பதிவு செய்த நாள்
12
ஏப்
2025
03:04
மிருகசீரிடம்: நல்லநேரம் வந்தாச்சு..: சகோதர, தைரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1,2ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 3,4ம் பாதமான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர்.
பிறக்கும் விசுவாவசு ஆண்டில் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். தொழில் முன்னேற்றமடையும். வருமானம் அதிகரிக்கும். சொத்து சேரும். வேலை வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். 3, 4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு செலவு கட்டுப்படும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். வேலை வாய்ப்பு, சொந்த தொழில் கனவு நனவாகும்.
சனி சஞ்சாரம்: மிருகசீரிடம் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6, 2026 வரை ஜீவன சனியாவும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பாக்கிய சனியாகவும் சஞ்சரிப்பதால் 1, 2 ம் பாதத்தினர் தொழில், பணியில் கவனமாக செயல்படுவது அவசியம். வேலைப்பளு அதிகரிக்கும் என்பதால் வேலை மீது சலிப்பு உண்டாகலாம். தனியார், ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிவோர் வேறு வேலைக்கு முயற்சிப்பர். மருத்துவச் செலவும் அதிகரிக்கும் என்பதால் இடம், நகை என வாங்குவது நல்லது. 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொட்டது பொன்னாகும். நினைப்பது நடந்தேறும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். இடம், வாகனம் வாங்குவீர்கள். தொழிலின் மீது அக்கறை அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். தடைபட்ட வேலை நடந்தேறும். உடல்நிலை சீராகும். வழக்கு விவகாரம் வெற்றியாகும்
ராகு, கேது சஞ்சாரம்: மிருகசீரிடம் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப். 26 முதல் ராகு, ஜீவன ஸ்தானத்திலும், கேது, சுக ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் வியாபாரம், தொழிலில் அக்கறை உண்டாகும். பணியில் வேலைப்பளு அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும் என்றாலும், உழைப்பு அதிகரிக்கும். தாய்வழி உறவினரால் சங்கடம் உண்டாகும். உடலில் சிறு சிறு பாதிப்பு தோன்றும். 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ராகு பாக்கிய ஸ்தானத்திலும், கேது சகாய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் முயற்சிகள் வெற்றியாகும். கடந்த கால நெருக்கடி விலகும். வருமானம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். வீடு, மனை வாங்குவீர்கள்.
குரு சஞ்சாரம்:
மே 11 வரை ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 11 முதல் மிதுனத்தில் சஞ்சரித்து அக். 8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச. 21 அன்று மிதுனத்திற்கு வக்கிரமாக செல்பவர் மார்ச் 17, 2026ல் வக்ர நிவர்த்தியடைகிறார். இதனால் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் சங்கடம் விலகும். வருமானம் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சொந்த வீடு, வாகன கனவு நனவாகும். பொன், பொருள் சேரும். செல்வாக்கு, அந்தஸ்து, பட்டம், பதவி என கனவுகள் நனவாகும். 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை செலவு அதிகரித்தாலும் அதன்பின் அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்து கைக்கு வரும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். பொது வாழ்வில் செல்வாக்கு உயரும். புதிய வீடு, மனை வாங்குவீர்கள்.
சூரிய சஞ்சாரம:
ஆத்ம காரகனான சூரிய பகவான் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜூலை 17 –ஆக.16, அக்.18 – நவ.16, 2026. பிப்.13 – ஏப்.13 காலங்களிலும், 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, ஏப். 14 – மே15, ஆக.17 –செப்.16, டிச.16 – 2026 ஜன.14, மார்ச் 15 – ஏப்.13 காலங்களிலும் உங்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படுத்துவார். முயற்சிகள் வெற்றியாகும். உடல் பாதிப்பு விலகும். எதிரிகள் உங்களைக் கண்டு அச்சமடையும் நிலை உண்டாகும். இழுபறி வழக்குகள் சாதகமாகும். அரசு வழியில் வேலைகள் நடந்தேறும். எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். உத்தியோகம், தொழிலில் ஏற்பட்ட பிரச்னை மறையும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். லாபம் அதிகரிக்கும்.
செவ்வாய் சஞ்சாரம்: கிரகங்களில் சனி, ராகு – கேது, குருவிற்குப் பின் ஒரு ராசியில் அதிகநாள் நின்று பலன் தருபவர் செவ்வாய்தான். விசுவாவசு ஆண்டில் மிருகசீரிடம் 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்கள் 2025, ஏப். 14 – ஜூன் 8, செப்.16 –அக்.27, 2026, ஏப்.1 – ஏப்.13 காலங்களிலும், 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்கள், ஜூன் 8 – ஜூலை 30, அக். 27 – டிச.12 காலங்களிலும் தைரியமாகவும், துணிச்சலுடனும் செயல்படத் தொடங்குவீர்கள். நினைத்த வேலை நினைத்தபடி நடந்தேறும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். உடல் பாதிப்பு விலகும். ஆரோக்கியம் சீராகும். செல்வாக்கு, அந்தஸ்து உயரும். பிரச்னை, வழக்குகள் இருந்த இடம் மறையும். குடும்பம், தொழில், உத்தியோகம் என அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும். வீடு, மனை, வாகன யோகம் உண்டாகும். வரவு பல வகையிலும் அதிகரிக்கும். அரசியல் வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். செல்வாக்கு உயரும்.
பொதுபலன்:
முயற்சிகள் வெற்றியாகும். தொழில் முன்னேற்றமடையும். பொருளாதார நிலை உயரும். பங்குச்சந்தை லாபம் தரும். வருமானம் பல வழிகளில் வரும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். அரசு வழி வேலைகள் வெற்றியாகும். புதிய சொத்து. புதிய தொழில் என உங்கள் கனவுகள் நனவாகும்.
தொழில்:
தொழில் முன்னேற்றமடையும். இடையில் ஏற்பட்ட தடை விலகும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், மருத்துவம், கெமிக்கல், பெட்ரோல், உணவகம், நிதி நிறுவனம், இன்டஸ்ட்ரீஸ், பங்கு வர்த்தகம், விவசாயத்துறையில் லாபம் தரும். ஆசிரியர்கள், காவல்துறையினர், பேரிடர் மீட்புத் துறையினர் மேன்மை அடைவர்.
பணியாளர்கள்:
அரசு பணியாளர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பதவி உயரும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். நெருக்கடி விலகும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களின் நிலை உயரும். சிலருக்கு வேலை நிரந்தரமாகும். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதுடன் ஊதியம் உயரும்.
பெண்கள்:
அவமானம், பிரச்னை, வேலையில் போராட்டங்களை சந்தித்த நிலை மாறும். வேலையில் முன்னேற்றம், செல்வாக்கு ஏற்படும். கணவருடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். சுய தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். பொன், பொருள் சேரும். குடும்பத்தினர் ஆதரவு கூடும்.
கல்வி: பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். போட்டித் தேர்வு முடிவுகளும் சாதகமாகும். உயர் கல்விக் கனவு நனவாகும்.
உடல் நிலை:
விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றவர்கள், பரம்பரை நோய், தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணம் பெறுவர். சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும்.
குடும்பம்:
எதிர்பார்த்த பணம் வரும். பொருளாதார நிலை உயரும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். கிரகப்பிரவேசம், திருமணம் என சுபநிகழ்ச்சி நடந்தேறும். புதிய சொத்து, பொன், பொருள் சேரும். சமூக அந்தஸ்து உயரும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். விலகிய உறவினர்கள் உங்களைத் தேடி வருவர்.
பரிகாரம்: ராமநாத சுவாமியை வழிபட சங்கடம் விலகி நன்மை அதிகரிக்கும்.
திருவாதிரை: யோகமான காலம்..
அறிவுக்காரகனும், யோகக்காரகனும் இணைந்து நின்று வழிநடத்தும் உங்களுக்கு,
பிறக்கும் விசுவாவசு ஆண்டு யோகமான காலமாக அமையும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். தடைபட்ட வேலை நடந்தேறும். குடும்பத்தில் நெருக்கடி நீங்கும். தொழில் முன்னேற்றமடையும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். செலவு கட்டுப்படும். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். தெய்வபலம் கூடும். பெரிய மனிதர்கள் உதவி செய்வர். உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.
சனி சஞ்சாரம்:
சனி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதுடன் அவரது 3, 7, 10 ம் பார்வைகளை உங்கள் ராசிக்கு 3, 6, 11 ம் இடங்களுக்கு செலுத்துவதால், மார்ச் 6, 2026 வரை நீங்கள் எடுக்கும் முயற்சி யாவும் வெற்றியாகும். இதுவரை இருந்த பாதிப்புகள் மறையும். நீங்கள் தொட்டது பொன்னாகும். நினைப்பது நடந்தேறும். போட்டியாளர்கள் விலகுவர். வழக்கில் வெற்றி உண்டாகும். நோய் நொடி விலகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். சுயதொழில் செய்பவர்களுக்கு பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். இடம், வீடு, வாகனம் வாங்குவீர்கள். தடைபட்ட வேலை நடந்தேறும். வரவு அதிகரிக்கும்.
ராகு, கேது சஞ்சாரம்: 2025 ஏப்.26 முதல் ராகு பாக்கிய ஸ்தானத்திலும், கேது சகாய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். செல்வாக்கு உயரும். இதுவரை இருந்த நெருக்கடி, பிரச்னைகள் நீங்கும். தொழிலில் இருந்த தடை விலகும். தடைபட்ட வருமானம் வரும். தெய்வபலம் கூடும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர்.
குரு சஞ்சாரம்:
மே 11 வரை உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 11 முதல் உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாக சஞ்சரித்து, அக்.8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ. 18 ல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21ல் மீண்டும் உங்கள் ராசிக்குள் வக்கிரமாக பிரவேசிப்பவர் மார்ச் 17, 2026ல் வக்ர நிவர்த்தியடைகிறார். இதனால் மே 11 வரை செலவு அதிகரித்தாலும் விருப்பங்கள் பூர்த்தியாகும். உடல்நிலை சீராகும். அதன்பின் ஜென்ம குருவால் அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். புதிய வீடு, மனை வாங்குவீர்கள்.
சூரிய சஞ்சாரம:
ஆத்ம காரகனான சூரிய பகவான், ஏப்.14 – மே15, ஆக.17 – செப்.16, டிச.16 – 2026 ஜன.14, மார்ச் 15 – ஏப்.13 காலங்களில் தன் 3, 6, 10, 11 சஞ்சார நிலைகளால் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். உங்களுக்கிருந்த சங்கடம், பிரச்னைகள் மறையும். உடல் பாதிப்புகள் விலகும். நெருக்கடி நீங்கும். எதிரிகள் பலமிழப்பர். இழுபறி வழக்கு சாதகமாகும். அரசுவழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். பணி, தொழிலில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். வருமானம் அதிகரிக்கும்.
செவ்வாய் சஞ்சாரம்: கிரகங்களில் சனி, ராகு – கேது, குருவிற்குப்பின் ஒரு ராசியில் அதிகநாள் நின்று பலன் தருபவர் செவ்வாய்தான். விசுவாவசு ஆண்டில், ஜூன் 8 – ஜூலை 30, அக். 27 – டிச. 12 காலங்களில் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் கையில் எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர்கள். உங்கள் உடல்நிலை சீராகும். செல்வாக்கு, அந்தஸ்து உயரும். குடும்பம், தொழில், வேலை என அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும். வீடு, வாகன யோகம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.
பொதுப்பலன்:
பாக்கிய சனி, சகாய ஸ்தான கேது, குருவின் பார்வைகள், சூரியனால் 120 நாட்கள், செவ்வாயால் 100 நாட்கள் என யோகப்பலன்கள் உண்டாவதால் ஆண்டு முழுவதுமே யோகமாக இருக்கும். தொழில் வளர்ச்சியால் பொருளாதார நிலை உயரும். பங்குச்சந்தை லாபம் தரும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும். உங்கள் மீதிருந்த வழக்கு தள்ளுபடியாகும். வருமானம் பலவழியில் வரும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். புதிய சொத்து, தொழில் போன்ற கனவுகள் நனவாகும்.
தொழில்:
பாக்கிய சனியால் தொழிலில் இருந்த தடை விலகும். தொழிலை சிலர் விரிவு செய்வீர்கள். புதிய முயற்சிகளுக்கு அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். நிதி நிறுவனம், ஏற்றுமதி இறக்குமதி, இன்டஸ்ட்ரீஸ், பங்கு வர்த்தகம், வாகனம், இயந்திரம், டிராவல்ஸ், பதிப்பகம், கல்வி நிறுவனம், கமிஷன் ஏஜன்சி, சினிமா, டி.வி., யூடியூப், விவசாயம் லாபமடையும்.
பணியாளர்கள்: பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வும், விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும். தனியார் நிறுவன ஊழியர்களின் நிலை உயரும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
பெண்கள்:
திருமண வயதினருக்கு மே 11க்கு மேல் திருமணம் நடக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். கணவன், மனைவிக்குள் அன்பு கூடும். சுய தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கல்வி
மே 11 முதல் 5 ம் இடத்திற்கு குருபார்வை உண்டாவதால் உயர் கல்வி கனவு நனவாகும். போட்டித் தேர்வில் வெற்றி உண்டாகும். விரும்பிய கல்லுாரியில், விரும்பிய பாடத்தில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை:
வலது காது, தோள்கள், கைகள், நுரையீரல், வீசிங், ரத்த அழுத்தம், பரம்பரை நோய்கள், தொற்று நோய்கள் என பாதிப்பு ஏற்பட்டாலும் இக்காலத்தில் நிவாரணம் கிடைக்கும். மருத்துவ சிகிச்சை கை கொடுக்கும்.
குடும்பம்:
குடும்பத்தில் நெருக்கடி நீங்கும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவீர்கள். திருமண வயதினருக்கு மணமேடை ஏறும் பாக்கியம் உண்டாகும். சிலருக்கு வாரிசு உருவாகும். பொன், பொருள் சேரும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை விளக்கேற்றி வழிபட நன்மை உண்டாகும்.
புனர்பூசம்: முயற்சி வெற்றியாகும்..: ஞானக்காரகனான குருபகவானின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1,2,3 ம் பாதமான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும், 4ம் பாதமான கடகத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.
பிறக்கும் விசுவாவசு ஆண்டு 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முன்னேற்றமான ஆண்டாக இருக்கும். வியாபாரம், தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் நெருக்கடி நீங்கும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். புதிய சொத்து சேரும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நெருக்கடி அதிகரிக்கும். பொருளாதாரத்தில் குறைவு தோன்றும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, வருமானத்தில் தடை, உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். மறைமுகத் தொல்லை அதிகரிக்கும். விரயச் செலவு கட்டுக்கடங்காமல் போகும்.
சனி சஞ்சாரம்: புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6, 2026 வரை பாக்கிய சனியாகவும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அஷ்டம சனியாகவும் சஞ்சரிப்பதால் 1,2,3 ம் பாதத்தினருக்கு அதுவரை எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். உடல்நிலை சீராகும். பணி இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். தொழிலில் பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். இடம், வீடு, வாகனம் சேரும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பண நெருக்கடி, குடும்பத்தில் பிரச்னை, பிள்ளைகளால் சங்கடம், பூர்வீக சொத்து பிரச்னை, உடல் பாதிப்பு, மருத்துவச்செலவு, அவமானம், தொழிலில் தடை ஏற்படும்.
ராகு, கேது சஞ்சாரம்: புனர்பூசம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு 2025 ஏப். 26 முதல் ராகு பாக்கிய ஸ்தானத்திலும், கேது சகாய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் சமுதாயத்தில் முன்னேற்றம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும். வாழ்க்கையிலும், தொழிலிலும் உண்டான நெருக்கடிகள் நீங்கும். தடைபட்ட வருமானம் வரும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ராகு அஷ்டம ஸ்தானத்திலும், கேது தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் வருமானத்தில் தடை, குடும்பத்தில் பிரச்னை ஏற்படும். உடல்நிலையில் சங்கடம், உங்களுக்கும் கீழ்ப்பட்டவர்களால் அவமானம் சந்திக்க நேரிடும்.
குரு சஞ்சாரம்:
மே 11 வரை ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 11 முதல் மிதுனத்தில் சஞ்சரித்து அக்.8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18 அன்று கடகத்தில் வக்ரமாகி, டிச.21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்கிரமாக பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை செலவு அதிகரித்தாலும் விரும்பியதை அடைய முடியும். உடல் பாதிப்பு விலகும். வழக்கு வெற்றியாகும். அதன்பின் ஜென்ம குருவால் உழைப்பும் அலைச்சலும் அதிகரித்தாலும் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்து கைக்கு வரும். புதிய வீடு, வாகனம் அமையும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை நினைத்தது நடந்தேறும். வருமானம் அதிகரிக்கும். திருமணம், குழந்தை என்ற கனவு நனவாகும். சிலருக்கு மறுமணம் நடந்தேறும். சிலருக்கு மருத்துவச்செலவு ஏற்படும். பொன் பொருட்களை விற்று நிலைமைகளை சமாளிக்க வேண்டி வரும். மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய நம்பிக்கை உண்டாகும்.
சூரிய சஞ்சாரம்:
ஆத்ம காரகனான சூரியபகவான், 1, 2, 3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.14 – மே 15, ஆக.17 – செப்.16, டிச.16 – 2026 ஜன.14, மார்ச் 15 – ஏப்.13 காலங்களிலும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏப்.14 – ஜூன்14, செப்.17 – அக்.17, டிச.16 – 2026 ஜன.14 காலங்களிலும் தன் 3, 6, 10,11ம் சஞ்சார நிலைகளால் முன்னேற்றத்தை வழங்குவார். நெருக்கடியில் இருந்து பாதுகாப்பார். முயற்சிகளை வெற்றியாக்குவார். உடல் பாதிப்புகளை விலக்குவார். எதிரிதொல்லைகளை நீக்குவார். வழக்குகளை சாதகமாக்குவார். அரசுவழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்க வைப்பார். வருவாயை அதிகரிப்பார்.
செவ்வாய் சஞ்சாரம்: கிரகங்களில் சனி, ராகு – கேது, குருவிற்குப் பின் ஒரு ராசியில் அதிகநாள் நின்று பலன் தருபவர் செவ்வாய்தான். விசுவாவசு ஆண்டில் புனர்பூசம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜூன்8 – ஜூலை 30, அக்.27 – டிச.12 காலங்களிலும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜூலை30 – செப்.14, டிச.6 – ஜன.14 காலங்களிலும் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உங்களுக்கிருந்த நெருக்கடி விலகும். தைரியமாகவும் துணிச்சலாகவும் செயல்படும் நிலை உண்டாகும். வியாபாரம், தொழில், குடும்பத்தில் இருந்த போராட்டநிலை மாறும். கையில் எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர்கள். உடல் பாதிப்பு விலகும். செல்வாக்கு, அந்தஸ்து உயரும். பிரச்னை, வழக்குகள் இருந்த இடம் தெரியாமல் போகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும்.
பொதுப்பலன்: விசுவாவசு ஆண்டில் உங்கள் செயல்களில் நிதானமும் கவனமும் வேண்டும். பிறரை நம்பி எந்தவொரு வேலையிலும் இக்காலத்தில் ஈடுபட வேண்டாம். தொழிலில் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுவது நன்மையாகும். பணியில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். புதிய சொத்து. தொழில் என்ற கனவுகள் நனவாகும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதால் பிரச்னைகள் மறையும். முயற்சிக்கேற்ற ஆதாயம் உண்டாகும்.
தொழில்:
தொழில் முன்னேற்றமடையும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி, இன்டஸ்ட்ரீஸ், ஹார்டுவேர், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர், குடிநீர், ஜூவல்லரி, பங்கு வர்த்தகம், பதிப்பகம், கல்வி நிறுவனம், கமிஷன் ஏஜன்சி, விவசாயத் துறையில் லாபம் அதிகரிக்கும்.
பணியாளர்கள்:
உழைப்பு அதிகரிக்கும். சிலருக்கு வெளியூர் மாறுதல் ஏற்படும். தற்காலிகப் பணியாளர்கள் மேலதிகாரியின் ஆலோசனையை ஏற்பது நன்மை தரும். தனியார் நிறுவன ஊழியர்கள் தன்னுடன் பணிபுரிபவர்களை அனுசரிப்பது அவசியம்.
பெண்கள்:
குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். திருமணம், குழந்தை பாக்கியம், சொந்த வீடு, அரசு வேலை என்ற கனவுகள் நனவாகும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னை விலகும். பொன், பொருள் சேரும்.
கல்வி
மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். உயர்கல்வி என்ற லட்சியம் நிறைவேறும். விரும்பிய நிறுவனத்தில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை:
நீண்ட நாளாக உங்களை சங்கடப்படுத்திய நோய்கள், தொற்று நோய்கள் மருத்துவத்தால் குணமாகும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஆரோக்கியம் சீராகும்.
குடும்பம்:
சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். தம்பதியர் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்குவீர்கள். பொன், பொருள் சேரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். சேமிப்பை உண்டாக்குவீர்கள்.
பரிகாரம்: ஆலங்குடி குருபகவானை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.