Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீரடி சாய்பாபா கோயிலில் ... சுருட்டுப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வர சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் சுருட்டுப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்துமாரியம்மன் கோயில்களில் முளைப்பாரி உற்ஸவம்
எழுத்தின் அளவு:
முத்துமாரியம்மன் கோயில்களில் முளைப்பாரி உற்ஸவம்

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2024
04:07

பெரியபட்டினம்; ஆனி மாத முளைப்பாரி உற்ஸவ விழா கிராமங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


பெரியபட்டினம் அருகே வடக்கு புது குடியிருப்பில் உள்ள முத்து மாரியம்மன் மற்றும் செல்வ விநாயகர் கோயிலில் 65 ஆம் ஆண்டு முளைக்கொட்டு உற்ஸவ விழா நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் இரவு நேரங்களில் கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று முன்தினம் நேர்த்திக்கடன் பக்தர்கள் கிராமத்தை வலம் வந்தனர். மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. நேற்று காலை மலர் அலங்காரத்தில் மூலவர் முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சக்தி கரகம் முன்னே செல்ல ஏராளமான பெண்கள் முளைப்பாரி சுமந்து காளி கோயில் ஊரணியில் கங்கை சேர்த்தனர். ஏற்பாடுகளை வடக்கு புது குடியிருப்பு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். 


* வண்ணாங்குண்டு ஊராட்சியில் உள்ள நாகநாத சமுத்திரத்தில் முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி உற்ஸவ விழா நடந்தது. காப்பு கட்டிய நாளிலிருந்து தொடர்ந்து கோலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்டவை நடந்தது. நேற்று முன்தினம் இரவு கரகம், அக்னி சட்டி, காவடி ஊர்வலம் நடந்தது. நேற்று மாலை 4:00 மணிக்கு அம்மன் கரகம் முன்னே செல்ல ஏராளமான பெண்கள் பாரியை சுமந்து ஊரணியில் கங்கை சேர்க்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மாமன்னர் மருதுபாண்டியர் இளைஞர் பேரவை மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar