பதிவு செய்த நாள்
12
ஏப்
2024
12:04
திருவட்டார்; திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா இன்று (12ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்கியது.
குமரி மாவட்டத்தில், பிரசித்திபெற்ற வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி, ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டைய பங்குனி திருவிழா இன்று (12ம் தேதி) துவங்கியது. விழாவை ஒட்டி 8.45ல் இருந்து 9.30 குள் கருட இலச்சினை பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக காலை 5 மணிக்கு ஹரிநாம கீர்த்தனம் மணிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு தீபாராதனை, இரவு 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் ஆகியன நடக்கிறது. 2ம் நாள் நாளை காலை 8 மணிக்கு நாராயண பாராயணம், இரவு 7 மணிக்கு டான்ஸ், 9 மணிக்கு சுவாமி அனந்த வாகனத்தில் பவனி வருதல், 10 மணிக்கு சந்தான கோபாலம், கதகளி, 3ம் நாள் காலை 8 மணிக்கு பாகவத பாராயணம், இரவு 7.45க்கு நடனம், 9 மணிக்கு கமல வாகனத்தில் சுவாமி எழுந்தருளல், 10 மணிக்கு ருக்மணி சுயம்வரம் கதகளி ஆகியன நடக்கிறது. நான்காம் நாள் காலை 8 மணிக்கு பாகவத பாராய ணம், இரவு 7 மணிக்கு சங் கீத கச்சேரி, 9.30க்கு சுவாமி பல்லக்கில் பவனி வருதல், 10 மணிக்கு பாலி விஜயம் கதகளி, 5ம் நாள் இரவு 7 மணிக்கு திருவாதிரைக் களி, 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் திருக்கொடியேற்று, கருட வாகனத்தில் சுவாமி பவனி வருதல் 10 மணிக்கு கதகளி நடக்கிறது. ஆறாம் நாள் இரவு 7 மணிக்கு ராமாயண பாராயணம், 7.15க்கு சங்கீத கச்சேரி, 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், கதகளி, 7ம் நாள் காலை 8 மணிக்கு பாகவத பாராயணம், பகல் 11 மணிக்கு சிறப்பு உற்சவ பலி தரிசனம், இரவு 7 மணிக்கு ராமாயண பாராயணம், 7.15க்கு சமய சொற்பொழிவு, 8 மணிக்கு சமய சொற்பொழிவு, 8 மணிக்கு நாட்டியாஞ்சலி , 9 மணிக்கு சுவாமி பல்லக்கு வாகனத்தில் பவனி வருதல், கதகளி ஆகியன நடக்கிறது. எட்டாம் நாள் இரவு 7 மணிக்கு டான்ஸ், மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், 10.30 மணிக்கு சிறப்பு நடிகர்கள் பங்கேற்கும் துரியோதன வதம் கதகளி, 9ம் நாள் இரவு 8.30க்கு சிறப்பு நாதஸ்வர கச்சேரி, 9.30க்கு சுவாமி கருட வாகனத்தில் பள்ளி வேட்டைக்கு எழுந்தருளல், நள்ளிரவு 12 மணிக்கு கிராதம் கதகளி நடக்கிறது. விழா நிறைவு நாள் 21ம் தேதி பகல் 11 மணிக்கு திருவிளக்கு எழுந்தருளல், மாலை 5.30க்கு கருட வாகனத்தில் சுவாமி ஆறாட்டுக்கு எழுந்தருளல், மூவாற்றுமுகம் ஆற்றில் ஆறாட்டு, 1 மணிக்கு குசேலவிருத்தம் கதகளி ஆகியன நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.