Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் மாங்கனி திருவிழா; ... காரமடை அரங்கநாதர் கோவிலில் சுக்ல பட்க்ஷ ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாதர் கோவிலில் சுக்ல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோத்தகிரி கோபாலகிருஷ்ணன் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
கோத்தகிரி கோபாலகிருஷ்ணன் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2024
03:06

கோத்தகிரி; கோத்தகிரி அருகே உள்ள மடித்தொரை கிராமத்தில், அருள்மிகு ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.

ஊட்டி தும்மனிட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, மடித்தோரை கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் திருக்கோவில் பனரமைப்பு பணி, நிறைவடைந்த நிலையில், மகா கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த சனிக்கிழமை, காலை, 8:30 மணிக்கு, மங்கள இசை முழுங்க ஸ்ரீ விநாயகர் பூஜை மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் சிறப்பாக நடந்தது. காலை, 11:00 மணிக்கு, ஆலயத்தில் இருந்து மேள தாளங்கள் முழங்க, முளைப்பாரி தீர்த்தக்குடம் ஊர்வலம் நடந்தது. மாலை, 4:30 மணிக்கு, வாஸ்து பூஜை, கோபுர கலசம் வைத்தல், பூர்ணாகுதி, தீபாராதனை, கோபுர கலசம் வைத்தல், பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. மாலை, 5:30 மணிக்கு, மங்கள இசை, வேத பாராயணம், மூன்றாம் கால யாக பூஜையை தொடர்ந்து, மகா தீபாரதனை இருந்தது. முக்கிய திருவிழா நாளான நேற்று (17ம் தேதி), காலை, 4:30 மணிக்கு, மங்கள இசை, நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம் நிகழ்ச்சியை தொடர்ந்து, மூலவர் திருமேனிக்கு, அருள் சக்தியை கொண்டு வரும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, காலை, 6:30 மணிக்கு, விநாயகர், நவக்கிரகம், ராஜகோபுரம் விமானம் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கோயில் பூசாரி உட்பட, பக்தர்கள் ஸ்ரீ மாயக்கண்ணா; ஸ்ரீ கிருஷ்ணா என, கோஷம் எழுப்பப்பட்டது . தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னததானம் வழங்கப்பட்டது. விழாவில், மடித்தொரை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, அகண்ட பஜனை, ஆடல் பாடல், ஆன்மீக சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை, ஊர் தலைவர் போஜன் தலைமையில், கோவில் கமிட்டியினர், விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீபெரும்புதுார்; மார்கழி மாத செவ்வாய் கிழமையான இன்று சாமந்தி, வெற்றிலை உள்ளிட்ட மாலைகளால் ... மேலும்
 
temple news
திருச்சி  ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து நான்காம் நாளான இன்று  நம்பெருமாள் மஞ்சள் வண்ண ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதியில் இன்று டிச.,23ம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதனை ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு அவதுாத தத்த பீடத்தின் தலைவர் ஸ்ரீகணபதி சச்சிதானந்த சுவாமிகள், ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், கால்நடைகளை பாதுகாக்க உயிர்நீத்த வீரர்களுக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar