குத்தாலம் சீதளாம்பிகை மாரியம்மன் கோயிலில் பால்குட திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2024 05:04
மயிலாடுதுறை; குத்தாலம் அருகே அரையபுரம் கிராமத்தில் ஸ்ரீ சீதளாம்பிகை மாரியம்மன் கோவில் சித்திரை பால்குட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அரையபுரம் கிராமத்தில் ஸ்ரீ சீதளாம்பிகை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சித்திரை பெருவிழாவின் ஒரு பகுதியாக கரகம், காவடி மற்றும் பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் காவிரி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் , பால் குடங்கள், அலகு காவடிகள் எடுத்து மேல வாத்தியங்கள், வான வேடிக்கைகள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மகா அடிபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.