Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news புத்தாண்டுக்கு திருப்பதி போறீங்களா? தீபாவளியன்று மீனாட்சிக்கு வைரக்கிரிடம், தங்ககவசம்! தீபாவளியன்று மீனாட்சிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
35 லட்சம் அரவணை டின்கள்: சபரிமலையில் தயாரிப்பு தீவிரம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 நவ
2012
10:11

சபரிமலை: மண்டல உற்சவத்தை ஒட்டி, சபரிமலை அய்யப்பன் கோவிலில், 35 லட்சம் அரவணை பிரசாத டின்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு, இதுவரை, 14 லட்சம் டின்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும், 16ம் தேதி, மண்டல உற்சவம் துவங்குகிறது. அடுத்த மாதம், 26ம் தேதி வரை நடைபெற உள்ள, இந்த உற்சவத்தின் போது, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவர்.அவர்களுக்கு, அரவணை, அப்பம் போன்ற பிரசாதங்கள் விற்கப்படும்.

இந்தாண்டு, மண்டல உற்சவ காலத்தில் மட்டும், 35 லட்சம் அரவணை பிரசாத டின்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு, அதில், 14 லட்சம் டின்கள், இதுவரை தயாரிக்கப்பட்டுள்ளன.இதையடுத்து, அப்பம் தயாரிக்கும் பணி, வரும், 10ம் தேதி துவங்கும். மண்டல உற்சவ காலத்தில், தினமும், இரண்டு லட்சம் அரவணை டின்கள், விற்பனையாகும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், விற்பனை இன்னும் அதிகமாக இருக்கும். மண்டல உற்சவ காலம் துவங்கும், வரும் 16ம் தேதி முதல், பக்தர்களுக்கு தினமும், காலையில், ரவா உப்புமா, கொண்டைக்கடலை கறி மற்றும் சுக்கு காபியும், மதிய நேரத்தில், சாதம், சாம்பார், ரசம், பொறியல், அவியல் மற்றும் ஊறுகாயும், இரவில் கஞ்சி, பயிறு கறி மற்றும் ஊறுகாயும் அன்னதானமாக வழங்கப்படும்.

மண்டல உற்சவத்திற்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, வரும்,15ம் தேதி மாலை, 5:30 மணிக்கு திறக்கப்படுகிறது. அடுத்த மாதம், 26ம் தேதி, மண்டல உற்சவம் முடிந்து நடை அடைக்கப்படும்.அதன்பின், மகரஜோதி உற்சவத்திற்காக, அடுத்த மாதம், 30ம் தேதி, மாலை, 5:30 மணிக்கு நடை திறக்கப்படும்; மகரஜோதி தரிசனம், அடுத்தாண்டு ஜனவரி, 14ம் தேதி நடக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar