காரைக்கால் மாவட்டத்தில் 63 நாயன்மார்களின் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு தனிக்கோவில் உள்ளது.இக்கோவிலில் ஆண்டுதோறும் அம்மையாரின் கணவனிடம் சிவபெருமாள் மாங்கனி கொடுத்து அனுப்பி.அதை அடியார் வேடத்தில் சிவபெருமான் வந்து சாப்பிடுவதும். இதனால் காரைக்கால் அம்மையாரை பிரிந்து அவரது கணவர் வெளியூர் செல்வதும். அம்மையார் இறைவனை காண கயிலாயத்திற்கு தலைகீழாக கையால் நடந்து செல்வதையும் சித்தரிக்கும் வகையில் மாங்கனி திருவிழா நாளை 19ம் தேதி மாப்பிள்ளை அழைப்பும், 20ம் தேதி காரைக்கால் அம்மையார் பரமதத்தர் செட்டியார் திருக்கல்யாணமும், இரவு பிஷாடணமூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடும், மறுநாள் 21ம் தேதி சிவபெருமான் அடியார் கோலத்தில் வீதி உலா வருவதும், அப்போது பக்தர்கள் மாங்கனி வீசும் வைபவம் நடக்கிறது. அன்று மாலை 3அம்மையார் சிவபெருமானுக்கு மாங்கனியுடன் அமுதுபடையல் நிகழ்ச்சி நடக்கிறது.இவ்விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் புனிதவதி,பரமத்தர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு பாரம்பரியமான மஞ்சல் பத்திரிக்கையில் பக்தர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துள்ளது.