Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் விரிசல்: ... கால பைரவர் கோவிலில் பூசணியில் விளக்கேற்றி வழிபாடு! கால பைரவர் கோவிலில் பூசணியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவள்ளூர் மாவட்ட 848 கோவில்களில் குத்தகை பாக்கி விவரங்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 நவ
2012
10:11

திருவள்ளூர் மாவட்டத்தில், 848 கோவில்கள் மற்றும் 12 மடங்களுக்கு சொந்தமான, 6,680 ஏக்கர் நிலத்தை அனுபவிப்பவர்கள், செலுத்த வேண்டிய குத்தகை பாக்கி, 50 லட்சம் ரூபாய் உள்ளது என, கணக்கெடுப்பில் தெரியவந்து உள்ளது. பாக்கி வைத்து இருப்பவர்களின், பெயர் பட்டியலை வெளியிட, அறநிலைய துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். கணக்கெடுப்பு அறநிலைய துறைக்கு சொந்தமான கோவில்களின் சொத்துகள் குறித்து, கணக்கெடுப்பு நடத்த, அரசுக்கு ஐகோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து, வருவாய் துறையினர் ஒவ்வொரு பகுதிக்கும் நேரில் சென்று, கோவிலுக்கு சொந்தமான சொத்துகளின் அசல் பத்திரம், வரைபடம், அதில் உள்ள ஆக்கிரமிப்புகள், ஆக்கிரமிப்பாளரின் விவரங்களை கணக்கெடுத்து உள்ளனர்.மேலும், கோவில் இடத்தை ஆக்கிரமித்து கட்டி உள்ள வீடுகள், அனுபவித்து வருபவரின் விவரம், எத்தனை ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றனர், குத்தகை பாக்கி எவ்வளவு போன்ற விவரங்களையும் கணக்கெடுத்து வருகின்றனர். இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத வருவாய் அதிகாரி ஒருவர் கூறுகையில், ""மாவட்டத்தில், அறநிலைய துறை கோவில்களுக்கு சொந்தமாக, 14,420 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இதில், 6,680 ஏக்கர் நிலங்களை குத்தகைக்கு அனுபவிப்பவர்கள், 50 லட்சம் ரூபாய் தொகையை பாக்கி வைத்து உள்ளனர், என்றார்.மேலும், ""கோவில் நிலங்களை அனுபவிப்பவர்கள், தங்களது நிலம் போல, மற்றவர்களுக்கு உள் குத்தகை விட்டு பணம் பார்ப்பதும், கணக்கெடுப்பின் போது தெரிய வந்து உள்ளது. இதுகுறித்த விவரங்கள் இந்து அறநிலைய துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது, என்றார்.விரைவில் நடவடிக்கை இது குறித்து, அறநிலைய துறை இணை ஆணையர் ஒருவர் கூறுகையில், ""இந்த மாவட்டத்தில் கோவில் நிலங்களை அனுபவித்து, குத்தகை தராதவர்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. குத்தகை தொகையை கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர்கள் மூலம் வசூலிக்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது என்றார். மேலும், கோவில் நிலங்களை அனுபவித்து, குத்தகை தொகை தராமல் உள்ளவர்களின் பெயர், தொகை குறித்த விவரங்களை, அந்தந்த கோவிலின் முன் பொதுமக்கள் பார்வைக்கு விரைவில் வைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடிமாதம் அம்மனுக்குத்தான் உரியது என்றாலும் ஆடிக் கிருத்திகை தினம் முருகனுக்கு உரியதாகச் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி கோவிலில் மாதம் தோறும் நடைபெறும் மகா ருத்ர யக்ஞம் நடந்தது. இதை ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் திருவாடிப்பூர உத்ஸவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் ஆடி முதல் சனியை முன்னிட்டு இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar