Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம் : தமிழ்ப்புத்தாண்டு ராசி பலன்  கன்னி : தமிழ்ப்புத்தாண்டு ராசி பலன் கன்னி : தமிழ்ப்புத்தாண்டு ராசி பலன்
முதல் பக்கம் » தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2025 முதல் 13.4.2026 வரை)
சிம்மம் : தமிழ்ப்புத்தாண்டு ராசி பலன்
எழுத்தின் அளவு:
சிம்மம் : தமிழ்ப்புத்தாண்டு ராசி பலன்

பதிவு செய்த நாள்

12 ஏப்
2025
03:04

மகம்: செயலில் கவனம்.. ஆத்மகாரகனும், ஞான மோட்சகாரகனும் இணைந்து நின்று வழிநடத்தும் உங்களுக்கு,

விசுவாவசு ஆண்டு எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய ஆண்டாகும். தொழில், உத்தியோகம், குடும்பம், வியாபாரம் என அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும். எதிரிகள் எதையோ செய்து விட்டார்கள் என நீங்கள் நினைத்திடக்கூடிய அளவிற்கு நெருக்கடி அதிகரிக்கும் என்றாலும் அதை சமாளிக்கும் ஆற்றலும் உங்களுக்கு உண்டாகும். எந்த ஒன்றிலும் தனித்து நின்று போராடுவீர்கள்.


சனி சஞ்சாரம்:  

மார்ச் 3, 2026 வரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் பிரச்னைகளை சந்திக்க வைப்பார். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு, பிரிவு, அலைச்சல் அதிகரிப்பு, தாய், தந்தை உடல் பாதிப்பு, சுய கவுரவத்திற்கு பங்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் நிதானம் அவசியம். குடும்பத்தினர், நண்பர்களை அனுசரித்தால் சங்கடம் குறையும். ஜூலை 23 – நவ.18 காலத்தில் சனி பகவான் வக்கிரமடைவதால் இந்த பாதிப்பு மறையும்.


ராகு, கேது சஞ்சாரம்:  2025 ஏப். 26 முதல் ராகு உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தாதனத்திலும், கேது ஜென்ம ராசிக்குள்ளும் சஞ்சரிப்பதால் விசுவாவசு சோதனையான ஆண்டாக இருக்கும். குழப்பம், சஞ்சலம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும். தவறான நபர்களின் நட்பால் சட்ட சிக்கல்களுக்கு ஆளாகலாம். கவுரவம், அந்தஸ்தில் குறைபாடு, ஒழுக்கத்தில் தடுமாற்றம் ஏற்படலாம். அதனால் நல்லவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்லலாம் என்பதால் கிரக நிலையறிந்து வாழ்வது அவசியம்.


குரு சஞ்சாரம்:  மே 11 வரை ரிஷபத்தில் ஜீவன குருவாக சஞ்சரிப்பவர், மே 11 முதல் மிதுனத்தில் லாப குருவாக சஞ்சரித்து, அக். 8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச. 21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்கிரமாக பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் வக்ர நிவர்த்தியடைகிறார். குரு வக்ரம் அடையும் போது முன்பிருந்த ராசியின் பலனைத் தரக் கூடியவர் என்பதால் கடகத்தில் லாப குருவின் பலன்களையே தருவார். இதனால் மே 11 வரை உத்தியோகம், தொழிலில் நெருக்கடி இருந்து கொண்டே இருக்கும். அரசியல் வாதிகளுக்கும், பொது வாழ்வில் இருப்பவர்களுக்கும் அனைத்திலும் போராட்ட நிலை இருக்கும். மே 11 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வரவு அதிகரிக்கும். பாதிப்பு விலகும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். 7ல் சஞ்சரிக்கும் சனி, ராகுவிற்கு குருவின் பார்வை உண்டாவதால் எல்லா நெருக்கடிகளும் விலகும். குடும்பத்தில் இருந்த பிரச்னை மறையும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். அரசியலில் இருப்பவர்கள் பலம் கூடும். திருமண வயதினர் கனவு நனவாகும். 


சூரிய சஞ்சாரம்: 

ஆத்ம காரகனான சூரிய பகவான்,  மே 15 – ஜூலை 16, அக்.18 – நவ.16,  2026 ஜன.15 –பிப்.12 காலங்களில் தன் 10, 11, 3, 6 ம் சஞ்சார நிலைகளால் தொழில், வேலையில் முன்னேற்றம் தருவார். செல்வாக்கை உயர்த்துவார். பணவரவிற்கு வழியமைப்பார். தன்னம்பிக்கையையும், துணிச்சலையும் அதிகரிப்பார். உடல்நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். வம்பு வழக்குகளில் இருந்து விடுவிப்பார். எதிரிகளை பலமிழக்க வைப்பார். அரசுவழி முயற்சிகளை வெற்றியாக்குவார்.


செவ்வாய் சஞ்சாரம்:  செப். 14 –அக். 27, 2026 ஜன. 14 – பிப். 21 காலங்களில் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் முயற்சி வெற்றியாகும். சகோதர ஒற்றுமை உண்டாகும். தைரியம் கூடும். உடல் பாதிப்பு, வியாபாரத் தடைகள், வேலையில் உண்டான பிரச்னைகள் விலகும். செல்வாக்கு உயரும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும்.


பொதுப்பலன்: 7ல் ராகு, சனி. ஜென்ம ராசிக்குள் கேது சஞ்சரித்து நெருக்கடிகளை உண்டாக்கி பயமுறுத்தினாலும்  குருவின் சஞ்சார நிலை, பார்வைகள், சூரிய, செவ்வாய் சஞ்சார நிலை அனைத்திலிருந்தும் உங்களைப் பாதுகாக்கும். சுய ஜாதகத்தில் தசாபுத்தி சாதகமாக இருந்தால் நினைத்ததை சாதிப்பீர்கள். படிப்பு, வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தை பாக்கியம், புதிய தொழில், ஸ்திர சொத்து என கனவு நனவாகும்.


தொழில்:  

தொழில் முன்னேற்றம் பெறும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், கால்நடை, இயந்திரம், மருத்துவம், மெடிக்கல், ஏற்றுமதி, இறக்குமதி, ரியல் எஸ்டேட், ஹார்டுவேர், பங்குச்சந்தை, சினிமா தொழில்கள் லாபம் தரும்.


பணியாளர்கள்: வேலையில் கவனமாக இருப்பது அவசியம். வேலைகளில் நெருக்கடி அதிகரித்தாலும் பார்த்து வரும் வேலையை விடவேண்டாம். அரசு பணியாளர் அதிகாரிகளை அனுசரிப்பது நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் கிடைக்கும். உங்களின் செல்வாக்கை குறைப்பதற்காக முக்கியத்துவம் இல்லாத இடங்களில் உங்களை அமர்த்தலாம் என்றாலும் இக்காலத்தில் அனைத்தையும் ஏற்பது நல்லது. 


பெண்கள்: 

சப்தம ஸ்தானத்தில் சனி, ராகு சஞ்சரிப்பதுடன், ராசிக்குள் கேது சஞ்சரிப்பதால் புதியவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.  இல்லையெனில் பெயருக்கு களங்கம் ஏற்படலாம். வாழ்க்கைத்துணையின் ஆலோசனையை பின்பற்றினால் பாதுகாப்பு கூடும். உங்கள் நலனில் கூடுதல் எச்சரிக்கை தேவை. இளம்பெண்களுக்கு உயர் கல்வி, திருமணம் என்ற கனவு நனவாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். பணியாளர்கள் நெருக்கடிக்கு ஆளாக வாய்ப்பிருப்பதால் வேலையில் கவனம் தேவை. 


கல்வி 

மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். மே 11 வரை 4 ம் இடத்திற்கும், அதன்பின்  5 ம் இடத்திற்கும் குரு பார்வை உண்டாவதால் படிப்பில் ஆர்வம் கூடும். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பீர்கள். பொதுத்தேர்வு, போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும்.


உடல்நிலை 

7ல் சனி, ராகுவின் பார்வை ராசிக்கு உண்டாவதால் ராசிக்குள் கேதுவும் சஞ்சரிப்பதால் உடல் பாதிப்பு ஏற்படும். ஹார்ட் அட்டாக், விபத்து, தண்டுவட பாதிப்பு, மன அழுத்தம், மனபாதிப்பு என ஏதாவது வகையில் மருத்துவச்செலவு இருந்து கொண்டே இருக்கும்.


குடும்பம்: 

மே 11 வரை, குடும்ப ஸ்தானத்திற்கு குரு பார்வை இருப்பதால் எந்த பிரச்னையும் வராது.  நினைத்தது நடந்தேறும். மே11 முதல் சப்தம ஸ்தானத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதால் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை கூடும். நண்பர்களால் நன்மை உண்டாகும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். குழந்தை பாக்கியம் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பொன் பொருள் சேரும்.


பரிகாரம்: பவுர்ணமியன்று காளியை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.


பூரம்: எச்சரிக்கை தேவை.. ஆத்மகாரகனும்  அதிர்ஷ்டக்காரகனும் இணைந்து நின்று வழிநடத்தும் உங்களுக்கு,

விசுவாவசு ஆண்டு எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய ஆண்டாகும். தொழில், உத்தியோகம், குடும்பம், வியாபாரத்தில் ஏற்றம் இறக்கம் ஏற்படும். எந்த ஒன்றிலும் நிலை இல்லாமல் இருக்கும். மனம் அடிக்கடி குழம்பும். குடும்பம், பணிபுரியும் இடத்தில் நெருக்கடி அதிகரிக்கும் என்றாலும் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதி கிடைக்கும். வரவுகள் வரும். 


சனி சஞ்சாரம்:  

2026 மார்ச் 6 வரை 7ல் சஞ்சரிக்கும் சனி பகவான்  பின்னடைவு, சங்கடத்தை ஏற்படுத்துவார். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு. நண்பருடன் பகை, பெற்றோர் உடல்நிலையில் பாதிப்பு, சுய கவுரவம், செல்வாக்கு, அந்தஸ்திற்கு குந்தகம் ஏற்பட வாய்ப்பிருப்பதால்  நிதானம் அவசியம். ஜூலை 23 – நவ.18 காலத்தில் சனி வக்கிரமடைவதால் மேலே சொன்ன பாதிப்பு இல்லாமல் போகும்.


ராகு, கேது சஞ்சாரம்:  2025 ஏப். 26 முதல் ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்திலும், கேது ராசிக்குள்ளும் சஞ்சரிப்பதால் விசுவாவசு சோதனையான ஆண்டாக இருக்கும். ராசிக்குள் கேது சஞ்சரிக்கும் காலத்தில் தேவையற்ற குழப்பம், பயம் உண்டாகும். குடும்பத்தில் போராட்ட நிலை உண்டாகும். தவறான நபர்களிடம் அவர்களின் சுயரூபம் தெரியாமல் பழகுவீர்கள். அவர்களால் பாதகம் ஏற்படலாம். பொருளாதார இழப்பு ஏற்படலாம். சட்ட சிக்கலுக்கு ஆளாகலாம்.


குரு சஞ்சாரம்: மே 11 வரை ரிஷபத்தில் ஜீவன குருவாக சஞ்சரிப்பவர், மே 11 முதல் மிதுனத்தில் லாப குருவாக சஞ்சரித்து, அக்.8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்ரமாகவே பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் வக்ர நிவர்த்தியடைகிறார். குரு வக்ரமாகும் போது முன்பிருந்த ராசியின் பலனைத் தரக்கூடியவர் என்பதால் கடகத்தில் லாப குருவின் பலன்களை தருவார். இதனால் மே 11 வரை  தொழில், பணியில் நெருக்கடி தோன்றலாம். அரசியல்வாதிகளுக்கு நாளுக்கு நாள் போராட்ட நிலையாக இருக்கும். மே11 முதல் இந்நிலை மாறி அதிர்ஷ்டம் உண்டாகும். வியாபாரம் முன்னேற்றமடையும். தொழிலாளர் நிலை உயரும். பணவரவு அதிகரிக்கும். நினைத்ததை அடைவீர்கள். சப்தம ஸ்தானத்திற்கு குரு பார்வை உண்டாவதால் அங்கு சஞ்சரிக்கும் சனி, ராகுவால் ஏற்பட்ட நெருக்கடி மறையும். குடும்ப பிரச்னைகள் முடிவிற்கு வரும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும்.


சூரிய சஞ்சாரம்: 

உங்கள் ராசிநாதனான சூரியன்  மே 15 – ஜூலை 16, அக்.18 – நவ.16,  2026 ஜன.15 – பிப்.12 காலங்களில் உங்கள் ராசிக்கு 10, 11, 3, 6ல் சஞ்சரிப்பதால் பணியில் நெருக்கடி விலகும். தொழிலில் தடை நீங்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் லாபமடையும். சிலருக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும். அரசியல்வாதிகளுக்கு  செல்வாக்கு கூடும். சட்ட சிக்கல் முடிவிற்கு வரும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு மறையும். 


செவ்வாய் சஞ்சாரம்: விசுவாவசு ஆண்டில் செப். 14 – அக். 27, 2026 ஜன. 14 – பிப். 21 காலங்களில் செவ்வாயின் சஞ்சாரம் உங்கள் நிலையை உயர்த்தும். முயற்சி வெற்றியாகும். தொழில் முன்னேற்றம் பெறும். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் பலம் கூடும். உடல் பாதிப்பு, வியாபாரத் தடை, பணியில் சங்கடம், பிரச்னைகள் அனைத்தும் மறையும். 


பொதுப்பலன்: 

எத்தனை நெருக்கடி வந்தாலும் அதை சமாளிக்கும் சக்தியும் உண்டாகும். குரு, சூரியன், செவ்வாய் சஞ்சார நிலைகள் அனைத்திலிருந்தும் உங்களைப் பாதுகாக்கும். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல் சங்கடம் விலகும். படிப்பு, வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தை பாக்கியம், புதிய தொழில், ஸ்திர சொத்து, வாகனம் என கனவுகள் நனவாகும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பொன், பொருள் சேரும்.


தொழில்:  

தொழில் முன்னேற்றமடையும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். ஜூவல்லரி, பேன்சி ஸ்டோர், அழகு சாதனம், ஜவுளி, கவரிங், வாகன விற்பனையில் லாபம் உண்டாகும். சினிமா, டிவி, யூட்யூப் தொழில் முன்னேற்றம் பெறும். 


பணியாளர்கள்: வேலையில் நெருக்கடியும் பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்பிருப்பதால் செயல்களில் கவனமாக இருப்பது அவசியம். இக்காலத்தில் வேறு சிந்தனை வேண்டாம். தனியார் துறையினர் நிர்வாகத்தையும், உடன் பணிபுரிபவர்களையும் அனுசரிப்பது நல்லது. அரசு பணியாளர்கள் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். 


பெண்கள்: 

குடும்பம், அந்தஸ்து, கவுரவம் போன்றவற்றை எண்ணிப் பார்த்து நடப்பது நல்லது. கணவரின் துணை இல்லாமல் எந்த முயற்சியிலும் ஈடுபட வேண்டாம். பணிபுரியும் இடத்திலும், வெளியிலும் புதியவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். குழப்பத்திற்கு இடம் தராமல் விழிப்புடன் செயல்படுங்கள். பெண்களுக்கு உயர் கல்வி, திருமணக் கனவுகள் நனவாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும்.


கல்வி: 

படிப்பில் ஆர்வம் கூடும். ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பீர்கள். பொது, போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும்.


உடல்நிலை: 

பரம்பரை நோய், தொற்று நோய், பால்வினை நோய், விபத்து என ஏதாவது மருத்துவச்செலவு ஏற்படும். இக்காலத்தில் உடல்நிலையில் அக்கறையுடன் இருப்பது அவசியம். 


குடும்பம்: 

குடும்பத்தில் நெருக்கடி விலகும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். நினைத்தது நடந்தேறும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். புதிய சொத்து, வாகனம் வாங்குவீர்கள். குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பொன், பொருள் சேரும்.


பரிகாரம்: அக்னீஸ்வரரை வழிபட அல்லல் தீரும். நன்மை சேரும். 


உத்திரம்.. முன்னேற்றம் உண்டாகும்: ஆத்ம காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1ம் பாதமான சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனே ராசி நாதனாகவும், 2, 3, 4 ம் பாதங்களான கன்னியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர்.


பிறக்கும் விசுவாவசு ஆண்டில் 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் போராட்டம், நெருக்கடிகளை சந்தித்து அதன்பின் நன்மை அடையும் நிலை உண்டாகும். 2, 3, 4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். நீண்டநாள் முயற்சி வெற்றி பெறும். எண்ணியது நடந்தேறும். செல்வாக்கு உயரும். வாழ்வில் புதிய பாதை தெரியும். வழக்கு, நோய்  இல்லாமல் போகும்.


சனி சஞ்சாரம்: 

2026 மார்ச் 6 வரை உத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கண்டக சனியாக சஞ்சரிக்கும் சனி பகவான், உடல் பாதிப்பு, சங்கடத்தை ஏற்படுத்துவார். வாழ்க்கைத்துணைக்கும் உங்களுக்கும் விரிசல் வரலாம். நண்பருடன் கருத்து வேறுபாடு, பெற்றோரின் உடல்நிலையில் பாதிப்பை உண்டாக்குவார். ஜூலை 23 – நவ.18 காலத்தில் சனி பகவான் வக்கிரமடைவதால் மேலே சொன்ன பாதிப்பு இல்லாமல் போகும். 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சத்ரு ஜெய சனியாக நன்மைகளை அதிகரிப்பார். முன்னேற்றம் தருவார். செல்வாக்கை ஏற்படுத்துவார். எதிரியை பலம் இழக்க வைப்பார். உடல் நிலை, மன நிலையில் தெளிவை உண்டாக்குவார்.


ராகு, கேது சஞ்சாரம்: உத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 2025 ஏப்.26 முதல் ராகு சப்தம ஸ்தானத்திலும், கேது ராசிக்குள்ளும் சஞ்சரிப்பதால் அனைத்திலும் நெருக்கடி, போராட்டம் இருக்கும். சோதனை அதிகரிக்கும். வீண் குழப்பமும், பயமும் உண்டாகும். தவறான நபர்களின் நட்பால் அந்தஸ்துக்கு பாதகம் ஏற்படும். பொருளாதார இழப்பு உண்டாகும். 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, ராகு சத்ரு ஜெய ஸ்தானத்திலும், கேது விரய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் வாட்டி வதைத்த பிரச்னை எல்லாம் விலகும். பணிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். உங்களை விமர்சித்தவரும் வியக்கும் விதத்தில் முன்னேற்றம் இருக்கும்.


குரு சஞ்சாரம்: மே 11 மதியம் வரை ரிஷபத்தில் சஞ்சரிப்பவர், மே11 அன்றே மிதுனத்தில் சஞ்சரித்து, அக்.8 முதல் அதிசாரமாக கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, டிச.21ல் மீண்டும் மிதுனத்திற்குள் வக்ரமாகவே பிரவேசிப்பவர் 2026 மார்ச் 17ல் வக்ர நிவர்த்தி அடைகிறார். குரு பகவான் வக்ரம் அடையும் போது முன்பிருந்த ராசியின் பலனைத் தரக்கூடியவர் என்பதால் கடகத்தில் சஞ்சரிக்கும்போது மிதுன குருவின் பலன்களையே தருவார். இதனால் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் நெருக்கடி தோன்றும். அனைத்திலும் போராட்டம் இருக்கும். மே 11 முதல் இந்த நிலை மாறி அதிர்ஷ்டம் உண்டாகும். வியாபாரம் முன்னேற்றம் பெறும். பணவரவு அதிகரிக்கும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, ராகுவிற்கு குருவின் பார்வை உண்டாவதால் குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 11 வரை பாக்கிய குருவாக சஞ்சரிப்பதுடன் தன் பார்வைகளாலும் ஆதாயம் அளிப்பார்.   காதலில் வெற்றியையும், குழந்தை பாக்கியத்தையும் வழங்குவார். அதன்பின் பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் குருவால் பணியிடத்தில் நெருக்கடி அதிகமாகும். வியாபாரத்தில் தடை குறுக்கிடும். வருமானம் குறையும். 


சூரிய சஞ்சாரம்: உத்திரம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு  மே 15 – ஜூலை 16, அக். 18 – நவ. 16,  2026 ஜன.15 – பிப்.12 காலங்களிலும், 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, ஜூன் 15 – ஆக.16, நவ. 17 – டிச.15, 2026 பிப்.13 – மார்ச்14 காலங்களிலும் சூரியனின் சஞ்சார நிலைகளால் உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் நெருக்கடி விலகி முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். சிலருக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். உடல்நிலை சீராகும். எதிர்ப்புகள் விலகும். சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும்.


செவ்வாய் சஞ்சாரம்: உத்திரம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, செப். 14 – அக். 27, 2026 ஜன.14 – பிப்.21 காலங்களிலும், 2, 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.14 – ஜூன் 8, அக்.27 – டிச. 6,  2026பிப். 22 – ஏப். 1 காலங்களிலும் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் நினைத்த வேலைகள் நடக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியடையும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணும். அரசியல்வாதிகள் செல்வாக்குடன் திகழ்வர். உடல் பாதிப்பு விலகும்.


பொதுப்பலன்: 

உங்கள் முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும். செல்வாக்கு உயரும். பணவரவு அதிகரிக்கும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், தொழில், சொத்து, வாகனம் என கனவு எல்லாம் நனவாகும். பொன், பொருள் சேரும்.


தொழில்: 

தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பர். போட்டியாளர்களால் ஏற்பட்ட நெருக்கடி விலகும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பங்கு வர்த்தகம், ஷேர் மார்க்கெட், ஏற்றுமதி, இறக்குமதி, ஆட்டோ மொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், விவசாயம், டிரான்ஸ்போர்ட், பப்ளிகேஷன்ஸ்,  வாகனம் தொழில்களில் லாபம் அதிகரிக்கும். 


பணியாளர்கள்: இதுவரை இருந்த நெருக்கடி விலகும். உங்கள் திறமை வெளிப்படும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். எதிர்பார்த்த சலுகை, ஊதிய உயர்வு கிடைக்கும்.  நீண்ட நாட்களாக தடைபட்ட பதவி உயர்வும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.


பெண்கள்: 

எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த சச்சரவு தீரும். அந்தஸ்து உயரும். கணவரின் ஆதரவு அதிகரிக்கும். பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். திருமணம், குழந்தை பாக்கியம் என கனவுகள் நனவாகும். 


கல்வி 

மாணவர்களுக்கு பொதுத்தேர்விலும், போட்டித் தேர்வுகளிலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும். மருத்துவம், இன்ஜினியரிங், சாப்ட்வேர் சார்ந்த படிப்பு மீது விருப்பம் கொண்டவர்களுக்கு விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.


உடல்நிலை: 

நீண்ட நாளாக அனுபவித்த சங்கடம் விலகும். உடலில் உள்ள நோய் பற்றி தெளிவாக புரியாமல் விரக்தி அடைந்தவர்களின் நிலை சீராகும். உடலில் உள்ள நோயை அறிந்து சிகிச்சை பெற்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். 


குடும்பம்: தம்பதி ஒற்றுமை அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவீர்கள். எதிர்காலம், பிள்ளைகள் நலன் என சேமிப்பில் அக்கறை கொள்வீர்கள். பூர்வீக சொத்தில் இருந்த வழக்கு முடிவிற்கு வரும். புதிய சொத்து, வாகனம் வாங்குவீர்கள். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்கள் தீர்வு காண்பர். சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.


பரிகாரம்: சூரியனார் கோவில் சூரிய நாராயணரை வழிபட சகல சவுபாக்கியம் கிடைக்கும். 

 
மேலும் தமிழ்ப்புத்தாண்டு பலன் (14.4.2025 முதல் 13.4.2026 வரை) »
temple news
அசுவினி: நினைத்தது நிறைவேறும்.. நினைப்பது நடக்கும் தைரியமும், எதையும் சாதிக்கும் வலிமையும் கொண்ட ... மேலும்
 
temple news
கார்த்திகை: சூரியன் போல தனித்துவத்துடன் விளங்குபவராக நீங்கள் இருந்தாலும், 1ம் பாதமான மேஷத்தில் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: நல்லநேரம் வந்தாச்சு..: சகோதர, தைரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: முயற்சி வெற்றியாகும்..: ஞானக்காரகனான குருபகவானின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
உத்திரம்.. முன்னேற்றம் உண்டாகும்: ஆத்ம காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar