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி, திருமண முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். பொன், பொருள் சேரும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணி  தொடரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும்.

பரிகாரம்: வியாழனன்று குருபகவானுக்கு முல்லை மலர் சாத்தி வழிபட வாழ்வு வளமாகும்.

 
மேலும் தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை) »
temple news
அசுவினி; முயற்சியில் வெற்றிரத்தக்காரகன் செவ்வாய், மோட்சக்காரகன் கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, ... மேலும்
 
temple news
கார்த்திகை: யோகமான காலம்ஆற்றல் காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும் 1ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: உழைப்பால் உயர்வீர்கள்சகோதர, தைரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: நல்லகாலம் வந்தாச்சுதனக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் ... மேலும்
 
temple news
மகம்: நிதானம் அவசியம்ஞான மோட்சக்காரகனான கேது, ஆன்ம காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar