காஞ்சி சங்கர மடத்தில் தமிழ் வருட பஞ்சாங்கம் வெளியீட்டு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2024 12:04
காஞ்சிபுரம்: காஞ்சி சங்கர மடத்தில் குரோதி தமிழ் வருட பஞ்சாங்கம் வெளியீட்டு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசி வழங்கினார்.
தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பு சார்பில் நடைபெற்ற விழாவில், சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று பஞ்சாங்கத்தை வெளியிட்டார். பஞ்சாங்கத்தின் முதல் பிரதி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் அர்ச்சகர் நடராஜ சாஸ்திரிக்கு வழங்கப்பட்டது. விழாவில் நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.