Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்திரை விஷூ பூஜைக்கு சபரிமலை நடை ... பிரசித்திப்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா துவங்கியது பிரசித்திப்பெற்ற மதுரை மீனாட்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மண்டைக்காடு பகவதி அம்மன் பிறந்த நாள்; வலியபடுக்கை பூஜையில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
மண்டைக்காடு பகவதி அம்மன் பிறந்த நாள்; வலியபடுக்கை பூஜையில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

11 ஏப்
2024
01:04

மணவாளக்குறிச்சி; மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பரணி கொடை விழாவை ஒட்டி நேற்று நள்ளிரவு நடந்த வலியபடுக்கை பூஜையில் பக்தர்கள் திரளாக கொண்டனர். கலந்து கொண்டனர்.

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இக்கோவிலில் மாசி பெருந்திருவிழா கடந்த 3ம் தேதி திருக்கொடி ஏற்றத்துடன் துவங்கி 12ம் தேதி நடந்தது. ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், அம்மனின் பிறந்த நாளாக போற்றப்படும் பங்குனி மாத பரணி நட்சத்திரமான நேற்று பரணி கொடை விழா நடந்தது. இதை ஒட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக் கப்பட்டு பஞ்சாபிஷேகம், உஷபூஜை, உருள் நேர்ச்சை, பூமாலை நேர்ச்சை, உச்சகால பூஜை, குத்தி யோட்டம், கோவில் மேல்சாந்தி பினு குருக்கள் இல்லத்தில் இருந்து சந்தனகுடம் பவனி, தங்கரதம் உலா, திருவிளக்கு பூஜை, அலங்கார தீபாராதனை, அத்தாழ பூஜை, வெள்ளிப் பல்லக்கில் அம்மன் பவனி, வலிய நள்ளிரவு படுக்கை என்னும் மகாபூஜை நடந்தது. அவல், பொரி, கற்கண்டு, முந்திரி, பழ வகைகள், கரும்பு, திணை, இளநீர், தேங்காய், தென்னங் குரும்பு, பலா இலை யில் செய்த கொழுக் கட்டை, உண்ணியப் பம், மண்டையப்பம், வடை, பாயாசம், புட்டமிர்து உட்பட நைவேத்திய பொருட்கள் அம்மன் முன் பனை ஓலையால் வேய்ந்த பாயில் வாழை இலை போட்டு குவியலாக படைக் கப்பட்டு, அதில் தீ பந்தங்கள் கொழுத்தி வைத்து பூஜை நடத் தப்படுவதையே வலியபடுக்கை பூஜை என கூறுகின்றனர். இப்பூஜை மாசிக் கொடை விழாவின் ஆறாம் நாளான வெள் ளிக்கிழமை, பங்குனி மாத பரணி நட்சத் திரத்தன்று நடக்கும் பரணிக்கொடை விழா மற்றும் கார்த்திகை மாத கடைசி வெள்ளி கிழமை என வருடத் தில் 3 முறை மட்டுமே நடக்கிறது. பூஜையில் மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து கோவிலிலும், சுற்றுப் புற பகுதிகளிலும் பொங்கலிட்டு அம் மனை வழிபட்டனர். விழாவை முன் னிட்டு முக்கிய இடங்களில் இருந்து மண்டைக்காட்டிற்கு சிறப்பு பஸ்கள் இயக் கப்பட்டது. மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் பெருமாள் தலை மையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத ... மேலும்
 
temple news
மதுரை;  தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, டவுன்ஹால் என். எச் .ரோடு சந்திப்பில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவிலில் புரட்டாசி முதல் ... மேலும்
 
temple news
கடலுார்; கடலுார் கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்; கோயில் நகரமாம் குச்சனூரில் அடிப்படை வசதிகளின்றி கோயிலிற்கு வரும் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar