Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலக்காடு லட்சுமி நாராயண பெருமாள் ... அரசூர் மாரியம்மன் கோவில் மண்டபம் லாரி மோதி சேதம் அரசூர் மாரியம்மன் கோவில் மண்டபம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவைபுதூர் பத்ரகாளியம்மன், கருப்பராயர், குரு சக்திநாதர் கோவில் குண்டம் விழா
எழுத்தின் அளவு:
கோவைபுதூர் பத்ரகாளியம்மன், கருப்பராயர், குரு சக்திநாதர் கோவில் குண்டம் விழா

பதிவு செய்த நாள்

29 ஏப்
2024
05:04

போத்தனூர்; கோவைபுதூரிலுள்ள பத்ரகாளியம்மன், கருப்பராயர், குருசக்திநாதர் கோவில் குண்டம் விழாவில், பக்தர்கள் பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கினர்.

கோவைபுதூர், என் பிளாக்கிலுள்ள கோவிலின், 15ம் ஆண்டு சித்திரை குண்டம் திருவிழா கடந்த, 22ல், கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து சப்த கன்னி பூஜை, கோ பூஜை, நாக பிள்ளையார் கோவிலில் இருந்து அம்மன் திருவீதி உலா, கொடியேற்றம், காப்பு கட்டுதல் நடந்தன. இரண்டாம் நாள் ஸ்ரீ சக்ர பூஜை, மூன்றாம் நாள் சண்டி பூஜை, ஹோமம், நான்காம் நாள் குருதி பூஜை, ஐந்தாம் நாள் குண்டம் திறத்தல், ஆறாம் நாள் நாகபிள்ளையார் கோவிலில் இருந்து அம்மன் திருவீதி உலா, பட்டு, படைக்கலன், தீர்த்தக்குடம் கோவிலுக்கு எடுத்து வருதல் நடந்தன. நேற்று அதிகாலை அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரமும் தொடர்ந்து கோவிலிலிருந்து அம்மன் தண்டத்திற்கு புறப்பாடு, பூஜை, பிரசாதம் வழங்குதல் நடந்தன. மேலும் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதலுக்காக பூ வளர்த்தல் நடந்தது. மதியம் உச்சி பூஜை, அன்னதானம் நடந்தன. மாலை சக்தி கரகம் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. இதையடுத்து குருசாமி முதலில் குண்டத்தில் இறங்கினார். பின், சக்தி கரகங்கள், காவடி எடுத்தோரும் அடுத்து வேண்டுதலுக்காக ஆண்கள், பெண்கள் குண்டம் இறங்கினர். திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர். இன்று காலை மகா அபிஷேகம், அலங்கார பூஜை, பொங்கல் வைத்தல் மதியம் உச்சி பூஜை, கருப்பராயர் காவடி எடுத்து விளையாடுதல், மாலை மாவிளக்கு வழிபாடும் தொடர்ந்து மஞ்சள் நீராட்டும் நடந்தன. பின் கரகம் கரைத்தல், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடந்தன. இதையடுத்து கோவில் நடை அடைக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம் விழாவை முன்னிட்டு பராசக்தி அம்மன் தேர் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு, கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஐப்பசி மாத அஷ்டமியையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
புதுடில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar