Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: குருபெயர்ச்சி பலன் 2024 – 2025 மிதுனம் : குருபெயர்ச்சி பலன் 2024 – 2025 மிதுனம் : குருபெயர்ச்சி பலன் 2024 – 2025
முதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (1.5.2024 முதல் 10.5.2025 வரை)
ரிஷபம் : குருபெயர்ச்சி பலன் 2024 – 2025
எழுத்தின் அளவு:
ரிஷபம் : குருபெயர்ச்சி பலன் 2024 – 2025

பதிவு செய்த நாள்

22 ஏப்
2024
04:04

கார்த்திகை: நண்பரால் நன்மை

ஆத்ம காரகனான சூரியனை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1ம் பாதத்தில் (மேஷம்) பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு (ரிஷபம்) சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.
கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு மே1 முதல் 2ம் வீட்டில் சஞ்சரித்து அதிர்ஷ்ட வாழ்க்கைக்கு வழிகாட்ட இருக்கிறார். 2,3,4 ம் பாதத்தினருக்கு ஜென்ம குருவாகி அலைச்சலை அதிகரித்தாலும் அதற்கேற்ப வரவை வழங்குவார். திருமணம், குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு என அனைத்தையும் அருள்வார்.
பார்வைகளின் பலன்
1 ம் பாதத்தினருக்கு குருவின் பார்வை 6,8,10 ம் இடங்களில் பதிவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல்பாதிப்பு விலகும். வேலை தேடுவோருக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தொழில், பணியில் வருமானம் உயரும். 2,3,4 ம் பாதத்தினருக்கு, 5,7,9 ம் இடங்களின் மீது குருவின் பார்வை உண்டாவதால் பூர்வீக சொத்தில் பிரச்னை விலகும். குலதெய்வ அருள் உண்டாகும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். கூட்டுத்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நண்பரால் நன்மை உண்டாகும்.
சனி சஞ்சாரம்
1 ம் பாதத்தினருக்கு லாப சனியால் வருமானம் பலவழியிலும் வரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். 2,3,4 ம் பாதத்தினருக்கு தொழில், வியாபாரத்தில் வேலைப்பளுவால் நெருக்கடி உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் சங்கடம் உண்டாகும்.
ராகு, கேது சஞ்சாரம்
6ம் இட கேதுவால்  செல்வாக்கு உயரும். உடல் பாதிப்பு விலகும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவுக்கு வரும். எதிரிகள் விலகிச் செல்வர். 2,3,4 ம் பாதத்தினருக்கு லாப ராகுவால் வருமானம் உயரும். வேலை தேடுவோருக்கு தகுதியான வேலை கிடைக்கும். தொழில், வியாபாரம், வாழ்வில் போட்டியில்லாத நிலை ஏற்படும்.
சூரிய சஞ்சாரம்
1 ம் பாதத்தினருக்கு, ஜூன் 15 – ஜூலை 16, செப். 17 – அக் 17, ஜன. 14 – மாரச் 14 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு, ஜூலை 17 – ஆக. 16, அக். 18 – நவ. 15, 2025, பிப் 13 – ஏப். 13 காலங்களிலும் தன் 3,6,10,11 ம் இட சஞ்சாரங்களால் முயற்சிகளை வெற்றியாக்குவார். செல்வாக்கை உயர்த்துவார். எதிர்பார்த்த பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றத்தை வழங்குவார். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும்.
பொதுப்பலன்
குருவின் சஞ்சார நிலையும், பார்வைகளும், லாப, ஜீவன சனியும், 6 ம் இட கேதுவும், 11 ம் இட ராகுவும், 120 நாட்கள் சூரியனும் முன்னேற்றத்தை உண்டாக்குவர். குடும்பத்தில் சங்கடம் விலகும். புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். சமூக அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த பதவி, பொறுப்பு வந்து சேரும்.
தொழில்
லாபம் அதிகரிக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். வருமானத்தை உயர்த்துவதற்காக திட்டமிட்டு செயல்படுவீர்கள். தொழிலை விரிவு செய்வீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி, இயந்திர உற்பத்தி, ஆட்டோமொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், ஹார்டுவேர்ஸ் தொழில்கள் முன்னேற்றம் அடையும்.
பணியாளர்கள்
நெருக்கடி மறையும். எதிர்பார்த்த ஊதியம் உண்டாகும். திறமைக்கேற்ற பொறுப்பு கிடைக்கும். அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். தடைபட்ட பதவி உயர்வு, இடமாற்றம் ஏற்படும்.
பெண்கள்
குழப்பம் தீரும்.  உடல் பாதிப்பு விலகும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் உண்டாகும். பொன், பொருள் சேரும். சுய தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். சுப நிகழ்ச்சி நடந்தேறும்.
கல்வி
படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் மேற்படிப்பு எண்ணம் நிறைவேறும். விரும்பிய பாடம், கல்லுாரியில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை
விபத்து, சுவாசப் பிரச்னை, ரத்த அழுத்தம், சர்க்கரை என ஏதாவது பாதிப்பால் சங்கடத்திற்கு ஆளாகி வந்த உங்களுக்கு அவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
குடும்பம்
ரிஷப குருவால் சங்கடம் விலகும். பணவரவு அதிகரிக்கும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். சொத்து, வாகனம் வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சி நடந்தேறும்.
பரிகாரம்: சூரியபகவானை வழிபட்டு வர வாழ்வு இனிமையாகும்.


ரோகிணி: பலவழிகளில் வருமானம்

சந்திரனை நட்சத்திராதிபதியாகவும் சுக்கிரனை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் நினைத்ததை சாதிக்கும் வரையில் முயற்சியை கைவிட மாட்டீர்கள். குரு மே 1 முதல் ராசிக்குள் சஞ்சரிப்பதால் சங்கடம் விலகும். விரயம் கட்டுப்படும். ஜென்ம குரு அலைச்சலை அதிகரிப்பார் என்றாலும்  லாபாதிபதி என்பதால் வருமானம் பலவழிகளில் வரும். திருமணம், குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு என தேவையான அனைத்தையும் வழங்குவார்.
பார்வைகளின் பலன்
குருவின் பார்வைகள் 5,7,9ம் ஸ்தானங்களில் பதிவதால் செல்வாக்கு உயரும். பதவி உயர்வு ஏற்படும். உயர்கல்வி விருப்பம் நிறைவேறும். பூர்வீக சொத்து பிரச்னை விலகும். புத்திர பாக்கியம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். தம்பதி ஒற்றுமை உண்டாகும். நண்பரால் நன்மை உண்டாகும். கூட்டுத்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். பிரிந்த தம்பதிக்குள் சமரசம் ஏற்படும். தந்தை வழியில் நன்மை அதிகரிக்கும்.
சனி சஞ்சாரம்
சனி 10ல் சஞ்சரிப்பதால் பணியில் நெருக்கடி அதிகரிக்கும். எதிரியால் சங்கடம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதிருக்கும். வேலைப்பளுவால் மனம் சோர்வடையும்.
ராகு, கேது சஞ்சாரம்
லாப ஸ்தான ராகுவால் தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பணம் பலவழியிலும் வரும். வேலை தேடுவோருக்கு தகுதியான வேலை கிடைக்கும். தொழில், வியாபாரம், வாழ்க்கையில் போட்டியில்லாத நிலை ஏற்படும். வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்தவர்களுக்கு பாஸ்போர்ட், விசா கிடைக்கும்.
சூரிய சஞ்சாரம்
ஜூலை 17 – ஆக. 16, அக். 18 – நவ. 15, 2025, பிப் 13 – ஏப். 13 காலங்களில் சூரியனின் 3,6,10,11 ம் இட சஞ்சாரத்தால்  செல்வாக்கு உயரும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அரசு வழியில் ஆதாயம் உயரும்.  தொழில் வளர்ச்சி, எதிர்பார்த்த வருமானத்தை வழங்குவார்.
பொதுப்பலன்
குருவின் சஞ்சாரம், பார்வை, லாப ஸ்தான ராகுவும், 120 நாட்கள் சூரியனும் உங்கள் வாழ்வில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை உண்டாக்குவர். பெரிய பொறுப்பு உங்களைத் தேடிவரும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். சொத்து சேர்க்கை ஏற்படும். உண்ணவும், உறங்கவும் நேரமில்லாத அளவிற்கு வேலை இருந்து கொண்டே இருக்கும்.
தொழில்
தொழில் நஷ்டத்தில் இயங்கிய நிலை மாறி லாபம் அதிகரிக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். வருமானத்தை உயர்த்துவதற்காக திட்டமிட்டு செயல்படுவீர்கள்.
பணியாளர்கள்
பணியாளர்கள் முன்னேற்றம் காண்பர். நெருக்கடி, போராட்டம் இனி மாறும். உழைப்பிற்குரிய ஊதியம் கிடைக்கும். எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். தடைபட்ட பதவி உயர்வு இக்காலத்தில் வரும். விரும்பிய இடமாற்றம் ஏற்படும்.
பெண்கள்
செல்வாக்கு உயரும். குடும்பம், வேலையில் செல்வாக்கு உயரும். வாழ்க்கைத் துணையுடன் ஒற்றுமை உண்டாகும். பொன், பொருள் சேரும்.  திருமண வயதினருக்கு நல்ல மணவாழ்வு அமையும்.  குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
கல்வி
படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். மேற்படிப்பு எண்ணம் நிறைவேறும். விரும்பிய பாடத்தில் சீட் கிடைக்கும். வெளிநாட்டிற்கு செல்லும் முயற்சி நிறைவேறும்.
உடல்நிலை
அலைச்சலால் உடல் பாதிப்பு உண்டாகும். சிலருக்கு சுவாசப் பிரச்னை, சிறுநீர் தொற்று, ரத்த அழுத்தம் என ஏதாவது சங்கடம் தோன்றும் என்றாலும் சிகிச்சையால் நிவாரணம் உண்டாகும்.
குடும்பம்
பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். குலதெய்வ வழிபாட்டில் ஈடுபடுவதுடன் கோயில் திருப்பணிகளிலும் பங்கேற்பீர்கள். புதிய சொத்து, வாகனம் வாங்குவீர்கள். சுபநிகழ்ச்சி நடந்தேறும்.
பரிகாரம்: தினமும் அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டால் நல்வாழ்வு அமையும்.


மிருகசீரிடம்: சோதனையும் சாதனையாகும்

செவ்வாயை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2 ம் பாதத்தில் (ரிஷபம்) பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 3,4 ம் பாதத்தினருக்கு (மிதுனம்) புதன் ராசிநாதனாகவும் உள்ளனர். உங்களுக்கு குரு நட்பு கிரகம் என்றாலும் மே1 முதல் ஜென்ம குருவாக சஞ்சரிக்க இருக்கிறார். விரயம் கட்டுப்படும். வருமானம் பலவழியில் வரும். 3,4 ம் பாதத்தினருக்கு விரயகுருவாக செலவை அதிகரிப்பார். சோதனையை சாதனையாக மாற்றும் சக்தி உண்டாகும்.
பார்வைகளின் பலன்
1,2 ம் பாதத்தினருக்கு குருவின் பார்வைகள், 5, 7, 9 ம் இடங்களுக்கு உண்டாவதால் செல்வாக்கு உயரும். பதவி உயர்வு ஏற்படும். பூர்வீக சொத்தில் பிரச்னை விலகும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் அமையும். வருமானம் அதிகரிக்கும். 3,4 ம் பாதத்தினருக்கு 4,6,8 ம் இடங்களுக்கு குருபார்வை ஏற்படுவதால் செலவு அதிகரிக்கும். வீடு, வாகன வகையில் கடன் வாங்குவீர்கள். வேலைக்காக முயற்சித்தவர்களின் முயற்சி வெற்றியாகும்.
சனி சஞ்சாரம்
சனி 1,2 ம் பாதத்தினருக்கு 10ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். வேலைப்பளுவால் மனம் சோர்வடையும். 3,4ம் பாதத்தினருக்கு தொழிலில் முன்னேற்றம் தோன்றும். எதிர்பார்த்த வருமானம் வரும்.
ராகு, கேது சஞ்சாரம்
1,2 ம் பாதத்தினருக்கு லாப ஸ்தான ராகுவால் தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பணம் பலவழிகளில் வரும். 3,4 ம் பாதத்தினருக்கு 10ம் இட ராகுவால் தொழிலில் அக்கறை அதிகரிக்கும். 4ம் இட கேதுவால் உடல்நலக்குறைவு தோன்றும்.
சூரிய சஞ்சாரம்
1,2 ம் பாதத்தினருக்கு ஜூலை 17 - ஆக.16, அக்.18 - நவ.15, 2025, பிப்.13 - ஏப்.13 காலங்களிலும், 3,4 ம் பாதத்தினருக்கு ஏப்.14 - மே13,  ஆக.17 - செப்.16, நவ.16 - டிச.15, 2025, மார்ச்15 - ஏப்.13 காலங்களிலும் சூரியன் 3,6,10,11 ம் இட சஞ்சாரங்களால் முன்னேற்றத்தை உண்டாக்குவார். அரசுவழியில் ஆதாயம், தொழிலில் லாபத்தை அதிகரிப்பார்.
பொதுப்பலன்
குருவின் சஞ்சார நிலையும், பார்வைகளும், 120 நாட்கள் சூரியனும், 90 நாட்கள் செவ்வாயும் முன்னேற்றத்தை உண்டாக்குவர். பணவரவால் நெருக்கடி விலகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். புதிய சொத்து சேர்க்கை ஏற்படும்.
தொழில்
தொழிலில் அக்கறை செலுத்துவது நல்லது. தொழில் தொடங்கவோ, தொழிலை விரிவு செய்யவோ கடன் வாங்க வேண்டாம். பணியாளர்களை முடிந்தவரை அனுசரித்துச் செல்வதால் உற்பத்தி அதிகரிக்கும். வருமானம் உயரும்.
பணியாளர்கள்
உழைப்பிற்குரிய ஊதியம் கிடைக்கும். எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். பணியாளர்களுக்கு உண்டான பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
பெண்கள்
உடல் பாதிப்பு விலகும். குடும்பம், பணியிடத்தில் செல்வாக்கு உயரும். வாழ்க்கைத் துணையுடன் உண்டான பிரச்னை முடிவிற்கு வரும். பொன், பொருள் சேரும். சுபநிகழ்ச்சி நடந்தேறும்.
கல்வி
படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். மேற்படிப்பு முயற்சியில் வெற்றி பெறும். விருப்பப்பட்ட கல்லுாரி, விரும்பிய பாடத்தில் இடம் கிடைக்கும்.
உடல்நிலை
வேலைப்பளு,  ஓய்வின்மையால் உடல் பாதிப்பு உண்டாகும். சிலருக்கு பரம்பரை நோய், தொற்று நோய், சுவாசப் பிரச்னை, பி.பி என ஏதாவது சங்கடம் தோன்றும் என்றாலும் அவற்றிலிருந்து சிகிச்சையால் விடுபடுவீர்கள்.
குடும்பம்
கணவன், மனைவிக்குள்  ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். சொத்து, வாகனம் வாங்குவீர்கள். சுபநிகழ்ச்சி நடந்தேறும்.


பரிகாரம் : நரசிம்மரை தினமும் வழிபட்டால் முன்னேற்றம் உண்டாகும்.

 
மேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (1.5.2024 முதல் 10.5.2025 வரை) »
temple news
அசுவினி: வருமானம் அதிகரிக்கும்செவ்வாய், கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ராசிக்குள் சஞ்சரித்த குரு ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: சோதனையும் சாதனையாகும்செவ்வாயை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2 ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: பிரிந்த தம்பதி சேர்வர்குருவை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2,3 ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மகம்: எச்சரிக்கை அவசியம்கேதுவை நட்சத்திராதிபதியாகவும், சூரியனை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் ... மேலும்
 
temple news
உத்திரம்: நினைத்தது நிறைவேறும்சூரியனை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1 ம் பாதத்தில் (சிம்மம்) ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar