Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025 மகரம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025 மகரம் : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025
முதல் பக்கம் » தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை)
தனுசு : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025
எழுத்தின் அளவு:
தனுசு : தமிழ்ப்புத்தாண்டு 2024- 2025

பதிவு செய்த நாள்

09 ஏப்
2024
03:04

மூலம்: தொழிலில் லாபம்

ஞானக்காரகனான கேதுவை நட்சத்திர நாதனாகவும், தனக்காரகனான குருவை ராசிநாதனாகவும் கொண்ட உங்களுக்கு, குரோதி ஆண்டில் முயற்சிகள் வெற்றியாகும். தொழில் சிறப்படையும். ஆரோக்கியம் சீராகும். வேலைத் தேடுவோருக்கு வேலை அமையும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, எதிர்பார்த்த இட மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும்.

சனி சஞ்சாரம்
3 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் செயல்கள் யாவும் வெற்றியாகும். உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பார்த்த பொறுப்பு, பதவி வரும். கலைஞர்கள் ஆதாயம் காண்பர்.  

ராகு, கேது சஞ்சாரம்
4 ல் ராகு, 10ல் கேது இருக்கும் நிலையில் அந்நியரால் ஆதாயம் அதிகரிக்கும். வெளிநாட்டு தொடர்பு, வர்த்தகம் ஆதாயம் தரும். பணி, தொழிலில் கவனம் செலுத்துவதால் நன்மை அதிகரிக்கும். மனதில் இருந்த சங்கடம் விலகும். சிலர் சந்தோஷத்திற்காக தவறான வழியில் செல்லும் வாய்ப்பு ஏற்படலாம் கவனம். தாய்வழி உறவுகளுடன் வீண் பிரச்னைகள் ஏற்படும். உழைப்பிற்கேற்ப வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தொழில் போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வர்.

குரு சஞ்சாரம்
ஏப். 30 வரை 5ல் சஞ்சரிக்கும் குருவால் செல்வாக்கு உயரும். விருப்பம் பூர்த்தியாகும்.
மே 1 முதல் 6 ல் சஞ்சரிக்கும் குருவால் நற்பலன் வழங்க முடியாமல் போகும். என்றாலும் குரு பார்வை 10, 12, 2 ம் இடங்களுக்கு உண்டாவதால் தொழில், வியாபாரத்தில் தடைகள் நீங்கும். லாபம் அதிகரிக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். குடும்பத்தில் நெருக்கடி தீரும்.  தேவைக்கேற்ற வரவு வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நிம்மதியான உறக்கம், சந்தோஷம் ஏற்படும்.

சூரிய சஞ்சாரம்
மே 14 - ஜூன் 14, செப்.17 - நவ.15, 2025, பிப்.13 - மார்ச் 14 காலங்களில் 6,10,11,3 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியனால் தொழில், உத்தியோகம், குடும்பத்தில் இருக்கும் சங்கடம் விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். முயற்சியில் ஏற்பட்ட தடை நீங்கும். அரசு வழியில் ஏற்பட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். உடல் பாதிப்பு விலகும். எதிரிகள் பலமிழப்பர். போட்டி, எதிர்ப்பு, வழக்குகளால் பாதிப்பையும் ஏற்படுத்த முடியாத அளவிற்கு உங்கள் நிலை உயரும். நினைத்ததை சாதிக்கும் நிலை ஏற்படும்.

பொதுப்பலன்
குரு 6 ம் இடத்திற்கு மாறினாலு ம் அவரது பார்வைகளால் நெருக்கடி, சங்கடங்கள்  விலக ஆரம்பிக்கும். 3 ம் இட சனியால் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். நினைத்ததை சாதிக்கும் நிலை உண்டாகும். எதிர்பார்ப்பு  நிறைவேறத் தொடங்கும். தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும். துணிச்சல், தைரியம் அதிகரிக்கும். சொத்து சேர்க்கை உண்டாகும். வேலை தேடுவோருக்கு நல்ல தகவல் வரும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகி உங்கள் கைக்கு வந்து சேரும்.

தொழில்
நஷ்டத்தில் இயங்கிய தொழில் லாபத்தை நோக்கிச்செல்லும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். வருமானம் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பேன்ஸி ஸ்டோர், வெள்ளி. வியாபாரம், ஜூவல்லரி, ஜவுளி, கல்வி நிறுவனம், பப்ளிகேஷன்ஸ், ஏற்றுமதி இறக்குமதி தொழில்கள் முன்னேற்றம் அடையும். வெளிநாட்டு தொடர்புகள் லாபத்தை வழங்கும்.

பணியாளர்கள்
உழைப். மரியாதையும் அதிகரிக்கும். எதிர்பார்த்த பொறுப்பும், ஊதிய உயர்வும் ஏற்படும். அரசு ஊழியர்களுக்கு இக்காலம் யோகமான காலமாக இருக்கும். கடந்தகால வழக்குகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும்.

பெண்கள்
குரோதி ஆண்டு யோக பலன்களை வழங்கும். குடும்ப நெருக்கடிகள் விலகும். சுய தொழில் செய்து வருபவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். முயற்சிகள் யாவும் வெற்றியாகும். கணவருடன் இணக்கமான நிலை ஏற்படும்.  பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்கள் உங்களைப் பாராட்டுவார்கள். புதிய சொத்து, வாகனம் வாங்கும் விருப்பம் நிறைவேறும். இழந்தவற்றையெல்லாம் மீட்டெடுக்கும் காலமாக குரோதி ஆண்டு இருக்கும்.

கல்வி
பொதுத்தேர்வில் வெற்றியடைவீர்கள். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மேற்கல்விக்காக  சிலர் வெளி மாநிலம், வெளிநாடு செல்வீர்கள். திறமை அறிந்து மேற்படிப்பை தேர்வு செய்வது நல்லது.

உடல்நிலை
கடந்த காலத்தில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பரம்பரை நோய்கள், விபத்தால் ஏற்பட்ட சங்கடங்களில் இருந்து மீள்வீர்கள். ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

குடும்பம்
குடும்பத்தில் வருமானம் அதிகரிக்கும். நீண்ட நாளாக தடைபட்ட செயல்கள் நடந்தேறும்.  செல்வாக்கு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் சென்று குடும்பத்தை நடத்திச் செல்வீர்கள். ஒரு சிலர் புதிய வாகனம், புதிய வீடு என்று வாங்குவீர்கள். நீங்கள் விரும்பிய மாற்றங்கள் இந்த வருடத்தில் ஏற்படும். பிள்ளைகளின் மேற்கல்வி முயற்சி வெற்றியாகும்.

பரிகாரம்: சிவபெருமானை திங்களன்று வழிபட்டு வர சங்கடங்கள் தீரும்.


பூராடம்: நினைத்தது நிறைவேறும்

அதிர்ஷ்ட காரகனான சுக்கிரனை நட்சத்திர அதிபதியாகவும், ஞான காரகனான குருவை ராசி நாதனாகவும் கொண்ட உங்களுக்கு  குரோதி ஆண்டு உங்கள் வாழ்வின் திருப்புமுனையாக அமையும். சங்கடங்களில் இருந்து விடுபட்டு நிம்மதி காண்பீர்கள். முயற்சி வெற்றி அடையும். பொருளாதார நிலையில் மேம்பாடு உண்டாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்களின் செல்வாக்கு உயரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வழக்கில் சாதகமான நிலை உண்டாகும். எதிர்பாலினரால் ஏற்பட்ட தொல்லை விலகும்.

சனி சஞ்சாரம்
3ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியால் சங்கடம் விலகும். எதிர்பாராத வாய்ப்பு உங்கள் வாசல் கதவைத் தட்டும். முயற்சியில் ஆதாயம் ஏற்படும். உறவினர் உதவியால் உயர்வை எட்டுவீர்கள். பணியில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த செல்வாக்கு, அந்தஸ்து ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

ராகு, கேது சஞ்சாரம்
ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் இருக்கும் நிலையில் விருப்பம் எளிதாக நிறைவேறும். ஆசை பூர்த்தியாகும். அந்நிய மொழி, இனத்தால் ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்களால் தொழில் முன்னேற்றமடையும். வெளிநாட்டு தொடர்புகளால் ஆதாயம் ஏற்படும். பணியில் வேலைப்பளு அதிகரித்தாலும் அதற்கேற்ப வருமானம் வரும். தொழிலில் கூடுதல் கவனம் செலுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். செல்வாக்கு உயரும். சிலர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு நிதியுதவி செய்வர்.

குரு சஞ்சாரம்
ஏப்.30 வரை பூர்வ புண்ணியத்தில் இருக்கும் குருவால் குலதெய்வ அருள் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். ஆனால் மே 1 முதல் சத்ரு ஸ்தானத்தில் இருக்கும் குருவால் நன்மை இல்லாவிட்டாலும் அவரது 5,7,9 பார்வைகளால் செல்வாக்கு அதிகரிக்கும். மற்றவரால் மதிக்கும் நிலை ஏற்படும். பணிபுரியும் இடத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழில், வியாபாரம் முன்பைவிட முன்னேற்றம் அடையும். பணவரவில் இருந்த தடைகள் விலகி எதிர்பார்த்த வரவு வரும். நிம்மதியான உறக்கம், எதிர்பார்த்த சந்தோஷம் ஏற்படும்.

சூரிய சஞ்சாரம்
மே 14 - ஜூன் 14, செப். 17 - நவ. 15, 2025, பிப். 13 - மார்ச். 14 காலங்களில் சூரியனின் 6,10,11,3 ம் இட சஞ்சாரத்தால் முன்னேற்றம் அதிகரிக்கும். முயற்சி வெற்றியடையும், தொழில், பணியில் இருந்த சங்கடம் விலக ஆரம்பிக்கும். வழக்குகளில் இருந்து விடுதலை உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழில் தொடங்கும் முயற்சி லாபத்தை உண்டாக்கும். தொழிலை விரிவு செய்வீர்கள். எதிர்பார்த்த வரவு வரும். உடல் நிலை சீர்படும். துணிச்சல் அதிகரிக்கும். உங்களை எதிர்த்தவர்கள் விலகிச் செல்வர்.

பொதுப்பலன்
நெருக்கடி விலகும். செயல்களில் வெற்றி உண்டாகும். குழப்பம் விலகி தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில், வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள். உழைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். கடந்த கால பிரச்னைகளை நினைத்துப் பார்த்து புதிய முயற்சியில் கவனமாக செயல்படுவீர்கள். உழைப்பும் முயற்சியும் உங்களுக்கு வெற்றியை உண்டாக்கும். பொருளாதார நிலை உயரும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு மேலோங்கும். சிலருக்கு புதிய பதவி வந்து சேரும்.

தொழில்
தொழில்காரகன்  சாதகமாக இருப்பதால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த வளர்ச்சியை அடைவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். லாபம் அதிகரிக்கும். இயந்திரத் தொழில், விவசாயம், கால்நடை, வாகன உற்பத்தி, வாகன விற்பனை, கலைத்துறை, பேன்சி ஸ்டோர், அழகு சாதனம், அச்சுத்தொழில், சினிமா, சின்னத்திரை, பதிப்பகம் தொழில்களில் லாபம் அதிகரிக்கும்.

பணியாளர்கள்
உழைப்பிற்குரிய மரியாதை கிடைக்கும். ஊதிய உயர்வு, புதிய பொறுப்பு உங்கள் நிலையை உயர்த்தும். முதலாளி உங்களைப் புரிந்து கொண்டு ஆதரவு காட்டுவார். விருப்பங்கள் நிறைவேறும். செல்வாக்கு உயரும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும்.

பெண்கள்
குருவின் பார்வையால் குடும்ப சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கும் நிலை உண்டாகும். பணவரவு உங்கள் நிலையை உயர்த்தும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். சோர்வுற்ற மனம் இனி சுறுசுறுப்படையும். பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வீர்கள். வேலை தேடி வந்தவர்களுக்கு வேலை அமையும். சுய தொழில் செய்வோரின் விருப்பம் நிறைவேறும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பணிபுரியும் இடங்களில் இருந்த சங்கடம் விலகி செல்வாக்கு தோன்றும். எதிர்பாலினரால் ஏற்பட்ட தொல்லை விலகும். சிலருக்கு புதிய வாகனம், சொத்து சேரும்.

கல்வி
பொதுத்தேர்வு, போட்டித்தேர்வுகளில் வெற்றி ஏற்படும். மேற்கல்வி பயிலும் எண்ணம் நிறைவேறும். விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.

உடல்நிலை
பரம்பரை நோய், மறைமுகநோய் என தொந்தரவு நீடித்தாலும் சிகிச்சைக்கு அவை கட்டுப்படும். விபத்துகளில் சிக்கி சிகிச்சை பெறுபவர்கள் இனி எழுந்து நடமாடும் நிலை உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும்.

குடும்பம்
எதிர்பார்ப்பு நிறைவேறும். பிள்ளைகளின் மேற்படிப்பு, வேலை, புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் தடைகள் இனி மறையும். முயற்சிகள் வெற்றியாகும். பணவரவு அதிகரிக்கும். தம்பதியருக்குள் இருந்த சங்கடம் விலகும். பெரியோர் ஆதரவு உண்டாகும். சொத்து சேர்க்கை ஏற்படும். கடுமையாக உழைத்து நினைத்ததை சாதிப்பீர்கள். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட நன்மை அதிகரிக்கும்.


உத்திராடம்: சொத்து சேரும்

ஆற்றல் காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும், 1ம் பாதத்தில் (மீனம்) பிறந்தவர்களுக்கு தனக்காரகனான குரு ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதங்களில் (மகரம்) பிறந்தவர்களுக்கு ஆயுள்காரகனான சனி ராசிநாதனாகவும் உள்ளனர்.

பிறக்கும் தமிழ்ப் புத்தாண்டில் உத்திராடம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 3ம் இட சனியால் முயற்சி வெற்றியாகும் அதிர்ஷ்டம் உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நினைத்த செயல்களில் வெற்றி காண்பீர்கள். இழந்தவற்றை மீட்கும் ஆற்றல், சொத்து சேர்க்கை என ஆதாயம் உண்டாகும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 3 ம் இட ராகு, மே 1 முதல் 5 ம் இட குருவால் அதிர்ஷ்டம் உண்டாகும் வெளிநாட்டு தொடர்பு, ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் ஆதாயத்தை உண்டாக்கும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். குடும்பத்தில் பிரச்னைகள் விலகும். புதிய சொத்து சேரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும்.

சனி சஞ்சாரம்
கும்பத்தில் இருக்கும் சனியால், 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட நிலை உண்டாகும். முயற்சி யாவும் லாபமாகும். கடந்த கால நெருக்கடி விலகும். குடும்பத்தில் இருந்த சங்கடம்  நீங்கும். தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு  ஜூன் 19 -  நவ. 4 வரையிலான வக்கிர காலத்திலும், 2025, பிப். 27 - மார்ச் 29 வரையிலான அஸ்தமன நிலையிலும் சங்கடங்கள் விலகி நன்மை உண்டாகும். தொழில், வியாபாரம், குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். நினைத்தது நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வாகனம் வாங்கும், தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும்.

ராகு, கேது சஞ்சாரம்
ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் இருக்கும் நிலையில் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 4ம் இட ராகுவும் 10 ம் இட கேதுவும் அலைச்சலை அதிகரிப்பர். உடல் நிலையில் சங்கடம் ஏற்படுத்துவர். தொழிலில் தடையும், வருமானத்தில் இழுபறியும் உண்டாக்குவர். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 3ல் இருக்கும் ராகுவும், 9ல் இருக்கும் கேதுவும் தொழிலில் முன்னேற்றம், பணியில் உயர்வு, வருமானத்தில் நிறைவு, தொட்டதெல்லாம் வெற்றி என்ற நிலையை உண்டாக்குவர். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் ஆற்றலை ஏற்படுத்துவர். முயற்சிகளில் வெற்றியை உண்டாக்குவர்.

குரு சஞ்சாரம்
உத்திராடம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை 5ல் இருக்கும் குரு வாழ்வில் முன்னேற்றம், பொன், பொருள் சேர்க்கை, சமூக அந்தஸ்தை வழங்குவார். அதன்பிறகு இந்நிலை மாறும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 1 முதல் நன்மைகளை அதிகரிப்பார். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார். சமூகஅந்தஸ்தை உயர்த்துவார். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகளை ஏற்படுத்துவார். சுபநிகழ்வுகளை நடத்தி வைப்பார். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்பு உண்டாகும். திருமண வயதினருக்கு நல்ல மணவாழ்க்கை அமையும்.

சூரிய சஞ்சாரம்
1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 14 - ஜூன். 14, செப். 17 - நவ. 15, 2025, பிப்.13 - மார்ச். 15 காலங்களிலும்,  2,3,4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜூன் 15 - ஜூலை 16, அக். 18 - டிச. 15, 2025, மார்ச்15 - ஏப். 13 காலங்களிலும் சூரியனால் நன்மை அதிகரிக்கும். நீண்டநாள் பிரச்னைகள் விலகும். வழக்குகள் சாதகமாகும். பணியில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். உடல் பாதிப்பு நீங்கும். ஆற்றல் வெளிப்படும்.

பொதுப்பலன்
குரோதி ஆண்டில் 1ம் பாதத்தினருக்கு  சனி பகவான் சாதகமான நிலையிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு  ராகுவும், மே. 1 முதல் குருவும், 4 பாதத்தினருக்கு ஆண்டில் 120 நாட்கள் சூரியனும், 45 நாட்கள் செவ்வாயும் அதிர்ஷ்ட நிலையை வழங்குவர். வாழ்க்கை வளமாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி, ஒற்றுமை ஏற்படும். தொழிலில் வளர்ச்சி உண்டாகும். பணவரவில் தடைகள் விலகும். பணியில் இருந்த பிரச்னைகள் நீங்கும். வேலைத் தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்பு உண்டாகும். திருமண வயதினருக்கு திருமணம் அமையும். பொன், பொருள், பூமி, வாகனச்சேர்க்கை உண்டாகும்.

தொழில்
தொழிலில் அக்கறை அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். விவசாயம், இயந்திரத் தொழில், பத்திரிகை, பதிப்பகம், கம்ப்யூட்டர் தொழில்கள், ஸ்டேஷனரி, ஆட்டோ மொபைல்ஸ், பேக்டரி, எலக்ட்ரானிக்ஸ், எக்ஸ்போர்ட், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் தொழில்கள் நல்ல வளர்ச்சி பெறும்.

பணியாளர்கள்
திறமை வெளிப்படும். வேலையில் முழுகவனம் செலுத்துவீர்கள். அதன் காரணமாக முதலாளியின் பாராட்டை பெறுவீர்கள். ஊதியம் உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். அரசு ஊழியர்களுக்கு மதிப்பு உயரும். எதிர்பார்த்த பொறுப்பு வந்து சேரும்.

பெண்கள்
கடந்தகால பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் அணுகுமுறையால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். மேற்கல்வி, வேலை வாய்ப்பு, திருமணம் என்ற கனவோடு இருப்பவர்களின் எண்ணம் நிறைவேறும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு உயரும். பொன், பொருள் சேரும்.

கல்வி
பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மேற்படிப்பிற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும்.

உடல்நிலை
உடல் நிலையில் பிரச்னை தோன்றி மறையும். வேலையின் காரணமாக டென்ஷன் அதிகரிக்கும். உறக்கம் இல்லாத நிலை உருவாகும். யோகா, தியானத்தில் ஈடுபடுவது நல்லது. சிலர் அல்சர், வாயு, பரம்பரை நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. சிகிச்சையாலும் சரியான உணவு முறையாலும் நிவாரணம் உண்டாகும்.

குடும்பம்
சங்கடங்கள் விலகும். செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் திருமணம், குழந்தை பாக்கியம், புதிய வீட்டிற்கு குடிபோகுதல் போன்ற சுபநிகழ்வுகள் நடைபெறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வெளிநாட்டு முயற்சி ஆதாயம் தரும். தம்பதியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக திட்டமிட்டு செயல்படுவீர்கள். வம்பு, வழக்கில் இருந்து விடுபடுவீர்கள். சேமிப்பு அதிகரிக்கும். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள்

பரிகாரம்: செவ்வாய், வெள்ளியன்று காளிகாம்பாளை வழிபட வாழ்க்கை சிறக்கும்.

 
மேலும் தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2024 முதல் 13.4.2025 வரை) »
temple news
அசுவினி; முயற்சியில் வெற்றிரத்தக்காரகன் செவ்வாய், மோட்சக்காரகன் கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, ... மேலும்
 
temple news
கார்த்திகை: யோகமான காலம்ஆற்றல் காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும் 1ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: உழைப்பால் உயர்வீர்கள்சகோதர, தைரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: நல்லகாலம் வந்தாச்சுதனக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் ... மேலும்
 
temple news
மகம்: நிதானம் அவசியம்ஞான மோட்சக்காரகனான கேது, ஆன்ம காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar