காளஹஸ்தி பக்த கண்ணப்ப மலையில் லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2024 07:05
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான பக்த கண்ணப்ப மலையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி ஜெயந்தியை யொட்டி, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசுலு தலைமையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. முன்னதாக சிவன் கோயில் வேதப் பண்டிதர்கள் கோயில் வளாகத்தில் சுதர்சன ஹோமம் பூஜைகளை சாஸ்திர முறைப்படி நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு சுகந்த திரவியங்களால் பால் , பன்னீர், மஞ்சள், குங்குமம், சந்தனம் , விபூதி மற்றும் பஞ்சாமிர்த அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. முன்னதாக கலச ஸ்தாபனம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளை செய்ததோடு இறுதியில் கலசத்தில் உள்ள புனித நீரால் லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீப தூப நெய்வேத்தியங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த சிறப்பு பூஜையில் ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், தேவஸ்தான அதிகாரிகள் சுதர்சன் ரெட்டி மற்றும் கோயில் வேதப் பண்டிதர்கள் கோவிந்த் சர்மா, ராகேஷ் சர்மா, ஸ்வர்ண மூர்த்தி, மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.