Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலக்காட்டில் சங்கர மடம் பூமி பூஜை ... புனித தலமான வாரணாசியில் நகரத்தார் புதிய சத்திரத்துக்கு அடிக்கல்: நிர்மலா சீதாராமன் பங்கேற்பு புனித தலமான வாரணாசியில் நகரத்தார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்; அசைந்தாடி வந்த அங்கயற்கண்ணி தேர்
எழுத்தின் அளவு:
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்; அசைந்தாடி வந்த அங்கயற்கண்ணி தேர்

பதிவு செய்த நாள்

22 ஏப்
2024
07:04

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

மதுரை சித்திரை திருவிழா, மீனாட்சி அம்மன் கோவிலில், கடந்த 12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் பத்தாம் நாளான நேற்று (ஏப்., 21) மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. இரவு சுந்தரேஸ்வரர் வெள்ளி யானை வாகனத்திலும், மீனாட்சி பூப்பல்லக்கிலும் பவனி வந்தனர். இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், இன்று வெகு விமரிசையாக துவங்கியது. மீனாட்சி ஒரு தேரிலும், சுந்தரேஸ்வரர் - பிரியாவிடை மற்றொரு தேரிலும், மாசி வீதிகளில் பவனி வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மதியம் 1.10 மணிக்கு தேர் நிலையை அடைந்தது.

கள்ளழகருக்கு எதிர்சேவை: கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் வேல் கம்புடன், பக்தர்களின் கோவிந்தா கோஷங்களுக்கு மத்தியில் அழகர் மலையில் இருந்து தங்கப்பல்லக்கில் நேற்று (ஏப்., 21) கள்ளழகர் புறப்பட்டார். இன்று காலை மதுரை வந்தடைந்த கள்ளழகருக்கு, மதுரை புதுார் மூன்றுமாவடியில் எதிர்சேவை நடந்தது. நாளை (ஏப்., 23) அதிகாலை 5:51 மணிக்கு மேல் காலை 6:10 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். ஊர் கூடித்தேர் இழுத்தது போல என்னும் சொல்வழக்கு நம் மண்ணில் காலம் காலமாக வழங்கி வருகிறது. சமூகத்தில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி இழுத்தால் தான் தேர் பவனி சிறப்பாக  நடைபெறும். ஒற்றுமையை வலியுறுத்தும் இவ்விழா நம் பண்பாட்டுக் கலைகளின் அடையாளமாகத் திகழ்கிறது. நாட்டை ஆளும் மன்னன் நகரை வலம் வருவது போல, இவ்வுலகையே ஆளும் இறைவனும், இறைவியும் தேரில் பவனி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை; பொன்னம்பலமேட்டில் மகரஜோதியையும்,மகர நட்சத்திரத்தையும் தரிசித்த ஆனந்தத்தில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று(ஜன.,14) மகரஜோதி தரிசனம் காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் திருவாபரணங்கள் ... மேலும்
 
temple news
 பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொடுவாயூர் அருகே உள்ள கேரளபுரம் விசாலாட்சி சமேத ... மேலும்
 
temple news
வானுார்; வானுார் அருகே வெள்ளந்தாங்கி வீரனார் கோவிலில் ஆண்கள் மட்டும் பொங்கலிட்டு வழிபாடு ... மேலும்
 
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 7.00 மணி முதல் 8.00 மணி.தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும் பழமொழியே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar