திருச்சி; திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலில் ஜார்க்கண்ட் கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன் இன்று தரிசனம் செய்தார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வந்த ஜார்க்கண்ட் கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன் சிறப்பு தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. தரிசனம் முடித்து வெளியே வந்த கவர்னருக்கு பிரசாதம் மற்றும் சுவாமி படம் வழங்கி கோவில் அர்ச்சகர்கள் ஆசிர்வதித்தனர்.