பதிவு செய்த நாள்
17
மே
2024
01:05
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் மக்கள், தனி கலாசாரம், தனி பாரம்பரியம், தங்களுக்கு என பிரத்தியேக உணவு, உடை, இசை நடனம் என வாழ்ந்து வருகின்றனர். இந்த சமுதாயத்தினர் ஆண்டுதோறும் மே, 15ம் தேதி படுகர் தினவிழாவை கொண்டாடுகின்றனர். நடப்பாண்டின் விழா, ஊட்டியில் உள்ள இளம்படுகர் சங்க அரங்கில் நடந்தது. அதில், சுற்றுலாத் துறைஅமைச்சர் ராமச்சந்திரன்,ஊட்டி எம்.எல்.ஏ., கணேஷ் உட்பட சமுதாய பிரதிநிதிகள் பங்கேற்று படுகர் சமுதாய மக்களின் கொடியேற்றி, படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய நடனமாடினர். அதே போல், குந்தை சீமெ படுகர் நலச்சங்கம் சார்பில், அன்னமலை கோவிலில் நடந்த படுகர் தின நிகழ்ச்சியில், முன்னாள் நீதிபதியும், குந்தை சீமெ படுகர் நலச்சங்க தலைவருமான சந்திரன் தலைமை வகித்து, படுகர் சமுதாய கலாசாரம், பாரம்பரியம், சமுதாய ஒற்றுமை குறித்து பேசினார். மேலும், சமுதாய முன்னேற்றம் குறித்து பார்ப்பத்தி மாதா கவுடர் உட்பட முக்கிய பிரமுகர்கள் பேசினார். திரளான படுகரின் மக்கள் பாரம்பரிய உடையில் கலாசாரத்தை போற்றும் விதமாக நடனமாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து, அன்னமலை கோவில் மண்டபத்தில் சமுதாயம் முன்னேற்றம் குறித்து கருத்தரங்கம் நிகழ்ச்சி நடந்தது. அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது. ன்னதாக, மஞ்சூர் மாரியம்மன் கோவில், ஹெத்தையம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. நுந்தளா கிராமத்தில் ராமன் தலைமையில் படுகர் தின நிகழ்ச்சிநடந்தது.