Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நெல்லை முத்தாரம்மன் கோயிலில் ... மழைவேண்டி ஞானவேள்வி அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் நிறைவு! மழைவேண்டி ஞானவேள்வி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் திருவிழா: மழையில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 நவ
2012
10:11

திருச்செங்கோடு: மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு, கொட்டும் மழையை பொருட்படுத்தாமல், பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும், அம்மனுக்கு வேண்டுதலை நிறைவேற்றினர்.திருச்செங்கோடு நகரில் உள்ள பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், அழகுமுத்து மாரியம்மன் உள்பட, 20க்கும் மேற்பட்ட கோவில்களில், பூச்சாட்டுதலுடன் ஐப்பசி திருவிழா துவங்கியது.தினமும் அதிகாலை புனித நீராடிய பெண்கள், கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றி சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். நேற்று கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். பல பக்தர்கள் சிங்கம், புலி, கரடி வேடம் அணிந்து வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். நாளை (2ம் தேதி) பொங்கல் பண்டிகை நடக்கிறது. அன்று, பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் சிறப்பு பூஜை செய்கின்றனர்.நவம்பர், 3ம் தேதி கம்பம் தெப்பக்குளத்தில் விடும் விழா நடக்கிறது. பெரிய மாரியம்மன் கோவிலில் இருந்து, கம்பம் மற்றும் கும்பங்கள் சிறப்பு பூஜை செய்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று ஈரோடு சாலையில் உள்ள தெப்பக்குளத்தில் விடப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
 பழநி; பழநி கோயிலில் ஆடி மாத கார்த்திகை, மற்றும் விடுமுறை நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பழநி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் சிறப்பு ... மேலும்
 
temple news
திண்டிவனம்; திண்டிவனம் கிடங்கல் பகுதியில் ஆடிகிருத்திகையை முன்னிட்டு, பக்தர்களுக்கு மிளகாய் பொடி ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி கோவிலில் மாதம் தோறும் நடைபெறும் மகா ருத்ர யக்ஞம் நடந்தது. இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar