குன்றக்குடி வீரகாளியம்மன் கோயில் திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2024 05:05
காரைக்குடி; குன்றக்குடியில் உள்ள வீரகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
குன்றக்குடியில் உள்ள வீரகாளியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா இன்று நடந்தது. இதில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும், தீமிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மாலையில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில், உள்ளூர் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.